ஞாயிறு, 26 ஜூலை, 2009

புசிக்க புலம் புவித்தல் பூர்வாங்க புலனாகும்.


நீதி தலை கவுழும்
தர்மம் தரம் தறையும்
கர்மங்கள் கனல் கக்கும்
வர்மங்கள் வயல் தேடும்,

பாதி வழி பதைந்திருக்கும்
பார்வையெல்லாம் பதை பதைக்கும்
ஓதியவை ஒலி இழக்கும்
மீதியவை மடி மடிக்கும்
சாதியவை சனம் சாய்க்கும்
போதி மர போகம் அது.போலியையே
இனி சுமக்கும்.

உலகப் பிச்சை ஏந்த
தமிழினத்தை கை காட்டும்,
உசாத்து துணையிருக்க
உற்ற உறவு விரிக்கும்.
பிசாத்து பிறவிகளய்யா,பிரம்மம் பீத்தும்.
பரமேத்திகளின் பிரச்சாரம் பார் ஏந்தும்-அதன்
வியாபாரத்திற்கான வித்தக இடமல்லவா.-ஆயினும்
விமோசனம் விக்கிக்க விதங்களெல்லாம் வினைமாற்றும்.

ஏமாற்றத்தை ஏற்றுவதற்கு ஏகமெல்லாம் மௌனம்,
தான் மாற்றும் தரமறைக்க தான் தோன்றும் தர்மம்,
ஊன் மாற்றம் உடனிருக்கா உவகை என்றும் இங்கிருக்கா
பேன் பார்க்கும் குறவர்களாய் குவலம் கூட குற்றமேந்தும்,
யாமங்கு யாபேர்க்கும் யம கிங்கிதர்களாய் உருத்தெரிந்த
பாமாங்கு பரிவெடுக்கும் பறித்தெடுக்க பாதம் பரவும்.

உலக ஒழுக்கென்பார் உற்றதென்ன உறுப்பமைத்தார்,
பலவ எதை அளித்தார் பக்குவம் தான் தரித்தார்,
மலங்க மருவழித்த மடம் மனைய மகிழ்வழித்தார்
உலங்கும் எங்களது ஊனழிக்க உடனிருந்தார்.

பசிக்க உணவழித்தல் பவ்வியம் ஆகாது,
புசிக்க புலம் புவித்தல் பூர்வாங்க புலனாகும்,
அவிக்க ஆர்த்தெடுத்தால் ஆரம் செழியாது,
செழிக்க செருக்கெடுக்க சேந்தனே செரிவாவான்,
பழிக்கும் பதம் அழிக்க பக்குவம் பதமேந்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்