வியாழன், 14 மே, 2009

அகிலத்தில் அங்க விற்பனை முகவர்

அங்கங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு,
ஆழ்குழிக்குள் ஆழ நெருப்பிட்டு,
அடையாளம் அகற்றப்பட்ட பாயிரம்,
தடை தடைத்த தரணியே,
தகத்தெடுத்து கண்டீரா?

தமிழ்,
என்இன மைந்தர்களின்,
யுகமேற்கா யுக்தியால் யுத்தம் என்ற சத்தத்தால்,
யூகிப்பிற்கே பீதியூட்டும் பீடமேற்ற,
பித்த புத்தனின் பிரம்மையான பீடத்திலே,
எத்தனின் ஏகாதிபத்திய ஏற்றமற்ற மாடத்திலே,

இந்த,
உலக உலா ஊடகம் ஊரித்த,
உறிஞ்ச உள்ளம் ஊனித்த மெளனம்,
தறைஞ்ச நெஞ்சகத்தில் விறைந்த கொடூரம்,
பறைய.உறவுகளிடம் ஊட,மறையாக என்றும்
மறையாக,உறையாமல் ஒவ்வொரு வினாடியும்,
மாறி,மாறி எங்கள் மனம் கரிக்கும்,

சினம் விரிக்கும்,சீந்தி,சீந்தி
சிந்திப்பே சிறகிழந்து சீரணிக்க சக்தியற்ற,
தாற்பாரியம்!
தரணியே நீயும் தரமேற்றாயோ?
எங்கள் ஆக்ஞைகளை உந்தன்
அகமாக ஏற்பாயோ?

தங்ககங்களில் இருந்து தாரை,தாரையாக,
தளம் தளற்றப்பட்ட தமிழனின்,
தகமையை இத்தால் உன் இதயம்,
இயங்க ஏற்பாயோ?

இதன் ஆதாரமாக,
அன்று இந்திய வார சஞ்சிகையில்,
இதழாசிரியரின் இயங்கதள நிகராசிரியரால்,
மருத்துவமனையின் மகிமை மேத்த
பிரபல்ய மருத்துவரின் ஆதார வாக்குமூலம்.
ஸ்ரீலங்காவில் இருந்தே,
தங்களின் ஆத்மார்த்த மருத்துவமனைக்கு
கண்கள் தானமாக கையகம் தந்ததில்
சிங்கள தேசமே சிகரம் சூட்டியதாக

ஆதார வைத்தியசாலையின்,
மேலான வைத்தியர் வைகை வள்ளலாக,
ஸ்ரீலங்காவை புகழ்ந்தார்,
புனைவான சேதியல்ல!
அங்க தானத்தின் அருமை,பெருமை விளக்கி
தங்கமான உள்ளம் சிங்களத்திற்கே என்று,
தகமைசாற்றி தகவலாய் தகைந்தது.

அன்று முதல் எமக்குள் உறைந்த இந்த,
தார்மீக வினாவிற்கு உடனடியாகவே உண்மையின்,
தேடலில் சில செய்திகள் ஆதாரமாக எம்மவர்
மத்தியில் ஊமையாகவே உளர்ந்தது,
ஆதாரம் இன்மையால் இது அருகற்றுப்போயினதோ?
அன்றி,இதன் சாரம் தகிக்கும் தகமையை,
வசதி கருதி மறந்து,மரத்து போகச்
செயலிழக்கவிட்டோமா?

சிங்கள தேசத்தில் இருந்து வங்காளதேசம் வரை
வகை,தொகையின்றி உடலதின் பாகங்கள்
உவகையில் அக்கரையான எத்தனை
வகை வாகைகள் சூழ்த்தான்?

எங்கள்,
தமிழீழத்தில்,
அன்றில் இருந்து இன்றுவரை
வகை,தொகையின்றி
காரணமின்றி,சந்தேகமென்ற போர்வையில்
கைதானோர், காணாமல் போனோர்
பட்டியலில்.,,,,,,,,,,,,,,
புரிகின்றாதா புவி அசைப்போரே?

பூமியில் புத்தன் போதித்த போதனையின் சாரம்.
ஆமியென்ற போர்வையில் ஸ்ரீலங்காவில்,
புத்தனின் பரிணாம,பரிமாண அவதாரம்.
கண்ட துண்டமாக அங்கம் பிளந்து அரிவாளால்,
அவர்தம் உயிர் உலர்ந்து ஊடுமுன்னே,
தாங்கும் எம் உறவின் உயிரெரிந்து,
எத்துணை வேதனையை அவர் வசம் வீச்சாக்கி
அத்தனை அவயங்களையும்,

வலிக்கும் இதயத்துடன்,
வலிமையான ஆதாரத்துடன்,
ஒலிக்கும் வேதனையின் ஓர்மத்தை,
சாறெடுத்து இன்று கோமகன் ஒருவர்.
கோர்த்தெடுத்து கோவையாக,
சான்றாக சாவிரித்த கோலமதை
ஞாலமெலாம் ஞானிக்க ஞானதான
ஞானத்தால் ஞாயிறாக்கி.,,,,,,,,.

இன்னமும்,
இந்த ஊன, ஈனர்களிற்கே உசாபோகும்,
சர்வம் இதை சலித்தே,
எங்கள் இனமதை,
ஆரியன் அழிப்பதன்,
ஓர் கல்லில் ஈர் மாங்காயென்ற,
ஓரங்கத்தை,அதன் சாரங்கத்தை,
ஆதங்கமாய் வினைப்பானா?இல்லை

அங்க,அவய சுரங்கம் அவனியிலே!
ஸ்ரீலங்காவில்தான் ,சிறப்பான கொள்வனவென
கொள்ளும் நிலை கொள்வாயா?
மேவி,
தமிழர் வதையா வாதையாக வரிப்பாயா?,
வகுப்பாயா?

ஜீவகாரூண்யம் ஜீவிக்கும் ஜீவனுள்ள உலகே!
ஜீவிதம் மரித்தபின்னே மாமிசம் புசிக்க,
விதி விதித்த வீரிய முறையே,
ஜீவத பூமியின் ஜீவிதங்களே,
ஜீவிதமாற்ற மார்க்கமின்றி
ஐம்பொறியின் கரும் பொறியில்,
ஐதடைத்து ஜடமாகும்,ஐக்கிய உறவுகளின்,,,,,,

தமிழீழத்,
தமிழின உறவுகளின் துயர் துடைக்க,
எங்கள் தடைதகர்த்து,தாயக தாகம்,
தடைக்க அரணாக நீ அறமாற்றமாட்டயோ?
எங்கள் ஐயமதை ஆதங்கமாக்கி ஓர்
தங்ககம் தமைய தார்மீக கைகொடைய்யா.
தவிக்கும் தமிழின விழி விரிய வீரியம் சுரவைய்யா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்