ஞாயிறு, 3 மே, 2009
வித்தகர் மேதினியில் ஓர் சத்தியம்.
குருதியின் சுவடுகளற்ற
குரு சேத்திரம் ஏதும் உண்டா?
பருதியில் இந்த சுருதியின் மையமே
இரத்தக் குறிதான்,
இதில் இருந்து நா(நீ)ண்ட விட்டம்,
அதனூடான ஆரை,
ஆக்கிரமிப்பின் ஆதாரம்,எல்லாமே
சுருதியாக சுவண்டிழுத்த குருதியின்
சாரத்தின் சதைப்பிண்டம்தான் இன்றாகிய உலகப் பந்தின்
உறு மையம்.
சிந்தனை சீந்தும் வரலாற்றுப் பதிவுகளும்,
கட்டியம் கூறி தரிப்பது இந்த உண்மையைத்தான்,
எந்த தேச நிர்மாணிப்புக்களும்,
உதயமான புதிய தேசங்களும்,
உறிஞ்சிக் கொண்டதெல்லாம் மானிடத்தின்
உடல்களையும்,அதன் உறுப்பினர்களையும்,
எல்லா சொந்த,பந்தங்களையும்,
ஏகமாக,தன் வாழ்வின்,அதன் வளத்தின்,
தனதான சந்ததிகளின் தனத்திற்குமாக,
இந்த இகம் இழந்தது என்னவோ?
வகை,தொகையற்ற மனித வளங்களைத்தான்,
மனித உயிர்களைத்தான்,
இவ்வளவு களைவுகளிலும்,
களை கட்டி நிற்பதுவும்,களை
சார்ந்த களஞ்சியமாய்,இன்றிந்த
உலகின் விஞ்ஞான சாம்ராட்சியம்.
ஒவ்வொரு வல்லாட்சியும்,
தன் வல்லமைக்காக வளைத்துப் போட,
வதை கொண்டதெல்லாம்,
வலிமையில்லா வகை இனங்கள்,அதன்
தரை,கடல் மார்க்க
மார்க்கங்கள் ஊடான
வல் வளைப்பால் வனைந்து,தார்மீகமற்ற
தண்டனைகளால்,தரணியில் ஆக்கி வைத்த
வகைகளின் சாராம்தான்,
இன்றுதித்த சனநாயகம்,அதனூடான
மனித உரிமைமைகள்,மனு தர்மம்,
இன்று உலகில் தன்னை வல்லரசாக்கி
வலம் வரும்
அமெரிக்கா செய்யாத
அட்டூழியமா?
குடியேறி
வந்தமர்ந்த குடி,
அன்றைய அமெரிக்காவின்,
வளமான குடியாம்
பழங்குடி செழுமையான,செவ்விந்திய இனமதை,
இல்லாதொழித்து அன்று
இகத்தில்,
அவர் பரம்பரை தவிர்த்த கோர இனவழிப்பு,
அகிலத்தில் இன்று தன்னை வல்லரசென்று,
வரம் ஏற்றும் யாகம் எலாம்,
மனித குலத்தின் மண்டையோட்டில் வலம்
வந்த பின்னான உதிப்புக்கள்,
இதில் உதிரியானது போக,
உறுதியானது நிலைகொண்டது
பலம் பெற்ற அவர்கள் வலம் கொண்டார்கள்.
இதை உளம் கொள்ள,
உறுதி வலம் கொய்ய,
ஊனமற்ற பா(தா)கை வகுத்து,
ஈனமற்ற ஈழம் காண்போம்.
எல்லாள வளம் குவிப்போம்,
சொல்லாளா தகம் தகைத்து,
வல்லாள கரம் நிறைத்து,
வரலாற்று நாயகர்களின்,
தரமேற்ற நாம் தகைவோம்.
வல்லமையாய்
ஈழ,
வாகை நாம் நூற்போம்.
கல்லறை மேனியரின் கனவுலகை,
மில்லரின் மிதமான ஆகுதி மேலொரு,
நித்திய வாழ்வரின்,நிசமான முகம் தரித்து
சத்தியமாய் ஈழம்,இந்த
சந்ததியில் நாம் சமைப்போம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
மே
(33)
- மனித நேயம் எங்கும் ஓர் மூலையில் ஓர்மமாற்றும்.
- எரிந்த நூலகமும்,எதிர்கால கல்வி தராதரமும்.
- வயல் விரிய வகிடெடுப்போம்.
- உருக்கொள்வோம் ஊரறிய வலம் வருவோம்.</
- பகையின் பாகை தறிக்க பரவலாய் எரிய.
- வல்லாதிக்க வல்லூறுகளின் வலிதாங்குமா?
- வேர் விரிய நீரூற்றுவோம்,ஊர் விரிய பார் விரிவோம்.
- சாளரங்கள் சன்னமாகவே சரமகற்றும்.
- ஈர நிலம் பற்றாது,ஊர் பார்க்க எதுவும்?.
- சபாஸ் சரியான தேர்வு.
- விஞ்சி நின்ற வீரம் இனியும் களமேகும்
- தேசம் சமைக்கும் தேவையின் யாத்திரம்
- பான் கீன் மூனின் பன்முகப் பார்வை.
- ஜீவிதம் ஜீவிக்க ஜீவ காருண்ய முகம் கொள்வோம்.
- ஆதங்கச் சூரியன் ஆரோகணமாய் ஆரோகிப்பான்
- கேணல் சூசை,அரசியல் பொறுப்பாளர் தயாமோகன்,சமகாலச் கள...
- யார் கரங்களில் இறுதிக் களம்?
- வலுவிருக்க வலுக்கொள்ளு.
- ஒப்பேற்ற ஓயுமா ஒப்பாரி??????
- ஆற்றும் துணை யாவும் புலர ஈழம் மலருமே
- அகிலத்தில் அங்க விற்பனை முகவர்
- திசையெல்லாம் தீயாய் எழு.
- ஆற்றுவதெல்லாம் இன அழிப்பே அற்றதாகுமா ஈழ விடுதலை நெ...
- TR_Song
- திரை மூடிய உரை உரத்தது.
- பிரம்ம ஞாலம் பிறக்கும் ஈழம்
- இறுதி யுத்தம்
- ஈழதேசம்.கொம் - panadesan peeddi
- உலகத் தமிழினம் யாசிக்கும் தமிழ்த் தேசியம்
- வேதினியில் வேகாத வெங்களம்
- எரியுண்ட எங்கள் ஈழ நிலவர் மேல்
- வித்தகர் மேதினியில் ஓர் சத்தியம்.
- நாய்கிருக்கும் நல்ல நீதி நமக்கில்லையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக