ஞாயிறு, 5 ஜூலை, 2009

பிரம்மப் பிரகடனத்தின் பீடங்கள் காத்திர கரும்புலிகள்.


நரம்புகள் மட்டுமே நார்த்திருக்கும்,
வரம்புகளின் வகுப்பிருக்கும்,எதிரி
பரம்பல்களின் பரப்பினிலே பகுப்பிருக்கும்,
கரம்பல்களை எல்லாம் கருத்திருக்கும் கரும்புலிகளின்
கனவினில் எல்லாம் காத்திரமான கலமிருக்கும்.

பலவீனமான இனத்தின் பலம் என்றான் பகலனவன்,
அலகாக இவர்களை ஆர்த்து அகலவைத்தான்,
விலகாத பகையின் வீம்புகளை வித்தியாசமாக விதியவைக்க,
புலனுக்கும் புலவாத பூடகமாய்,கரும்புலிகளை புவியில் புனைந்தே.
விலங்கான வீரமதை விலவ வைத்தான்.

கரும்புலிகள்,
கர்மமே கண்ணாண காரியர்கள்,
காற்றினிலும் கால் பதிக்கும் காத்திரர்கள்,
வீற்றிருக்கும் விகை விதர்க்கா வீரியர்கள்,
போற்றி,
தலைவனின் போர்த்திறனை போதிக்கும் போகியவர்கள்,
மாற்றி மதி மாற்றி மனம் மாற்றா மதியரவர்கள்,
ஏற்றி விடுதலை வீச்சை விதைத்து வினையாற்றியர்கள்,

வார்த்தைகளின் வசப்படுதலிற்கு வார்ப்பமைக்கா வகையர்கள்,
போர்ப்புலத்தின் போக்கதை உயிர் போக்கியும் போற்றியர்கள்,
கீர்த்தனம் கிழக்கிருக்க கீழ் நெல்லியான கீர்த்தியர்கள்,
வேர்ப்புலத்தின் வேதங்களை வேர்க்க வைக்கா வேதினியர்கள்.
மார்ப்புலத்தின் மையமெல்லாம் மைத்திருக்கும் மௌனியர்கள்.

உறங்கா உத்தமர்கள் உவகையாய் உறுப்பமைத்து,
கிறங்கா கிரகிப்பை கிரமமாக கீறியவர்கள்,
வணங்கா வலிமையின் வைடூரியர்கள்,தடமாக்கும்
தடை நீக்கிகள்.
தமிழிற்க்காய்,
தமிழீழத்திற்காய்,தகவமைத்த
தலைவனின் தர்ம யுத்தத்தை யுகம் யூத்த யுத்தகர்கள்.

உந்தன் உதிரங்கள் உரமேற்ற,
நிந்தன் நிமிரங்கள் நிதமேற்ற,
வந்தன வடங்கள் வாகையேற்ற,
பந்தனம் பற்றிய பரமர்களே,உங்கள் ஆவியின் மோலொரு
ஆளுமை ஆற்றுவோம்,

உயிர் நீக்க நாங்கள் உயிர் வாழும் உதிர்வுகள் எங்கள் அகமாகும்,
பயிர் ஆக்க பாக்கள் பதமாகாது,ஆயினும்
பத்மாசன பரிந்தெடுப்பால் பகை பாரித்த உங்கள்
சிம்மாசனம் மோலொரு சீற்றம் சிறப்பி,

கங்குலாகும் இந்த கனல்களை காத்து,நீக்கம்
நோங்கும் நுதல்களை நூர்க்க நாம் கடை வரிக்கும்,
தாங்குதலே இந்த தாக்கங்கள்,வீங்காத விதர்களை
ஓங்கி ஓர்மம் ஒற்ற ஒரு ஔவியம்.
பாங்கு இதுவும் பாத்திரமான காத்திரம்,

பூக்க தமிழ் ஆக்க நீக்கமற நீவிர் நிலைத்திருக்கும்,
நிமிர்வுகளை நித்தம் எம் தாக்கம் ஒற்றி,
உயிர்த்தெழும் விற்பனங்களை வினையாற்றி
தரித்திருப்போம் தக்கோனின் தாகங்களை
தரணியாக்க.முத்தான எங்கள் முதிசங்களே,


அவனியில் எங்கள் தவனங்களின் தாக்கம்,
அற்பனிற்கு அதில் ஓர் அற்ப ஆயிலியம்,
பவனி நின்ற பாதங்களை பனித்ததாக பார்ப்பனிக்கும்,
தவனிக்கும் ஓர் தக்க ஆர்க்கம்,
இருக்கட்டும்,
இகம் இழக்க
உற்பவத்தின் ஊக்கம் உருத்தெடுக்கும்,
உவப்புக்கள் ஊனமில்லாத ஊற்றுக்கள்,

காலக் கணிப்புக்ளுடன் களம் காக்கும்,
ஞாலத் திருநாளிற்கு நாள் குறிக்கும் நர்த்தனங்களை
நாளை எம் ஞானிஞர்கள் ஞனித்திருக்கும்,
ஞாற்புக்கள்
வேளை வேற்கும் வேதியங்கள்
உங்களின் வேர் தழுவி.

வேங்கைகளே!
வேதினியில் வேதம் வேர்க்கா வெங்களங்களே,
பங்கையங்கள் பதித்து பாங்காக புலம் புரித்து,எங்கள்
செங்கை ஆழியர்கள் உங்கள் ஆகுதியை ஆரம் தரித்து,
சங்கை ஊதும் சாதகம் நாளை சத்தியமாய் சதுரங்கம் சார்க்கும்.

உங்கள் ஆத்ம தாகம் ஆதங்கிக்க,
சொல்வளமாற்ற சோதியர்களே,
செயல் வளத்தின் செவிலியர்களே,
அங்கையர்களே ஆர்த்த ஆத்மர்களே,
உங்களகங்கள் உவகையாக உருக்கொள்ளும்,
தங்களகங்கள் தானை தகமமைக்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்