சனி, 30 மே, 2009
வயல் விரிய வகிடெடுப்போம்.
வஞ்சக நெஞ்சம் கொண்டான் சிங்களம்,
வாரி சுருட்டியழித்தான் எங்கள் தங்ககம்,
காஞ்சிதையாய் நாங்கள் கருக,நெஞ்சில்,
பூரிப்பில் வெற்றிப் பூவாய் அவன் மெருக.
வாரிச் சுருட்டியழித்தான் எங்கள் தங்ககம்.
தஞ்சமாக தங்கள் வலைவிரித்தான்,அங்கு
தாயும்,சேயுங்களை களைந்தான்.
தர்மத்திற்குகூட தண்ணீர் தர மறுத்தான்.
தக்க மருந்துங்கூடவே தடவ தவிர்த்தான்.
எந்தன் எந்தையரைக் கூட கரித்தான்,பாரில்
ஆரியக் கூட்டத்தால் களம் கலந்தான்.
ஐ.நா,மன்றில் நாம் அந்நியமானோம்.
ஐக்கிய ஆரங்கள் தவிர்க்க அரளியானோம்,
ஏங்கி தவிக்குதைய்யா எங்கள் உதிரம்,பாரில்
பாவியாகுதைய்யா! எங்கள் அதிரம்.தமிழ்
ஊனமாகுமா உன் சதிரம்,கூனி குறுகிப் போகுமா?,
எம் குவியம்.
எத்தனை தடைகளால் இவன் வைதாலும்,அங்கு
மெத்தனமே கடை விரித்தாலும்,அவை
அத்தனையும் விடை கடைந்து,புவி
சித்தம் கலைந்து சீறி எழுமே,பார்
வித்தகங்கள் வினைய வீரியம் பெறுமே.
இத்தனை விதைகள் அங்கு விதைத்தோம் எம்
சித்தமெல்லாம் சீந்த விதைந்தோம்.நீள,
நித்திலத்தில் நிலம் நிறைத்து,நீட்சி நிரவ,
நித்தம் தலம் நிறுவி, எங்கள், கைத்தலம் கையேற்று
வித்தக தெய்வங்களை களம் இழைப்போம்,
கல்லறை வீரம் மீதோர் ஆணை வைத்து,
வல்ல பகையின் வாகை தளம் எரித்து,
சொல்ல வல்லானின் சோகம் களைந்து,
வெல்ல வல்ல வழியாற்றி தேசம் அமைப்போம்,
ஈழ தேசமலர்வில் கனம் இணைப்போம்.
நெஞ்சில் வல்ல உறுதி வகை பொருத்தி,
வஞ்சம் தீர்த்த பகை வகை நொருக்கி,
துஞ்ச மறுக்கும் துயர் களைவோம்,
வெஞ்சமரில் வீரம் திளைத்த,தீர
ஈழ தாகம் அதை தினைவெடுப்போம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
மே
(33)
- மனித நேயம் எங்கும் ஓர் மூலையில் ஓர்மமாற்றும்.
- எரிந்த நூலகமும்,எதிர்கால கல்வி தராதரமும்.
- வயல் விரிய வகிடெடுப்போம்.
- உருக்கொள்வோம் ஊரறிய வலம் வருவோம்.</
- பகையின் பாகை தறிக்க பரவலாய் எரிய.
- வல்லாதிக்க வல்லூறுகளின் வலிதாங்குமா?
- வேர் விரிய நீரூற்றுவோம்,ஊர் விரிய பார் விரிவோம்.
- சாளரங்கள் சன்னமாகவே சரமகற்றும்.
- ஈர நிலம் பற்றாது,ஊர் பார்க்க எதுவும்?.
- சபாஸ் சரியான தேர்வு.
- விஞ்சி நின்ற வீரம் இனியும் களமேகும்
- தேசம் சமைக்கும் தேவையின் யாத்திரம்
- பான் கீன் மூனின் பன்முகப் பார்வை.
- ஜீவிதம் ஜீவிக்க ஜீவ காருண்ய முகம் கொள்வோம்.
- ஆதங்கச் சூரியன் ஆரோகணமாய் ஆரோகிப்பான்
- கேணல் சூசை,அரசியல் பொறுப்பாளர் தயாமோகன்,சமகாலச் கள...
- யார் கரங்களில் இறுதிக் களம்?
- வலுவிருக்க வலுக்கொள்ளு.
- ஒப்பேற்ற ஓயுமா ஒப்பாரி??????
- ஆற்றும் துணை யாவும் புலர ஈழம் மலருமே
- அகிலத்தில் அங்க விற்பனை முகவர்
- திசையெல்லாம் தீயாய் எழு.
- ஆற்றுவதெல்லாம் இன அழிப்பே அற்றதாகுமா ஈழ விடுதலை நெ...
- TR_Song
- திரை மூடிய உரை உரத்தது.
- பிரம்ம ஞாலம் பிறக்கும் ஈழம்
- இறுதி யுத்தம்
- ஈழதேசம்.கொம் - panadesan peeddi
- உலகத் தமிழினம் யாசிக்கும் தமிழ்த் தேசியம்
- வேதினியில் வேகாத வெங்களம்
- எரியுண்ட எங்கள் ஈழ நிலவர் மேல்
- வித்தகர் மேதினியில் ஓர் சத்தியம்.
- நாய்கிருக்கும் நல்ல நீதி நமக்கில்லையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக