செவ்வாய், 7 ஜூலை, 2009

கருவாகும் கலங்கள் கயல் மூடா.


பயங்கரவாதத்தை பற்றென பற்றும் பயங்கரவாதத்தை,
பாடாய் படையேற்றவே நாம் பற்றுக் கொண்டோம்,
ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தை முதல் முன்றாக்கி
பிரபா பிரித்தெடுத்தது பிரம்ம அவதாரம்,

அன்பாக,ஆச்சாரியமாக,அகவை ஓங்க ஒற்றி
தென்பாக தேற்ற போராட்டத்தை,
வன்பாக,வலிமையாக வற்றவைக்க வகுத்த
உன்னான உயிர் பறிப்பில் உகன்றதே உதிர அதிரம்.,

அன்று1956ல் அகிம்சையில் ஆரம்பித்த
ஆர்ப்பாட்டமற்ற அரணை,
பட்டவர்த்தனமாக பலப்பி
எங்கள் உதிரத்தை உறிஞ்ச ஆகுதியான முதல் தமிழ்
குருதியின் முதல் துளி,அதன் கூர்ப்புக் குழி,
அரச பயங்கரவாதம்.

யாரால்?
ஏன்?
எதற்காக அத்துணை அரக்கத்தனம்,
ஆடைவிரிக்க அகம் ஆர்த்தது?.
காலி முகத்திடலில் மூண்டு மூர்க்கம் மூட்டியது,

தமிழனா?
ஆரியன் அவன் சிங்களவன்,
பயங்கரவாதம் என வாதம் எய்தும் சிங்கள இனமே!
நிந்தனையை,
உந்தன் வஞ்சனையை சிரசாற்ற
விந்ததனை கொஞ்சம் விலக்கி விதர்த்து,
வரலாற்றை கொஞ்சம் வாஞ்சையாய் வருடிப்பார்,

ஆழ விதை எறிந்த அந்த அடையாளம் அருவமாக
அல்ல,
ஆதாரமாக உன் முற்றத்தில் முகம் நோற்கும்,
வரலாற்றை வசதி கருதி வைப்பகம் மாற்றிய உன் முதுகு தெரியும்,
ஏமாற்ற நீ மாற்றாய,
நாட்டிய நஞ்சுகள் உன் நாதம் நாற்கும்.

மாள,
தமிழன் மாள,
ஆள நீ ஆள
நூதித்த உந்தன் நூற்றல்கள் எல்லாம் உன் நுதத்தில்
எச்சில் உமிழும். உன் ஓரங்கம் ஓற்கும் ஒத்தடம் உன்
வீச்சில் அதில் நீ தரித்த பாச்சலில் பரவும் பவ்வியம் பகற்கும்.

ஆண்டாண்டாய் ஆண்ட எங்கள் அடையாளம்,நாம்
மீண்டாள முடியாத உன் மிதவாதம்,வேண்டாத விச
சண்டாளனுடன் யதித்த அந்த யாத்தம் யதியும்,மூண்டாள
வீண்டாள அதற்கு நீ நீட்சித்த நீட்சிகள் நீர்க்கும் நியம் நெரிக்கும்.

1977-1983,
இனவழிப்பில் நீ நீட்சித்த நீர்க்காத நீட்சியின் அடையாளம்,
எங்கள் ஆர்ப்புலத்திற்கு நீ மூட்டிய நெருப்பு,
எங்கள் விடுதலை நெருப்பு,
இதற்கு நெய் முதற்கொண்டு ஆன ஆயிலியம் அத்தனையையும்
ஊதி,ஊதி நீதான் வளர்த்தாய் அதனால் நீயே எல்லாவற்றிற்கும் பொறுப்பு.

நாம் எந்த ஆயுதத்தை ஏந்தவேண்டும் என்று நீயே எங்களை
நிர்ப்பந்தித்தாய்,.
நீ உண்மையில் ஓர் புத்தமத புத்தி ஜீவி ஆயின்,
போர்ப் புலம் பூண்டிருக்கமாட்டாய்.
இன்று இலங்காபுரி,இலங்கும் ஓர்
ஓர் இலங்கும் ஓர் இயங்குபுரியாக யுகம் யூத்திருக்கும்,மாறாக
மண்டுப்புத்தியின் மையத்தால் மயான பூமியாக்கிய பெரும் பொறுப்பு,
பேரினவாத சிங்களத்தின் ஓங்காளமாக ஒப்பேறியுள்ளது.

ஒவ்வோர் தாக்கத்திற்கும் மறுதாக்கம் உண்டு.
பௌதீகம் பகரும் பண்பது.
மௌவ்வும் போதெல்லாம் மௌனித்தாயே!
அதுதான் அது,
சமாதானம் என்றாய் சாதகமாய் எமைச் சரிக்க சதுரங்கம் சாய்ந்தாய்.
மா தனம் இன்று மரணகுழியானது உன் மாண்பற்ற பொறுப்பற்ற போக்கிரித்தனத்தால்,
தானங்கள்,எங்கள் அவதானங்கள் எல்லாம் எரித்தாய்,
ஒன்றும் உன் வைராக்கியத்தால் அல்ல பிச்சை பெற்ற போர்த்தளபாடங்களும்,இராணுவ பொறிமுறை முதல் ஆசிகளும்,அனுசரணைகளும்,
அப்போதும் கூட உன்னால் வெல்லமுடியவில்லை,
வேறு வழியது,மாற்றுவழியென்று,
5.2009ல்
கொட்டினாயே வெள்ளை பொஸ்பரசு குண்டு அங்குதான் உன்
ஆக்கிரமிப்பின் வன்மம் வாகையானது,அஃதின்றேல் இன்று உன்கதி?
அதோகதிதான்,

அத்துடன் அகன்றாயா?
இல்லையே எல்லயற்று எங்கள் இனத்தை ஆகுதியாக்கி,
அல்ல,
படுகாயப்படுத்தி,
மருந்தகற்றி,
உணவகற்றி,
ஆதார நீராகரம் கூட அகற்றி,
நீ செய்த அட்டூழியம் இந்த அகிலமே அறிந்ததில்லை.
வைகாசி 2009
ஈழத்தமிழர் வாழ்வில் ஊனம் ஊற்றிய,ஊறிய
நெஞ்சகத்தை விட்டு இனி எக்காலமும் ஆறாத வடுக்கள்
விதைத்த விறுமம் வீட்டிய நாட்கள்.
1983 ஆடி இனவழிப்பை நையாண்ட்டித்த உனதான நன்நாள்,
ஆனால் எமக்கோ?????

ஆயினும் விழ,விழ எழும் விழுது வேரோடு எழும்,
கடந்த காலங்களை கண்ணொற்றி பார்,
அது பதித்த பாதங்கள் தெரியும்.
பலம் பதற பாதை பதறும்,
வலம் வாதிக்கும் பகை புரிவோம்,ஆயினும்
பார்த்திபனின் பலமும் பகற்போம்.

உன் வெற்றியின் ஆதாரம் ஒன்றும் உன் அப்பன் முதுசமாக உன் முதுகு ஏற்றவில்லை,
இந்தியாவோ,அன்றி சீனவோ,பாகிஸ்தானோ,மேலும்
மேற்கத்திய நாடோ,
உன் நாவறட்சிக்கு நீர் ஊற்றவில்லை,
சோழியன் குடுமி சும்மா ஆடாதாம்,
அதுதான்,
வெற்றிக்களிப்பில் உன் வேகம் தணி,
உனக்கு உதவியவன் உற்றுக் கேட்கும்
உதாரங்களை உறுப்பமைக்கும் போது நீ
உறுமக்கூட முடியாது உன் நாக்கும் போக்கும்,
தாக்கும் தாக்கம் தாங்கா,
வறளும்,வற்றும் கற்றதெல்லாம் கசக்கும்,

ஒப்புவமை இல்லா ஒர் தலைவன் ஒற்றும் வரை.
அப்போது தெறிக்கும் பார் இந்த
பாரில் எம் பார்தீபனின் தொலை நோக்கு.

சும்மா,சுகமா? யகம் யாக்கும் யாப்பல்ல அது
யாசகம்.
வெறும் கை முழம் போடாது,
புரிவாய்,இல்லை
நீ புதைவாய்.
அற்றதானதாக நீ ஆற்றும் முற்றுப்புள்ளி, பள்ளி பாட, உன் வீட்டு
முற்றத்தில் முளை தள்ளும் முணு முணுப்பு,
வேராற்றி வெகுகாலமாகி விடும்.
களத்தில் நீ களைந்ததாக கற்பிதம் கறக்கும் சுற்றறிக்கை,
சுட்டியதெல்லாம்,
உன் சமாந்திரபாதையில் சதுரங்கம் சாற்றும்.
சாதகமாக,

பொய்யில்லை போதை நெளிய உன் அருகாமையில்
பொய்யாமை பூச்சூட பொய்யாத பொற்பாதம்.
தமிழின் முச்சூடும் முகம் முகர முத்தான,
வித்தான விதை நிலத்து காலக் கதிர்கள்.

காலம் கை கலப்பை கலப்பதில்லை,
கலந்த கைகலப்பில் கறப்பதும் இல்லை,
காத்திரர்களே கதிரறுப்பர் கால நியதியிது,
சூத்திரங்களே சுழலமைக்கும் சூழலது,

வையப்பரப்பில் வைகுந்தம் வாய்க்காது,ஆனால் எங்கள்
வயல்பரப்பில் வைகுந்தனே வளமேற்றுவான்,இது
வகுக்கப்பட்ட வாசலகம்,பையைப் பைய பகுப்பேந்தும்
அந்த கையகத்தை எந்த காலனும் கருக்கொள்ளான்,
மருகறியாத மாதவன் அவன் அவன் பிரம்மங்கள் பீடை ஏற்றா,

இருளகற்றும் வேளையது,வெகுகாலம்
உருவகற்றி உவக்காது.
மெருகேற்றும் மேதினிக்கான
பருவக் காற்றது,கருவகற்றும் உன் கர்வங்களெல்லாம்
இருவேறு பந்தமென்று பாந்தம் பந்த
இருளகற்றும்.
இலங்கும் எங்கள் இயங்கல்கள் உன் இதயமகற்றும்
உதயம் உறுக்கும்.

கருவாகும் கலங்கள் கயல் மூடா.
அரச பயங்கரவாதத்தை வதை கொள்ளாமல்,
ஆம்.
நாம்,
அரச பயங்கரவாதத்தை அடியோடொழிக்கவே,
ஆயுதம் ஏந்தினோம் என்ற அரசவைகவி ஆற்றும் ஆரை வரை,
அவை ஓயா,
கடன் கழிக்காமல் எங்கள் காலக் கதிரன் காலம் காத்ததில்லை,
சுய பச்சாதாபம் சுகிக்க அவன் ஒன்றும்,
ஒட்டுப் புலத்தான் அல்ல,
ஒளிக் கதிரன் உன் சிம்ம சொப்பனத்து சொக்கன்,நீ
சொக்கி சோகம் சொரிக்க,
சேதாரம் எல்லாம் சேமம் சோதிக்க,
ஓயாமல் அலை ஓங்காரம் ஒற்றும்.
ஔவ்வியம் அகிலமாற்றும் அரண் அமைக்கும்,
மௌவ்வாத மரண பூமியில் மரகதத் தமிழீழம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்