ஞாயிறு, 15 மார்ச், 2009

செயற்பாடுகள் ஒரு பார்வை



சமகால அரசியல்
தாயக உறவுகளே!
முதற் கண் தமிழ் மணம் வீச தாயக வணக்கம். இந்த நேய மிகு ஆக்கம் மூலம் தங்களான பார்வைக்கு நான் வைக்கும் சீரிய வேண்டுகோள்,

ஏதிரியானவன் நமதான தாயகப் பரப்பில் ஆழக் கால் ஊன்றி,அநியாயமாக எத்தனையோ எமதான உறவுகளை,சொந்தங்களை,சுற்றம் சூழ் அயலவர்களை நாளுக்கு நாள தனதான எறிகணைகளாலும்,பல் குழல் பீராங்கிகளாலும் கொன்று குவித்து நரபலி எடுத்து

தனதான ஈகக் கடவுளிற்கு எமதான உடன் பிறப்புக்களின்குருதியால்ரத்தாபிசேகம்செய்கின்றான்.

இந்தஅநியாயமான,ஈனத்தனமான,ஈவிரக்கமே அற்ற இனவெறியர்களின் தாங்கொணக் கொடுமையால் ஒவ்வொரு நிமிடமும் நாம் எமது இன மக்களை இழந்துகொண்டிருக்கின்றோம்.

எமதான விடுதலை வீரர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் (அது குறுகிய இடமாயிருந்தாலும்)வாழவே விரும்புகின்றார்கள்.இது அந்தஇடத்தில்வாழும்மக்களின்வாக்குமூலம்,இந்தநிலையை பலர் இணையத்தளத்தின் மூலம்,பார்த்தும் செய்திகள் வாயிலாக அறிந்தும் இருப்பீர்கள்.

ஆக மொத்தத்தில் அங்கு வாழும்,அதாவது இத்தனை இன்னல்கட்கு மத்தியில் உள்ள மக்களின் அடிப்படை அபிலாசைகள் என்ன?

இல1.நமதான மண்ணில் எம்மை சுதந்திரமாக வாழவிடுங்கள்

இல2.விடுதலை புலிகளே எமக்கான உண்மையான பாதுகாவலர்கள்

இல3.நாம் எந்த சூழ் நிலையிலும் வன்னி மண்ணை விட்டு வரமாட்டோம்

இல4.சர்வ தேசமே எமதான விடுதலையை அங்கீகரி

இல5.மருந்து,உணவு,தடைகளை நீக்கி எமதான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்

இல6;.எல்லாவற்றிற்கும் மேலாக அநியாயமான இந்த யுத்தத்தை நிறுத்தி விடுதலைப்புலிகளுடன் நீதியான,நியாயமான,உண்மையான பேச்சுவார்த்தைகளை

நியாயப்பூர்வமாக ஆரம்பித்து,அதை சர்வதேச கண்காணிப்பு மூலம் நடைமுறைப்படுத்து.

இல7.எமதான சுயநிர்ணய உரிமையை அங்கீகரி,எமது தேசியம்,தாயகம்,எமதான வாழ்வுரிமை,இவைகளை ஏற்றுக்கொள்.இல்லையேல் நாம் இயல்பாக பிரிந்து செல்ல அனுமதி.


இப்போதுள்ள நிலைமையில் வன்னி வாழும் தமிழின மக்கள் யாரையும்,எந்த நாட்டையும் எங்களை புலிகளிடம் இருந்து காப்பாற்று என கூக்கிரலிடவில்லை,மாறாக மேற் குறிப்பிட்ட அம்சங்கள் அடங்கிய கோரிக்கைதான் வன்னி வாழ் தமிழரின்(உலக,தமிழீழத் )எதிர் பார்ப்பு.

