சனி, 25 ஜூலை, 2009

அனலெடுக்கும் ஆய்வு உளவு செரிக்கும்..


நெருப்பில் பூத்த விடுதலை பூ
விருப்பில் விழைத்த வைராக்கியம்
உருப்பில் உறைந்த உயர்வு
கருகிப் போகுமா?காலம் இதை ஏற்குமா?
கரிகால காலம் அது களையிழந்து காயுமா?
காத்திரம் கால விழைச்சலை நுகருமா?

பொறுப்பில் பொதிந்த போர் கலயம்
உறுப்பில் உறைந்த உத்வேகம்
கனதியாய் கனத்த கட்டுமானம்
வினைத் திறனின் விவேகம்,வியப்பை
விரித்த வீரியம்,உருகிப் போகுமா?
கரிய கனதியிழக்குமா?---காலம்
கதைகள் கட்டுமா?காத்திரம் களைவை நீர்க்குமா?

பார்ப்பனரின் பங்குகள்,எங்கள்
ஊர்ப்பனவை உயிர்க்குமா?
வேரடி மண்ணை வெயிலாய் வெதுக்குமா?
மாரடிக்காமல் மடிந்த மனங்கள் மலர்க்குமா?
போர் போதிமரம் பொலியுமா?ஆரடித்தாலும்
அங்கமே பிழந்தாலும் ஆயுதம் ஏந்தாமல்
எங்கள் ஆயிலியம் அணையாது.

சுகானுபவம்,
சுழைக்கும் சூத்திரர் எத்தனை
அவலத்தை இழைத்தாலும் அங்கமது,
ஆரூடம் யாப்பது என்னவோ ஈழ மண்ணின்
உயிர்ப்பே தவிர வேறெது?
எங்கள் வேதம் வினைக்கும்.
இடர்பாடுகள்,இன்னல்கள்,இகமேற்காத இழப்புக்கள்,
அத்தனையையும் ஆத்மார்த்தமாய் அரவணைப்பது
ஆதங்கத்தின் ஆணை.
இதுவரை ஈழத்திற்காய் இன்னுயிர் ஈந்த
இளவல்களின் இலட்சியம்,

விழ,விழ முளைப்பதுதான் எங்கள் முற்றத்து மல்லிகையின்
மானாம்சம்,
தொழ,தொழ அழிப்பது சிங்களனின் சீலாக்கியம்,
அழ,அழ ஆக்குவதுதான் ஆற்றல்-இல்லையேல்
அனலெடுத்து அழிவதில்தான் ஆக்கத்தின் தேற்றும்

வினைத் திறனற்றுப் போனால்-பிறவிப் பயன்
இற்றுப் போகும்,உனைத் திறன் ஊட்டுவதே
உயிர்ப்பின் உரம்,
மறுக்கின்!
மயிர்கூட உன் மையல் அகற்றும்,தெரிவு,
தோற்றத்தின் தோகையை தோழமையாய்,
தொடட்டும்,
விழுப்புண் அற்ற எதுவும்
விதையல் விதைக்காது,
விதைக்காத ,வித்தகமல்ல இது
விற்பனம் வியாசிக்கும் விபரம்.
வியாபாரம் அல்ல,விடுதலையின் சூத்திரம்.

அற்றதை ஆக்குவதில் ஆக்கிரமிப்பு அகலும்.
கொற்றவனின் கோகுலத்தில் கொண்டதெல்லாம் முளைக்கும்.
பற்றெறிந்த பாதை மொள்ள கற்றறிவு கலக்கும்.
பற்றி எரிந்த பாதைகள் பாகையாய் பகரும்.
முற்றிய பகை எரியும்,முகாந்திரம் முளை கொள்ளும்.

அனலெடுக்கும் ஆய்வு உளவு செரிக்கும்.
கனலெடுக்க காலம் கச்சிதம் காக்கும்-மூசும்
முரசொலிக்க எத்தாசையும் ஒத்திசைவை ஓர்க்கும்-நீச
குரலழிக்கும் கூத்திரனின் குரலை ஓழித்து-எங்கள்
குவியத்தை வியப்ப வீத உலாவர விதியதை வினைக்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்