சனி, 7 மார்ச், 2009
ஞாலத்தில் அன்று ஈழ ஞானிகளின் வசந்த விழா
வியூகம் யாவும் விடை காண்பார். 07.03.2009
நினைவிலும்,கனவிலும்,தமிழீழம் பற்றிய
பற்றுதலாலான நினைவுகள் ஏந்தி ஒரு
சாந்தி தரும் செய்தி ஒன்று பூம்புனலேந்தி ஐம் புலன்களை
ஆதங்கமாக நீவி ஆத்ம, ஆதரவுக்கரம் தாராதோ?
வனையும் நெஞ்சகத்து கதவின் காந்தங்களை,
புனையும் பொய்யர்களின் பீற்றல்களை,
புரட்டி,பகை விரட்டி ஏகாந்தமாகும் நமதான ஆதங்கக்கரம் பற்றி!
தினையும்,ஆங்கு தினமும் எம் விடுதலை வேங்கைகளின்
திளையும் வெற்றிச் சேதி ஆற்றி எம் உளவுரணேற்றி
தீந்தான வாகை பகைபுலம் காட்டி நமதான வரமாக்கி
மாந்தமாகும் எம் மனவிருளகற்றி,விளக்கேற்றி,
விடியல் செய்தித் தீ சுமந்து, நீ எம் அகமாக
சுகமான, சுமைஏந்தி சுற்றம், சூழ, மகிழ வலம் வருவாயா?
ஏதிலியாக தினம் அங்கு மாயும் எம் இன மாந்தர்
ஆகுதியாகி நிசம் காணும் சவ வாழ்வு,
இனி போதினில் ஆங்கு,
எதிரி நிலையாய் ஆனதான ஆத்ம சேதியாகி,
ஆய்ந்து எமதான செவிகொள் சேதியாக,
ஓயந்து போனதாம் எம் சொந்தங்களின்,
சோக வாழ்வென ஓங்காரிக்கும் யாக சோதியாகி,
எத்துணை துன்பம் அவர் ஏந்தினார்,எத்தகை
அவலம் அவர் ஏய்ந்தார்,எத்தனை இழப்பை
அவர் தாங்குவார்,எத்தகு காயம் அவர்பட்டார்,
எந்தனது தங்கை,எந்தனது அக்காள்,எந்தனது
தம்பி,எந்தனது அம்மா,ஐயா,பாட்டன் பூட்டி
எந்தனது சுற்றம்,எந்தனது சூழல்,எந்தனது
மண்,எந்தனது இன சனம்,
எனதுயர் வான பு(ப)லம்பெயர் உறவுகளே!
இந்த
இவ்வளவும் உந்தனதும் ஆகும்,.உயிர்
உள்ளவரை மறவாதே,உணர்வதை துறவாதே,
நீறு பூத்த நெருப்பாய் நிந்தன் நெஞ்சகத்திற்குள்
வாஞ்சையாக என்றும் காங்குலாய் அனலாகட்டும்.
விடியும் தேதி விரைவாகும்,விழல்களாகும் ஆங்கு
வடியும் எதிரி படையின் வலமங்கு,
வியூகம் யாவும் படை காணும் விரையும் புலிகள்
விடை காண்பார்,உடையும் கனவாய் அவனோய
உதயம் காணும் ,
இழையும் ஈழமலர்வாய்.
ஈகங்கள் யாத்த விடுதலை கீதம்
தாகங்கள தீத்த மறவனவன் பாதம்
யாகங்களாக்கி உபாதைகளற்றி தீந்திய
சோகங்களகற்றி உயருது ஈழம்.
வேங்கைகள் இன்றி விடுதலை வருமா?
வேலுப் பிள்ளையில்லா ஈழமலர்வா?
பிரபாகரம் நீ பற்றிக் கொள்
புலரும் தமிழீழம் பூமிப் பந்தில்.
புலம் பெயர் வாழ்வே இதை நீ அகம் கொள்,
பலமது ஊக்கி புலிதனை வளர்க்கும்,
காலக் கடன் இது கண்ணியம் கொள், நிறைவு கொள்
சாலக் சிறக்கும் சாசுவதம் திறன் கொள்.
ஞாலத்தில் அன்று ஈழ ஞானிகளின் வசந்த விழா.
தும்பையூரான்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
மார்ச்
(26)
- எம்தேசியம் சூழ்ந்திருக்க சுதந்திரக் கொடி சூட்டியவன்.
- பசுந் தமிழ் ஈழத்திற்காய் பாரம் சுமப்போம்
- விலை போவோமா?நிலை ஏற்றி நிறுவுவோமா?
- களமாடும் உற(ள)விற்காய் கரம் பற்றும் கருவிக்காய்
- நீயோ விச விந்து, ஈழத்தில் உலர்ந்த உசாத்து
- சிந்தாமணி ஒலிக்க திசையெலாம் சிலிர்க்கும்
- தமிழீழக் கொடியினை தரணியில் தாங்குவோம்
- மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட
- பாட்டுடை தலைவன் படை இனி பாடை ஏகுமா?
- பொங்குமோ உளம் திரிந்து?
- songs
- செயற்பாடுகள் ஒரு பார்வை
- வட்டியுடன் மீளளிப்பு ஆற்றவேண்டிய காலக் கடமை
- களையெடுத்து நிலைத்திருப்போம்
- பிறவியில் பிரபா வகுத்த நித்தியம்
- பூமிப் பந்தில் புதியதோர் உலகம் நெரு...
- நிர்ப்பயமின்றி போயின நீதி
- நிசம் தரிசித்த நீலப் புலி
- நெகிழ்வான வாஞ்சை
- உரிமைகள் அகலும் போது உளவுரண் வலிமையாகும்கருமைகள் ச...
- தீவினை திரும்பி வாரா தீந் தமிழீழக் கொடி சிரிக்கும்.
- நாவழி சொல்லென்றால் அது மனரூபத்தின் ஆழ்ந்த வெளிப்பா...
- தினம் எரியும் நெருப்பு இவர்கள்
- அழகான ஆழுமையின் இயல்புகளின் இறுமாப்பு
- vasantham: வளம் சேர்க்க விழைந்திரு
- ஞாலத்தில் அன்று ஈழ ஞானிகளின் வசந்த விழா
நிந்தன் வாழ்வும் நிலை பெற ஒப்பேற்று உனதான நிதியான,நிலையான பங்களிப்பின் மூலம்
பதிலளிநீக்குஅழகான எண்ணம் ஆவது திண்ணம்.
பதிலளிநீக்கு