இதுதான் உண்மை,இதுதான் யதார்த்தம்,இது மறுக்க, மறைக்கமுடியாத தாற்பாரிய நடைமுறை.எந்த நிலையிலும் வன்னி வாழ் எமதான உறவுகள் ஆக்கிரமிப்பு ராணுவத்தையோ,பேரினவாதம்கக்கும் எந்த சிங்களவனிடமோ தங்களை புலிகளிடம் இருந்து காப்பாற்றுமாறோ,வன்னியில் இருந்து வெளியேற்றுமாறோ வீரமண் வன்னி வாழ் தமிழினம் கேட்டுமாயவில்லை.

மறு புறமாக கூறின் அதாவது சரியான யதார்த்தத்தை விளங்கக்கூறின்.

அது மேலே கூறப்பட்டதான நிதர்சனமே தவிர வேறில்லை.இதுவரையில் இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் சென்ற மக்களிற்கு என்ன நடந்தது?என்ன நடக்கும்? என்ற யதார்த்ததுடனான அக,புற சூழல் புரியாத மாக்கள் இல்லை இவர்கள்.

இந்த தள நிலைகளை புரிந்தும்,புரியாமல் வேசம் போடும் பல முட்டாள்கள்.வன்னியில் புலிகள்தான் மக்களை தடுத்து வைப்பதாகவும்,மனித கேடயங்களாக பயன்படுத்துவதாகவும் ஏகமாவே ஊழைக் கூச்சல் போட்டு தமது சிங்கள எசமான்களிற்கு விசுவாசத்தை காட்டி எமதான இனத்தை வித்து பிழைப்பு நடத்தி வருகினறார்கள்.இனமான உணர்வு எதுவுமற்ற இந்த ஏதிலிகள் காலம் பூராகவும் ஏதிலிகளாகவே வாழ விரும்புகின்றனர்.ஊது குழல்கள் தாமாக ஏதும் சுயமாக சிந்திக்க தலைப்படாதுகள்.

ஏனெனில் இதுகளெல்லாம் அஃறிணைப்பிறவிகள்.தேசம்,தேசியம்,வாழ்வுரிமை,வரலாறு மிக முக்கியமாக தமிழர் அவர்தம்,வாழ்வும்,போராட்டமும்,அதனதன் சுய வரலாறு,இனப்பிரச்சனையின் ஆரம்பம்,அதனூடாக சிங்களம் வளர்த்தெடுத்த இனவாதம்,அதன் பரிமாண வளர்ச்சி,ஆரியன்இதனூடாகவளர்த்துவிட்ட திராவிட எதிர்ப்புணர்ச்சி (காழ்ப்புணர்ச்சி)மேலோங்கிய இனவாதம்,வளர்த்துவிட்ட பேரினவாத,சிங்கள நாடு,தமிழர் வந்தேறு குடியேறிகள் என்ற வரலாற்று திரிப்பு,இதற்கு துணை போன கடந்த கால சில தமிழின போலி அரசியல்வாதிகள் செய்த வரலாற்று பிழைகளினாலான தற்போதைய இந்த அவலம,,,,,,

இது எதுவுமே இப்படியான ஜந்துகளிற்கு புரியாமல் இல்லை.இன்றைய செய்தியைப் பார்த்தால் களநிலவரம் புரியும் ஆயினும் அடிமையாக ஏறக்குறைய 300 ஆண்டுகளிற்கு மேல் வாழ்ந்த இந்த தமிழினத்தில் ஓர் வகையினர் சுதந்திரம் சார்ந்த எந்த தொலை நோக்கும் அற்ற ஓர் பரம்பரை வர்க்கமாக, இன்றும் வால்பிடி ஊடகமாக செயல்படுவதைப்பற்றி இனியும் சிந்திக்காமல் அதாவது குரைக்கும் நாய்களிற்கு கல்லெறிந்து காலம் ஆற்றாமல் எமதான சீரிய விடுதலைசார் காலப்பணியாற்ற எவ்வித வேற்றுமையையும் இல்லாமல் கால,களப்பணியாற்ற,
புலம் வாழ் தமிழர்களே இப்போதைய எழச்சியை மெருகேற்றி,மேலதிகமான பங்களிப்பை நல்கி வீறுகொண்டெழுவோம.

