திங்கள், 23 மார்ச், 2009
தமிழீழக் கொடியினை தரணியில் தாங்குவோம்
மனத்தை வெல்லுங்கள் மானம் பிறக்கும்
இனத்தை வெல்லுங்கள் ஈனம் பறக்கும்,சிங்கள
இனத்தை வெல்லுங்கள் ஈனம் பறக்கும்
தன் மானம் சிறக்கும்,எம் மானம் பெருகும்
எங்கள் ஈழம் மலரும்,தமிழ் ஈழம் மலரும்.
சினத்தை வெல்லுங்கள் சிந்தை சிறக்கும்
சிறக்கும் சிந்தையால் சீர் வழி திறக்கும்
திறக்கும் வழியால் தீரம் வளரும்
வளரும் தீரத்தால் வீரம் பெருகும்,எங்கள்
மானம் மெருகும்,தமிழ் மானம் மிளிரும்
குணத்தை தீற்றுங்கள் பண்பாட்டின் வழியே,சீர் கெட்ட
நிலையை மாற்றுங்கள் போரின் வழியே
நிரலாய் செல்லுங்கள் தகையும் தாகமே,
நிறைவாய் வெல்லலாம் அண்ணன் அணியே,
எங்கள் அண்ணன் வழியே,எங்கள் அண்ணன் மொழியே
மனத்தை வெல்லுங்கள் மானம் பிறக்கும்,எங்கள் மானம் சிறக்கும்
நீத்து, நிலை பேணுங்கள் நியாயம் நமதே,உற்று
உள உரண் பேணுங்கள், பாதை தெளிவே,எங்கள்
பாதை தெளிவே.
தெளிவுற ஆளுங்கள் எங்கள் தேர்வு ஒன்றே,
தீர்வு யாவும் மாற்றலாம் ஆக்கம் நமதே,தமிழ் ஈழம் நமதே.
தமிழீழ!
கொடியை ஏந்துங்கள் மக்கள் நிரையே
அடியை அகற்றும் புலிவீரம் தன்னிலே
வெல்வோம் வெல்வோம் என்று வேகம் கொள்ளவே
கொள்வோம்,கொள்வோம் எங்கள் ஈழமண்ணையே
தமிழ் ஈழ மண்ணையே,தமிழ் எங்கள் அன்னையே,
ஈழம் எங்கள் நிலையே,வென்று செல்வோம் நிறைவே.
தமிழ் ஈழம் நமதே.
தும்பையூரான்
23.03.2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
மார்ச்
(26)
- எம்தேசியம் சூழ்ந்திருக்க சுதந்திரக் கொடி சூட்டியவன்.
- பசுந் தமிழ் ஈழத்திற்காய் பாரம் சுமப்போம்
- விலை போவோமா?நிலை ஏற்றி நிறுவுவோமா?
- களமாடும் உற(ள)விற்காய் கரம் பற்றும் கருவிக்காய்
- நீயோ விச விந்து, ஈழத்தில் உலர்ந்த உசாத்து
- சிந்தாமணி ஒலிக்க திசையெலாம் சிலிர்க்கும்
- தமிழீழக் கொடியினை தரணியில் தாங்குவோம்
- மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட
- பாட்டுடை தலைவன் படை இனி பாடை ஏகுமா?
- பொங்குமோ உளம் திரிந்து?
- songs
- செயற்பாடுகள் ஒரு பார்வை
- வட்டியுடன் மீளளிப்பு ஆற்றவேண்டிய காலக் கடமை
- களையெடுத்து நிலைத்திருப்போம்
- பிறவியில் பிரபா வகுத்த நித்தியம்
- பூமிப் பந்தில் புதியதோர் உலகம் நெரு...
- நிர்ப்பயமின்றி போயின நீதி
- நிசம் தரிசித்த நீலப் புலி
- நெகிழ்வான வாஞ்சை
- உரிமைகள் அகலும் போது உளவுரண் வலிமையாகும்கருமைகள் ச...
- தீவினை திரும்பி வாரா தீந் தமிழீழக் கொடி சிரிக்கும்.
- நாவழி சொல்லென்றால் அது மனரூபத்தின் ஆழ்ந்த வெளிப்பா...
- தினம் எரியும் நெருப்பு இவர்கள்
- அழகான ஆழுமையின் இயல்புகளின் இறுமாப்பு
- vasantham: வளம் சேர்க்க விழைந்திரு
- ஞாலத்தில் அன்று ஈழ ஞானிகளின் வசந்த விழா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக