சனி, 14 மார்ச், 2009
நிர்ப்பயமின்றி போயின நீதி
நிர்ப்பயமின்றி போயின நீதி
நீர்த்துத்தான் போகுமோ வேள்வியின் சோதி
பார்த்து உடல் வருத்தி ஊன் உருக்கி வளர் சோதி
வேர்த்து உயிர் ஈந்து காத்த தமிழ் சாதி!
நினைவில் உயர் கனவில் இசையும் அங்குல அசைவில்;
நிலை பிறழா உயிர் உறவில் இழைந்தேயான இசைவில்
கலையில் இணை கருவில் ஊடேயான உசாவில்
நிலைத்தே இழைத்த வீர வைரம் திசையிழந்த தீரமாய்
சிதைந்தே போகுமா? சீரிழந்து ஊரிழந்து உறவிழந்து வீழுமா?
இல்லையென்போர் இணைந்தே எழுக
இறுதிப் போரில் வெல்வோம் இழைக
அறுதி இதுதான் ஆர்ப்பாரித்து நுளைக
ஆக்குவோம் தமிழீழம் ஆக்கிரமிப்பை களைக
நூற்போம். நூற்போம் தலைவன் வளர்க.
ஓப்பாரி வைப்பதை இனியும் நிறுவோம்
ஓங்கி பகை வீழ ஓங்காரமாய் திரள்வோம்
வீங்கிய பகையின் பாங்கை களைவோம்
தாங்கிய தலைமையின் சுமையை பகிர்வோம்
வாங்கியே தமிழீழ கடமையாய் சுடர்வோம்.
கனவுகள் சுமந்த மாவீரம் மறவோம்
காடு சுடுநாடென அலை சுற்றம் மறவோம்
வீடு பேறில்லா விதியதை களைவோம்
விட்டில் பூச்சியாய் விதிவதை கலைப்போம்
வீரகாவிய சரிதமாய் சரிவதால் விரிவோம்.
இறுதி போரிது உறுதியாய் பேணுவோம்
பொருதி களம் வீரியமாய் விதிர்ப்போம்
கருதி மனம் கொள் கங்குலம் எரிப்போம்
பருதிப் பகைதனை பாரிலே உதிர்ப்போம்
சுருதி கொள் சுதந்திர தமிழீழம் சமைப்போம்.
தும்பையூரான்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
மார்ச்
(26)
- எம்தேசியம் சூழ்ந்திருக்க சுதந்திரக் கொடி சூட்டியவன்.
- பசுந் தமிழ் ஈழத்திற்காய் பாரம் சுமப்போம்
- விலை போவோமா?நிலை ஏற்றி நிறுவுவோமா?
- களமாடும் உற(ள)விற்காய் கரம் பற்றும் கருவிக்காய்
- நீயோ விச விந்து, ஈழத்தில் உலர்ந்த உசாத்து
- சிந்தாமணி ஒலிக்க திசையெலாம் சிலிர்க்கும்
- தமிழீழக் கொடியினை தரணியில் தாங்குவோம்
- மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட
- பாட்டுடை தலைவன் படை இனி பாடை ஏகுமா?
- பொங்குமோ உளம் திரிந்து?
- songs
- செயற்பாடுகள் ஒரு பார்வை
- வட்டியுடன் மீளளிப்பு ஆற்றவேண்டிய காலக் கடமை
- களையெடுத்து நிலைத்திருப்போம்
- பிறவியில் பிரபா வகுத்த நித்தியம்
- பூமிப் பந்தில் புதியதோர் உலகம் நெரு...
- நிர்ப்பயமின்றி போயின நீதி
- நிசம் தரிசித்த நீலப் புலி
- நெகிழ்வான வாஞ்சை
- உரிமைகள் அகலும் போது உளவுரண் வலிமையாகும்கருமைகள் ச...
- தீவினை திரும்பி வாரா தீந் தமிழீழக் கொடி சிரிக்கும்.
- நாவழி சொல்லென்றால் அது மனரூபத்தின் ஆழ்ந்த வெளிப்பா...
- தினம் எரியும் நெருப்பு இவர்கள்
- அழகான ஆழுமையின் இயல்புகளின் இறுமாப்பு
- vasantham: வளம் சேர்க்க விழைந்திரு
- ஞாலத்தில் அன்று ஈழ ஞானிகளின் வசந்த விழா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக