சனி, 18 ஜூலை, 2009

நித்தம் நீதி நீர்க்கும் நிணையான நிணையம்.


செங்குருதி செம்மண்ணில் செங்கதிர் செழிக்க
தமிழர் குருதிதான் தாயத்து தகைந்தது.
பைந்தமிழ் ஈழ நிலத்து பாகம்
பாவம் என்ன செய்தது?

ஒரு பிடி மண்ணெடுத்து முகர அதில் பிண நாத்தம்
பிளிறவில்லை மாறாக,
பிரதியுபகாரம் இரந்தது,
ஏ!
இழி நிலை ஏற்கும் தமிழ
உன் பிறப்பின் பிரம்மம் பிறழ்ந்தது ஏன்?
பிடி மண்ணில் பிறவிக்கடன் ஆற்றா உன் பிறவியின்
பிரக்ஞையை பித்து பிரவாகிக்க
பீடை களம் கவ்வ நீ கவ்விய காதகம் யாது?

பிறப்பில் ஓர் அர்த்தம் அரவணைக்க,உன்
உறப்பில் நீ ஆய்ந்ததை விட ஆக்கிய யாக்கம் யாது?
விறப்பேற்றும் உன் விந்தகற்றல்களை தவிர,உன்
குறள்,குரல் கூற்றிய கூற்றம் கூறுவாயா?

நேற்று நெற்றிட்ட உன் நெற்றல்கள் யாவும்
தேற்றல் துலைந்தது எதனால்?தோற்று இன்று
தோரணம் தீற்றும் வாரணம் வகுத்தாயா?
ஆரணம் அகற்றிய ஆக்கம் அகித்தாயா?
வீரணம்,
வீரங்கள், தூரங்கள்-
துக்கிய தொலைவு தோன்ற!

ஆற்று என்று உன் ஆற்றல்கள் நோற்றது என்ன?
காற்று அன்று கலந்து இன்று கரமகற்றிய காரணங்கள்,
வீற்றிருக்கும் விதங்கள் விரைத்தாயா?பூற்று புறம் பூக்கும்
மாற்றல்கள் மரபு அறிவாயா?நேற்றுவரை களம் தவிர்த்த
பகை இன்று பாகம் பதித்ததன் பாதம் பார்த்தாயா?

எதிரியின் தோட்டமென்றாலும் வாசம் இருந்தால் எந்த
வையகமும் வரவேற்கும்-ஆனால்
எங்கள் எதிரியின் தோட்டத்தில்-
எந்த வாசம் வரைவாகின்றது?
எந்த வையகம் வரவு ஏற்றும்?
சிந்த இகத்தில் இடுகாடு தினம்
இயற்றும் இந்த இரவர்களை
குந்த ஒரு குடில்கூட குவிய கரம் காட்டாமல்-அனுதினமும்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்