இந்த காலப்பணியில் எமதான பங்களிப்பு மழுங்கடிக்கப்பட்டால் தமிழினம் மீளுவது எந்த கொம்பனாலும் நினைத்து பார்க்கமுடியாத அழிவாகவே முடியும்.எனவே எமதார்ந்த உறவுகளே எந்த அக,புற காரணங்களாயினும் அதை புறந்தள்ளி எம் மக்களையும்,சூரியத்தலைவனையும் எமதான இருப்பு பாலங்களால் கைலாகு கொடுத்து, மேலாதிக்கமான நிமிர்வுகளிற்கு கரங்கொடுத்து முன் நிறுத்துவோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்,
எங்கள் தலைவன் மேதகு பிரபாகரன்,
தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழினத்தின் பாதுகாப்பு அரண்,
அதாவது தமிழினத்தின் ஒரே ஒரு ஏகப் பிரதிநிதிகள்,இந்த உண்மைகளை சர்வதேசத்திற்கு முகத்தில் அறைந்தாற்போல் உரத்து ஒலிக்கும் அதேவேளை எமதான மாபெரும் நிதிப் பங்களிப்பை மேலும் பரி களமாக்கி, அதை அதி விரைவாக்கி காலப்பணியை தாயகம் நோக்கி பரி பூரணமாக்கி விதிர்ந்து செயல்படுவோம்.

உறுதியை வெறும் உதட்டளவில் வைக்காமல் செயல்படுத்துவோம்.புலமும்,களமும் ஒரே நேரத்தில் அகிலம் தாங்கிய செயற்பாடுகளை இன்னமும் அதி வீச்சாக்க வேண்டிய நேரம்.தவிர்க்க முடியாதகாலக் கடமை இங்கு எல்லோரும் தமிழர்கள் எனபதான தேசிய எழுச்சியுடன் வீறு கொண்டு அவரவர் நாடுகளில் இந்த மாபெரும் தேசிய கடமையை செய்ய உரித்துடையோம்.

ஆக மொத்தத்தில்; இந்த அரிய,பெரிய சந்தர்ப்பம் கைநழுவ,ஆறவிடமுடியாத,கூடாத நேரிய காலக்கடமை ஆற்றுவோமாக.இறுதி வெற்றியல்ல எப்போதுமே வெற்றிகள் எமதாக களத்தில் தலைவன் எமதான வீரச் சேனைகளுடன், ஆயின் புலத்தில் நாம் ஒற்றுமையாக ஓரணியில் செயல்படவேண்டிய கடைசி சந்தர்ப்பம்.நாம் எந்த நாட்டையும் இனியும் எக் காரணம் கொண்டும் நம்பக்கூடாதென்ற யதார்த்தத்தை அண்மையில் பல இணைத்தலைமை நாடுகளும்,மற்றும் இதர நாடுகளும் தமதான வேடத்தை கலைத்து தனதான சுய ரூபத்தை வெளிக்காட்டி எமை நசுக்க தமதான தொலை நோக்கின் சாராம்சத்தை புலப்படுத்தியுள்ள யதார்த்தம் தரிசனமாக்கி, எமை புறந்தள்ளி எமை அரசியல்,நாட்டற்ற அனாதையாக்க முற்பட்டுள்ளனர்.

இதை ஏற்கெனவே தேசியத் தலைவன் தனதான மாவீரர் உரையில் கோடிட்டு காட்டியுள்ளதை இங்கே நினைவு கூருங்கள்.எனவே எமதான உரிமையை நாமே நிர்ணயம் செய்ய,எமதான விடுதலையை விரைவாக்க எமதான தேசியத்தலைமையின் ஊடே அலை அலையாய் அணி திரண்டு தேசியக்கடமையை சேதாரமின்றி செவ்வனே செயல்படுத்துவோம்.

தும்பையூரான்
Wednesday, 25 February 2009அன்று
(இந்த ஆக்கம் tamilskynews,yarl ஆகிய இணையங்களில் பிரசுரமானது நன்றி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்