வெள்ளி, 27 மார்ச், 2009
களமாடும் உற(ள)விற்காய் கரம் பற்றும் கருவிக்காய்
செருக்களமாடுவதுவும்,
செந் தமிழ்ஈழம் மீட்க,
மருக்களமின்றி மடிவதுவும்,
மா வீர்ர் நிலையென்றால்,
தருக்களமாடி வரும்,
தமிழீழ விடுதலைப் புலிகட்கு,
உற்ற நிதி அளிப்பதுவும்,
உரத்த பங்கு ஆற்றுவதுவும்,
புலம் பெயர் தமிழீழ மக்களது
ஊக்க உணர்வன்றோ!,உந்து சக்தி நாமன்றோ!,
காத்து,
துயர் தீர்த்து,
நீர்க்க பகை விரட்டி,
பூக்க உளம்தழுவ, நாம்,,,அவர்
கரம் பற்றும் கருவிக்காய்,களமாடும்
உள(ண)ர்விற்காய்,தமிழர்
புனர் வாழ்விற்காய்,கிட்டு மருத்துவ நிதிக்காய்,
நடமாடும் திலீபன் மருத்துவ காப்பகத்திற்காய்,
செஞ் சோலையின் உயிர் நிலைக்காய்,
உரமேற்ற வழி சமைப்பதுவும்,
உயர்ந்த நிலையாக்குவதுவும்,
உயிராக்கி பணி ஏந்துவதுவும்,
உரிமையான, எமதான களப்பணியன்றோ?
உயர்வான இந் நிலையை,
உதவும் இந்த கருமத்தை,உடன் கடனாற்றாமல்,
உதாசீனம் செய்து விட்டால்,என்றோ
ஓர் நாள் நாம் ஏகமாக புலம்ப நாள் ஒன்று கூடிடும்.
ஆதலால்
தொலை நோக்கு நிலையெடுப்போம்,
தொலையாத பணி முடிப்போம்.
முழங்கிடும் சங்க நாதம்,
முடிவின்றி போரொலியாய்,
விளங்கிடவா வழி செய்வோம்?,அன்றி
துலங்கிடும் தமிழீழம்,தூய்மையாய் தளைந்திட
இனியொரு விதி செய்வோம்,
எம் இனமான பணி முடிப்போம்
(09.01.2000)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
மார்ச்
(26)
- எம்தேசியம் சூழ்ந்திருக்க சுதந்திரக் கொடி சூட்டியவன்.
- பசுந் தமிழ் ஈழத்திற்காய் பாரம் சுமப்போம்
- விலை போவோமா?நிலை ஏற்றி நிறுவுவோமா?
- களமாடும் உற(ள)விற்காய் கரம் பற்றும் கருவிக்காய்
- நீயோ விச விந்து, ஈழத்தில் உலர்ந்த உசாத்து
- சிந்தாமணி ஒலிக்க திசையெலாம் சிலிர்க்கும்
- தமிழீழக் கொடியினை தரணியில் தாங்குவோம்
- மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட
- பாட்டுடை தலைவன் படை இனி பாடை ஏகுமா?
- பொங்குமோ உளம் திரிந்து?
- songs
- செயற்பாடுகள் ஒரு பார்வை
- வட்டியுடன் மீளளிப்பு ஆற்றவேண்டிய காலக் கடமை
- களையெடுத்து நிலைத்திருப்போம்
- பிறவியில் பிரபா வகுத்த நித்தியம்
- பூமிப் பந்தில் புதியதோர் உலகம் நெரு...
- நிர்ப்பயமின்றி போயின நீதி
- நிசம் தரிசித்த நீலப் புலி
- நெகிழ்வான வாஞ்சை
- உரிமைகள் அகலும் போது உளவுரண் வலிமையாகும்கருமைகள் ச...
- தீவினை திரும்பி வாரா தீந் தமிழீழக் கொடி சிரிக்கும்.
- நாவழி சொல்லென்றால் அது மனரூபத்தின் ஆழ்ந்த வெளிப்பா...
- தினம் எரியும் நெருப்பு இவர்கள்
- அழகான ஆழுமையின் இயல்புகளின் இறுமாப்பு
- vasantham: வளம் சேர்க்க விழைந்திரு
- ஞாலத்தில் அன்று ஈழ ஞானிகளின் வசந்த விழா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக