புதன், 25 மார்ச், 2009
சிந்தாமணி ஒலிக்க திசையெலாம் சிலிர்க்கும்
நெஞ்சகத்து கூட்டினுள்ளே செல்லரிக்கும் நிகழ்வு (இழவு)தந்து
எந்தகத்து கூட்டுக்குள்ளே போனீர்?எங்கள்
தங்ககத்தை தாண்டி எங்கு போனீர்?
தஞ்சமென்று போவதெந்த வலையத்தில்?,நீவர்
நெஞ்செரிந்து போனதெந்த நிலையத்தில்?
சொந்தமிங்கு கரியுதே கனத்தையில்,,இந்த
வெம்மை என்று தீருமெந்த அமைதியில்?
நிர்கதியாய் நிற்பதுவா விதியாய்?இந்த
நினைவழியா நாட்கள் என்ன சதியா?
ஊர் அழித்து போனதென்ன மதியா?எங்கள்
சீர் மக்கள் ஆனாரோ சீந்தான கதியாய்?
பூக்களைப் போல அல்ல நிந்தன் வாசம்,எந்த
புரிந்துணர்வில் பிரிந்ததுங்கள் தேகம்?
பாக்களிலே படிந்திராத பாசம்,உம்மை
பரிந்துணர்ந்து கொண்டதெங்கள் தேசம்.
வேரறுந்து போவதென்ன மோசம்?இங்கு
பாரினிலே வந்ததெங்கள் சோகம்.
ஊரெழுதி நிதம் தோறும் வாடும்,உங்கள்
பேரெழுதி எங்கள் நெஞ்சம் வேகும்.
வேகும் நிலை மாறும்,எந்த
வேதனையும் இனிமேல் சாகும்,தங்க
வேதம் தாங்கி தரமாகும்,இந்த
நெய்தல் கொள நிலம் நிரலாகும்.
உங்கள் ஆகுதிகள் களமாக்கும்,
எங்கள் தங்ககங்கள் தரமாகும்,
நிந்தன் நினைவுகளால்,நிசமாகும்,
கனலும் தாகங்களால்,நிலையாக்கி உரமாக்கும்,
உங்கள் யாகத்திற்கு சமர்ப்பணமாகும்,
தமிழீழ மலர்வால்,உயர்வான தலைவனால்.
சிந்தாமணி ஒலிக்க திசையெலாம் சிலிர்க்கும்,
தமிழீழ தேசியம்,அது
தமிழீழத் தேசியக்கொடியின் தகவான இசைவாகும்
….
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
மார்ச்
(26)
- எம்தேசியம் சூழ்ந்திருக்க சுதந்திரக் கொடி சூட்டியவன்.
- பசுந் தமிழ் ஈழத்திற்காய் பாரம் சுமப்போம்
- விலை போவோமா?நிலை ஏற்றி நிறுவுவோமா?
- களமாடும் உற(ள)விற்காய் கரம் பற்றும் கருவிக்காய்
- நீயோ விச விந்து, ஈழத்தில் உலர்ந்த உசாத்து
- சிந்தாமணி ஒலிக்க திசையெலாம் சிலிர்க்கும்
- தமிழீழக் கொடியினை தரணியில் தாங்குவோம்
- மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட
- பாட்டுடை தலைவன் படை இனி பாடை ஏகுமா?
- பொங்குமோ உளம் திரிந்து?
- songs
- செயற்பாடுகள் ஒரு பார்வை
- வட்டியுடன் மீளளிப்பு ஆற்றவேண்டிய காலக் கடமை
- களையெடுத்து நிலைத்திருப்போம்
- பிறவியில் பிரபா வகுத்த நித்தியம்
- பூமிப் பந்தில் புதியதோர் உலகம் நெரு...
- நிர்ப்பயமின்றி போயின நீதி
- நிசம் தரிசித்த நீலப் புலி
- நெகிழ்வான வாஞ்சை
- உரிமைகள் அகலும் போது உளவுரண் வலிமையாகும்கருமைகள் ச...
- தீவினை திரும்பி வாரா தீந் தமிழீழக் கொடி சிரிக்கும்.
- நாவழி சொல்லென்றால் அது மனரூபத்தின் ஆழ்ந்த வெளிப்பா...
- தினம் எரியும் நெருப்பு இவர்கள்
- அழகான ஆழுமையின் இயல்புகளின் இறுமாப்பு
- vasantham: வளம் சேர்க்க விழைந்திரு
- ஞாலத்தில் அன்று ஈழ ஞானிகளின் வசந்த விழா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக