திங்கள், 13 ஜூலை, 2009

காதகத்தை கலைக்க கல்வியை தொழு.


விக்கிரகம் தான் விதைப்பார்-பார்
சந்தியெல்லாம் சாகசமாய் தான் துதிப்பார்,
விகல்பங்கள் மனமதை கவ்வ-சிந்தனைகள்
வஞ்சனையை மொய்ய,வேடிக்கை மனிதர் இவர்

விதியென்பார் விலக்க துதியென்பார்-தன்
கதியாக்க காத்திரமாய் கலம் விரிப்பார்-சாமி
பொறுக்காது என கூற்றி கண்டதெல்லாம் படைப்பார்,ஏழை
பசியென்று ஏகும் போது எறிந்து அவரை அலைப்பார்-
வித்தக மனிதர் அவர்.

செத்திடும் போதினிலே பத்திடும் பதம் பதிப்பார்,
வித்திடும் வினையாற்ற விறையாத சிந்தனை சித்தர்
இவர்,
கத்திடும் காதகங்கள் காலமொள்ளலில் களவாடப்படும்,
சித்தகம் சிரித்திட சிங்கார சிலம்பிசைப்பார்.
ஐயனே,அப்பன் என்பார்
ஆசையெல்லாம் அழித்ததாய் அளப்பார்-அத்தனையும்
வேசமென
வேயார் கல்வி கலவாத,வஞ்சனையற்ற உளம்.
இவர் வாசனையை வேதம் என்பார்-சொன்னாலும் செய்யும்
சேவக சேந்தல் இவர்

வீட்டில் குழந்தை செல்வங்களிற்கு
சுகயீனமென்றாலோ?
பள்ளிக் கட்டணம் என்றாலோ
சதமேதும் சலிக்கார்,இறை பக்தியின் ஈற்றிவர்
யாரை தோழனென்று தொழுகின்றார்?

பாவம் கல்வியை கலவ விடாத கந்தகன் இவன்
சேமம் சேர்த்திட இவன் உழைப்பெல்லாம் உறிஞ்சும்
மார்க்கம் அறியா மார்க்கண்டு.
இந்த விக்கிரகத்தையும் இயல்பாக தொழுகின்றான்.
விக்கிரகத்தை விலை பேசும் விதி என்று மாறும்.
சொல்கிரகத்து சோழரவர்க்கு,
காதகத்தை கலைக்க கல்வியை தொழு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்