சனி, 14 மார்ச், 2009

நிசம் தரிசித்த நீலப் புலி




வந்தழித்தான் பகைவன் நம் வாசல் வரை
சொந்தம் முதல் எமதான உற்றம், சுற்றம்,மற்றும்
அந்தம் முதல் ஆதிவரை அழிப்பதாய் ஆக்கிரமிப்பின்
ஆக்கிரோசமாய் தொண்டைக் குழிவரை குண்டாய் பொழிந்தான்.
அக் கணத்திலும் ஆயிரமாய் அழிந்தே போயின தமிழான உறவுகள்
ஆனதுதான் இழப்பிலான மெய்வருத்தம்,
என்றாயினும் இழக்கவில்லை வலியின் வலிமை கொள்
தோன்றாத வீரமதை தோற்றுவித்த வல்லாளன் - உலக
மன்றம் முன் மாவீரத்தை நீலப் புலியால் நிமிர்த்தியே வைத்தான்.

வலிமையே வாழ்வு வையகத்து வாழ்வோரின்
வகையறுப்படுத்த முடியாத வாழ்வதன் வாழ்வியல்
ஏதிலியாய் வாழ்வதனால் உள்ள சுகம் யாதும் உண்டா?
போதிலினிலே உந்தன் அகம் ஏற்ற சுகம் சாற்றுவாயா?
மாற்று வழி ஒன்றே உண்டு மாவீரம் உரை பாதை ஒன்றே
ஏற்று நீ ஆற்ற வேண்டும் ஏற்ற மிகு பங்களிப்பை
மாற்று வழி நிச்சயமாய் வேறில்லை மார்க்கமிதை புரிந்து கொள்
போரிட்டே மடிவோம் போர்களமீது, ஒன்றே தெரி பாதை, சத்தியமாய்
ஏறிட்டே நேற்று பகை வீழ்த்தி வான் கரும் புலி யாசித்த யதார்த்தம்
நிசம் தரிசித்த நீலப் புலி நிமிர்த்தி வைத்த கள நிலை
பூண்டு கொள்வோம் சேய் அதாய் யாண்டு கொள்
நிலை நிறுவி ஏற்றி வைக்க நிரவி சிறப்போம்
நீலப் புலியின் நிமிர்வான அகம் நிரப்பி ஆனதான
இந்த நிலையே ஆக்கும் வழி சமைக்கும், ஆயின்
பூக்க தமிழீழம் யாக்க தெரிவான பாதை
ஊக்க உறுதி கொள் எதிரிப் பாறை எரித்து வெல்வோம.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்