வெள்ளி, 3 ஜூலை, 2009

மூலிகை முரசெல்லாம் முத்தாக முகம் முகைக்க.


காலத்தின் கோலத்தில் கற்றவைகளை கரம் காத்து,
ஞாலத்தின் ஞான்றுகளை ஞாயமாய் ஞானியெடு,
சீலத்தில் சிறகு சீண்ட சிந்தியவைகளை சிறையகற்று,ஈழ
பாலத்தின் ஔவ்வியாமாய் பாரெங்கும் பங்காற்று.

அண்டத்தின் அகத்தில் ஆயிரம் அதிர்விருக்கும்.
ஆனாலும் அங்கெல்லாம் அறிவின் தெளிவிருக்கும்,
கண்டத்தின் காத்திரமும் காரியத்தின் சூத்திரமும்,
திண்டாடும் திகதி திரைத்து வண்டாடும் வாழ்வு வகுக்கும்,
உண்டானதை உரமுரத்து உறுதியான உகப்பு உரைக்கும்.

மாற்றத்தின் தேற்றங்களே மங்களமான மகத்துவம்,இதில்
மாற்றமில்லா மரபுகளே மனுக்குலத்தின் மறைப்புலம்,
போற்றாத மாற்றம் பொறுப்பற்ற உறுப்பு உலைக்கும்,
ஊற்றாக உலகேற்றும் உவப்பே உளப்பு உழைக்கும்.

தீற்றாத திறனெதுவும் திக்கெங்கும் திகைக்காது,
சீற்றாக சிரமசைக்கில் சிறப்பங்கே சீவிக்காது,
ஈற்றாக இழைந்திருந்து இசைவாக இலங்கிடும்,
கூற்றாக குலமிழைத்து குவளமாய் குலவிடு..

விதைப்புக்கள் எதுவுமே விரைவாக விழையாது,
பதைப்புக்கள் என்றுமே பாங்காக பரவாது,
நுகைப்புக்கள் நுதம் நுளைக்க நுண்மையாய் நூலிடு,
நகைப்புக்கள் நலிவிழந்து நாளை உன் வாசல் வருடும்.

நுண்ணறிவின் நுதமெல்லாம் நூர்க்கு முன்னே நுதம் இழக்கும்,
பண்ணறிவின் பார்வையால் பாகமாய் பார் விளைக்கும்,
விண்ணேறி விதம் விதைக்க வீரியங்கள் விண்ட விகாரம்,
மண்ணேறி மனிதம் இங்கே மகத்தானதாய் மார் தட்டும்.

தட்டிக்கொடுக்கும் தர்மப் பண்பு தமிழனிலும் தான் இல்லை,
மட்டம் மாட்டி மனமரிக்கும் மாண்புகள்தான் மனித எல்லை,
விட்டுக்கொடுக்கா விதமாற்றும் வீரியமே வில்லை விதிர்க்கும்,
எட்டியபின் ஏணியேற ஏகமே ஏறிழைக்கும்,எட்டினால்,
முட்டினால் முகர்ந்து மூத்து முகமெல்லாம் மூப்பிழைக்கும்.

தப்பு இவர் பக்கமில்லை தாளம் போடும் தாக் கற்றவர்கள்
அப்பு என்றால் என்னவென்று ஆழம் ஆய்க்கா ஆல் அவர்கள்,
மப்பு என்றால் மாயாமல் மகத்தும் மார்க்கம் மாயப் புலங்கள்,
உப்பு உண்டாக்கும் உரிமம் உய்க்கா உறவின் உயர்வு உலங்கல்.
செப்புகின்ற வார்த்தைகள்தான் சேவிக்கின்ற சேய்ப் புலங்கள்,

குற்றம் கூறி சுற்றம் குலைக்கில் சூரத்தின் சுழற்சிகள்
மற்றவன் மார்பில் மருவி முதுகில் குத்தும் குளிர்ச்சிகள்,
அற்றவன் ஆக்குவதில் ஆர்ப்பெழுதும் ஆராய்ச்சிகள்,எம்
முற்றம் முகிழ முகிழ்வெழுத முகமன் முகையா முண்டர்கள்.

உய்த்து உணரா ஊனர்கள் மாற்றாது என்றுமே மாற்றங்கள்,
பொய்த்து போகம் போற்றும் போக்கர்கள், நீக்கர்கள்
ஆய்த்து அகம் அகற்றி மேயும் மேதினியர்கள்,மேனர்கள்,
மொய்த்து ஈழ மோகனத்தை அருவழிக்கும் ஆவியர்கள்.

ஆயின்,
நீ இதையெல்லாம் இருளேற்றி,
விடிவெள்ளி விண்ணேற வசீகரிக்கும் வாழ்வியக்க
சீய்த்து சிரைத்து சீட்டியதை சிறப்பிலக்க,
சீலம் சிரிக்க சிறம் சிந்து.
மூலம்,
முகைய முடிவில்லா முறம் மூர்க்க,
மாற்றத்தின் மாற்றத்தில் மணி மகுடம் மனையேந்தும்.

சீவியர்களின் சிலம்பெடுத்து சிரமமாக சிறப்பிடு
ஓவியமாய் ஒலியெடுத்து ஓங்கார ஒப்பேற்ற,
காவிய காரியர்களின் ஆவியதில் அரங்கேற்ற,அவர்
மூலிகை முரசெல்லாம் முத்தாக முகம் முகைக்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்