ஞாயிறு, 8 மார்ச், 2009
தினம் எரியும் நெருப்பு இவர்கள்
தினம் எரியும் நெருப்பு இவர்கள்,
ஏன் என்ற வேள்வியின் சோதிகள்
கானகத்திலும் கானம் பாடும் காவியங்கள்.எந்த
ஊனங்களும் தமை தொழவா சீவிதங்கள்,
ஈனங்கள் தமை நோக்க தாங்கிலர் அந்த
இழி நிலை கண்டால் தேங்கிலர்
பாந்தங்கள் ஏதும் இலா மாண்பினர் இந்த
சாந்தங்களே இவர் வாழ்வின் நோன்பெனர்
பகை முடிக்க பாய்ந்து தாக்கும் புலி இவர்
பாரில் இன மூச்சின் வழி திறக்கும் விழி இவர்
போரில் தனை முடித்தும் பகை விலக்கும் ஒளி இவர்
ஈழம் மலரும் எனும் நியத்திற்கே வாழ்பவர்.
பகை வீழும் வரை இமை மூடா
தகையாலும், ஈகையாலும் தனை ஈந்து
இகம் மீதிலொரு நடை பயின்ற
ஈடில்லா எம் வீரர்க்கெது இணையாகும்
புவிமிசை இவர் புகழ் மட்டுமா இங்கு வாழும்
இவர் தோள் கொடுத்த வீரம் கல்வியாகும்
இங்கு நடந்ந பாதை கதை கூறும் அதன் பாதம்
பதித்த நிலம் தேச வழிகாட்டியாகும்.
குருதியால் தேசவரைபடம் வரைந்தார்,இந்த
குருதியாலே வீரம் விதை விதைத்தார்.அந்த
குருதியாலே வேங்கை பலர் களம் விரைந்தார் அவர்
குருதியாலே தாய்மண்ணாய் அவர் விதைந்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
மார்ச்
(26)
- எம்தேசியம் சூழ்ந்திருக்க சுதந்திரக் கொடி சூட்டியவன்.
- பசுந் தமிழ் ஈழத்திற்காய் பாரம் சுமப்போம்
- விலை போவோமா?நிலை ஏற்றி நிறுவுவோமா?
- களமாடும் உற(ள)விற்காய் கரம் பற்றும் கருவிக்காய்
- நீயோ விச விந்து, ஈழத்தில் உலர்ந்த உசாத்து
- சிந்தாமணி ஒலிக்க திசையெலாம் சிலிர்க்கும்
- தமிழீழக் கொடியினை தரணியில் தாங்குவோம்
- மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட
- பாட்டுடை தலைவன் படை இனி பாடை ஏகுமா?
- பொங்குமோ உளம் திரிந்து?
- songs
- செயற்பாடுகள் ஒரு பார்வை
- வட்டியுடன் மீளளிப்பு ஆற்றவேண்டிய காலக் கடமை
- களையெடுத்து நிலைத்திருப்போம்
- பிறவியில் பிரபா வகுத்த நித்தியம்
- பூமிப் பந்தில் புதியதோர் உலகம் நெரு...
- நிர்ப்பயமின்றி போயின நீதி
- நிசம் தரிசித்த நீலப் புலி
- நெகிழ்வான வாஞ்சை
- உரிமைகள் அகலும் போது உளவுரண் வலிமையாகும்கருமைகள் ச...
- தீவினை திரும்பி வாரா தீந் தமிழீழக் கொடி சிரிக்கும்.
- நாவழி சொல்லென்றால் அது மனரூபத்தின் ஆழ்ந்த வெளிப்பா...
- தினம் எரியும் நெருப்பு இவர்கள்
- அழகான ஆழுமையின் இயல்புகளின் இறுமாப்பு
- vasantham: வளம் சேர்க்க விழைந்திரு
- ஞாலத்தில் அன்று ஈழ ஞானிகளின் வசந்த விழா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக