திங்கள், 23 மார்ச், 2009
மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட
தேசியத் தலைவனை தோளிலே தாங்குவோம் தமிழ்
தேசியக் கொடியினை பாரிலே தூக்குவோம்,அவன்
சேனையின் யாகத்தை யாகித்து ஏந்துவோம்,பகை
நோற்றிடும் தோல்வியின் சாரத்தை சுவாசிப்போம்.
தேச மீட்புப் போரை நேசமாய் பேணுவோம்
வசமாகிடும் வீரத்தால் வளங்களை குவிப்போம், களம்
வீச்சிடும் யோகத்தை வீச்சாக்கி நூற்போம்,எங்கள்
தேச விடுதலை கீதத்தை ஏற்றியே சாற்றுவோம்.
வீம்பினின் பகை சாய்த்த மாவீரம் புனைவோம்
வீசாத நகை கொள் நஞ்சினர் களைவோம், தமிழ்
மூச்சினில் முகிழ்ந்திடும் முனைவனால்
முகிழ்ந்தது தமிழீழ தேசமென இசைப்போம்
கந்தக காற்றினி தேசத்தில் வீசாது,
பல் குழல் எறிகணை சிந்த அகம் சீந்தாது.
மந்தமாய் பகை சாயமும் சாயாது,அன்றி
பூந்தளிர் பாலகர் பூம்புனல் பாடிட,
பூத்திடும் ஈழமலர் புன்னகை வீசிடும்.
தூற்றிடும் பகை எமை வாழ்த்திட வாழ்வோம்,
போற்றிடும் வகை புதுச் சாரலாய் சொரிந்திட,
மாற்றிடப் புகல் வாழ்வினை மாற்றுவோம்.
தோற்றிய தமிழீழ மண்ணிலே புலர்வோம்.
முப்படையும் அணி வகுத்து நடந்திட
முத்தமிழும் இசை இயங்கி வாழ்த்திட
மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட
மாவீரத் தானை தலைவன் கொடி ஏற்றிட
பாரிலே பூத்த தமிழன்னை சலங்கையிட,அந்த
பூரிப்பிலே எங்கள் தாகம் தணியுமே.
மாவீரக் கனவே கயலாய் ஒளிருமே.
22.03.2009
தும்பையூரான்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
மார்ச்
(26)
- எம்தேசியம் சூழ்ந்திருக்க சுதந்திரக் கொடி சூட்டியவன்.
- பசுந் தமிழ் ஈழத்திற்காய் பாரம் சுமப்போம்
- விலை போவோமா?நிலை ஏற்றி நிறுவுவோமா?
- களமாடும் உற(ள)விற்காய் கரம் பற்றும் கருவிக்காய்
- நீயோ விச விந்து, ஈழத்தில் உலர்ந்த உசாத்து
- சிந்தாமணி ஒலிக்க திசையெலாம் சிலிர்க்கும்
- தமிழீழக் கொடியினை தரணியில் தாங்குவோம்
- மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட
- பாட்டுடை தலைவன் படை இனி பாடை ஏகுமா?
- பொங்குமோ உளம் திரிந்து?
- songs
- செயற்பாடுகள் ஒரு பார்வை
- வட்டியுடன் மீளளிப்பு ஆற்றவேண்டிய காலக் கடமை
- களையெடுத்து நிலைத்திருப்போம்
- பிறவியில் பிரபா வகுத்த நித்தியம்
- பூமிப் பந்தில் புதியதோர் உலகம் நெரு...
- நிர்ப்பயமின்றி போயின நீதி
- நிசம் தரிசித்த நீலப் புலி
- நெகிழ்வான வாஞ்சை
- உரிமைகள் அகலும் போது உளவுரண் வலிமையாகும்கருமைகள் ச...
- தீவினை திரும்பி வாரா தீந் தமிழீழக் கொடி சிரிக்கும்.
- நாவழி சொல்லென்றால் அது மனரூபத்தின் ஆழ்ந்த வெளிப்பா...
- தினம் எரியும் நெருப்பு இவர்கள்
- அழகான ஆழுமையின் இயல்புகளின் இறுமாப்பு
- vasantham: வளம் சேர்க்க விழைந்திரு
- ஞாலத்தில் அன்று ஈழ ஞானிகளின் வசந்த விழா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக