ஞாயிறு, 12 ஜூலை, 2009

யார் யதிப்பார் யதியாசனம்?


சீரெடுக்கும் தேர் இழந்தோம்,
சீற்றமெல்லாம் உடன் இழந்தோம்,
மாற்று வழி மாய்ப்பிழந்து
வேற்று வழி தேற்றுகின்றோம்.

பாரெடுத்த ஆர்ப்புலத்தால்
அத்தனையும் நாம் இழந்தோம்
ஆரெடுத்து ஆற்றுவார்கள் அற்ற துணை
போற்றுவார்கள்.
ஊரெடுத்த ஊழ்வினையை
உற்று முதல் ஊற்றெடுத்து,தளையிட
தக்க துணை தேடுகின்றோம்.

நாளெடுத்த நாட்களெல்லாம்
நாமடைந்த துயரமாகும்,பெரும் அவலமாகும்,
வாளெடுத்த வன்னி மண்ணில்
பாளெடுத்து போயினதோ?
சீளகற்ற சிறப்பமைக்க சிந்திய எங்கள்
குருதி குவிய
தாளடைத்து ஆவதென்ன?
தக்க போர் இழைத்திடாமல்.

யாளெடுத்த யாக்கம் யாவும்
யாசகங்கள் யதிந்த்ததாலே
மாளகற்றி மகோன்னதங்கள் மைக்க நாங்கள்
மகிழ்ந்திருந்தோம்.
ஊளடைத்து உடனிருந்து,
உற்ற வழி விதித்து நின்று
ஊடி நின்ற வேதம் இங்கு
வாடி வதை யாக்கின்றதே.
வையகத்தின் வஞ்சனையால்,

தோள் கொடுப்பான் தோளனென்று,
தோழமையால் தோதி நின்றோம்,
பாழடைத்த துரோகியவன் பார்த்திபனின்
பாத்திரத்தை மோதியவன் உடைக்கவில்லை,
காட்டி கனல்களை காத்திரமாய் கலைத்தினால்
மீட்டி நின்ற வீரங்களை விகலமாய் விலக்க விதிந்தோம்.
யார் யதிப்பார் யதியாசனம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்