சனி, 21 மார்ச், 2009
பாட்டுடை தலைவன் படை இனி பாடை ஏகுமா?
விதை, விதைத்த மாவீர்ர் விருட்சங்களாய், இன்று
வன்னியிலே திரண்டிருந்தார் வெளிச்சங்களாய்
பதை பதைத்து ஆக்கிரமிப்பு படை மிரண்டது,அங்கு
விதையிழந்த நிலங்களெல்லாம் வசமாகுது எங்கள்
சுவாசமானது.
அலையடித்த நிலையினிற்கே அழிந்து போனவன்,ஒரு
புயலடித்து களம் சுரைக்க என்ன ஆகுவான்?
நெருப்பெரிந்த தேசமடா எங்கள் தேசம்,பெரும்
நெருப்பினிலே வளர்ந்தவனே எங்கள் தலைவன்,
தமிழீழத்தலைவன்
பெருமையிலே ஒருக்களித்து போகாதவன்,எந்த
கருமையிலும் நிலைகுலைந்து ஓயாதவன்
ஒளிக்கதிராய் எங்களின வழியானவன்,என்றும்
ஒரு கருத்தே உலகெறிந்து உயிரானவன்,எங்கள்
உதிரானவன்.
நெக்குருகி,நிலைதவறி போனவனில்லை,என்றும்
நொருங்கிப் போகா மக்களவன் காவலின் எல்லை
ஊனுருக்கி,உயிரெறிந்து எல்லை மீட்டவர்,அவர்
தானுருகி தமிழீழத்திற்காய் தனையெரித்தவர்,எங்கள்
நிலை யாத்தவர்.
வேளை வரும் போதினிலே வேதனையில்லை,அந்த
ஒலை எமதாகும் வரை ஓய்வேயில்லை,சித்த
வேதனையும் எங்கள் வசம் வாசம் பேசுமே,சுரந்த
சுகந்தமான சேதி வர சோகம் ஓயுமே,எங்கள்
தாகம் தீருமே,தமிழீழ தாகம் தீருமே.
மீட்டெடுத்த மானம் என்றும் விலை போகுமா?மண்ணில்
பாட்டுடை தலைவன் படை இனி பாடை ஏகுமா?
ஊட்டி வைத்த தலைவன் அவன் வீரம் ஏந்துவோம்,இசை
பாட்டெடுத்து வானுயர புகழ் நாட்டுவோம்,
தமிழீழ கொடி ஏற்றுவோம்.
.தும்பையூரான் 21.03.2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
மார்ச்
(26)
- எம்தேசியம் சூழ்ந்திருக்க சுதந்திரக் கொடி சூட்டியவன்.
- பசுந் தமிழ் ஈழத்திற்காய் பாரம் சுமப்போம்
- விலை போவோமா?நிலை ஏற்றி நிறுவுவோமா?
- களமாடும் உற(ள)விற்காய் கரம் பற்றும் கருவிக்காய்
- நீயோ விச விந்து, ஈழத்தில் உலர்ந்த உசாத்து
- சிந்தாமணி ஒலிக்க திசையெலாம் சிலிர்க்கும்
- தமிழீழக் கொடியினை தரணியில் தாங்குவோம்
- மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட
- பாட்டுடை தலைவன் படை இனி பாடை ஏகுமா?
- பொங்குமோ உளம் திரிந்து?
- songs
- செயற்பாடுகள் ஒரு பார்வை
- வட்டியுடன் மீளளிப்பு ஆற்றவேண்டிய காலக் கடமை
- களையெடுத்து நிலைத்திருப்போம்
- பிறவியில் பிரபா வகுத்த நித்தியம்
- பூமிப் பந்தில் புதியதோர் உலகம் நெரு...
- நிர்ப்பயமின்றி போயின நீதி
- நிசம் தரிசித்த நீலப் புலி
- நெகிழ்வான வாஞ்சை
- உரிமைகள் அகலும் போது உளவுரண் வலிமையாகும்கருமைகள் ச...
- தீவினை திரும்பி வாரா தீந் தமிழீழக் கொடி சிரிக்கும்.
- நாவழி சொல்லென்றால் அது மனரூபத்தின் ஆழ்ந்த வெளிப்பா...
- தினம் எரியும் நெருப்பு இவர்கள்
- அழகான ஆழுமையின் இயல்புகளின் இறுமாப்பு
- vasantham: வளம் சேர்க்க விழைந்திரு
- ஞாலத்தில் அன்று ஈழ ஞானிகளின் வசந்த விழா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக