சனி, 14 மார்ச், 2009
களையெடுத்து நிலைத்திருப்போம்
களையெடுத்து நிலைத்திருப்போம்
புலம் பெயர் உறவுகளே!
எதிரி உன் உளவுரணில்தான் மையம் கொள்கின்றான்.எங்களின் நிதானமான,அதேசமயம் வீச்சான செயற்பாடுகள் எதிரிக்கு கலக்கத்தை கொடுக்கும் இதே வேளை சஞ்சலம் கொள்ளவைக்க சில,பலமாதிரியான முயற்சிகளை சில எட்டப்பர்களினூடாக பரப்புரைகளை மேற் கொள்வதன் மூலம் புலம் பெயர் தமிழர்களின் மன உறுதியை குறி வைத்து தனது பொய்ப்பிசாரத்தை இணையத்தளமூடாகவும்,தனது ஊது குழலான வானலை ஊடாகவும்,மேலும் எமது தொலைக்காட்சிகளில் மறைமுகமாக ஊடுருவி ஊனக்கதைகள் பரப்ப முயல்வதை நாம் இப்போது நேரடியாகவே கண்முன்னே தெரிந்து கொள்கின்றோம்.இந்த அளவிற்கு இத்தனையையும் உணர்ந்த நாம் இதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.
முதற்கண் இத்தகை நிலைகளிற்கு முக்கியத்துவம் கொடுத்து இதனை எமதான ஊடகங்கள் மூலம் மிக்கியத்துவம் கொடுத்து புலம்புவதை நிறுத்துங்கள்.நாய்கள் குரைக்கத்தான் செய்யும் அதற்கு கல்லெறிந்து நேரத்தை கழிக்காமல்,எங்கள் செயற்பாட்டை மேலும் தீவிரமாக முன்னெடுப்போம்.
நீங்கள்தான் இதை பெரிது படுத்தி எதிரிக்கு விளம்பரம் கொடுத்து மற்றவர்களையும் குழப்பி உங்களின் உளவுரணில் தளம்பல்களை ஏற்படுத்தி,வீச்சான எமதான நிலைகளில் கலத்தல்களைஏற்படுத்துகின்றீர்கள்இதைவிடுத்துதொடர்ந்துஉங்களின்நியாயமான,நிமிர்வான,இயல்பான,உணவுப்பூர்வமான காலக்கடமைகளை ஆழமாக ஆற்றுங்கள்.
என்று குழப்பம்,கலக்கம் மனதை ஆக்கிரமிக்கின்றதோ,அன்றே சிந்தனைகள் கலைந்து செயற்பாட்டில் உறங்கு நிலை தோன்றிவிடும் இதுதான் எதிரியின் எதிர்பார்ப்பாகும்,தெளிவாக இருங்கள்,நம்பிக்கையும்,சிந்தனையும் தேசியத்தையும்,தேசத்தையும் நோக்கி இயங்கட்டும்.உங்களாலான சகலதும்.
நயவஞ்சகர்களைப்பற்றி,எட்டப்பர்களைப்பற்றி,ஊதுகுழல்களைப்பற்றி சிந்திப்பதோ,அன்றி
அது பற்றி வேறு விமர்சனம் முன் வைப்பதோ எமதான கடமையில்லை.மீண்டும் இதை வற்புறுத்தி எழுதி, எனதான,உமதான பொன்னான நேரத்தை கழிக்காமல் நமது மற்ற எல்லா இயங்கு நிலையிலும், இயக்கத்திலும் தொடர்ந்து இயங்குவோம்.
எமதான உறவுகளே!எதிரியின் எந்த புலம்பலையும்,ஊடகசார் செயற்பாட்டையும்,கேட்பது,பார்ப்பது தவிருங்களே,ஏன் முடியாது?,நீங்கள் கேட்பதும்,பார்ப்பதும் எதிரியின் முதல் வெற்றி என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.நீங்கள் பொல்லைக்கொடுத்து, இதே பொல்லால் நீங்களே உங்களை தாக்கும் இந்த முட்டாள்தனத்தை கைவிடுத்து நிமிர்வெடுங்கள்,நிலைத்திருப்போம்,ஜெயித்திருப்போம்
அவன் அப்படிக்கூறினான்,இவன் இப்படிக்கூறினான்,சிங்களவன் கொக்கரித்தான் என்பதான உங்கள்அணுகுமுறைகள்எங்கள்வானொலியிலோஅல்லதுதொலைக்காட்சியாலோ,இணையத்திலோ,மற்றும் வேறு ஊடகங்களிலோ, பகிர்ந்து கொள்வதைவிட்டுஅல்லது உங்களின் உறவினன்,நண்பர்கள் யாராயிருந்தாலும் இப்படியான மிகைப்படுத்தலான பொய்களை புறந்தள்ளி,யதார்த்தத்தை சுயமாக சிந்தித்து,நேரியலான உங்களின் திறனால் நெறிப்படுத்தி முன்னேறுங்கள்
எங்களின் தலைவனின் பின்னால் அணிவகுத்திருக்கும் பலங்களை இன்னமும் மேம்படுத்துவோம்,எங்கள் தலைவனை முழுதாக நம்புங்கள்,முகிழும் தமிழீழம் அவன் சமைப்பான்.விடுதலை புலிகள் பற்றி ஆக்கிரப்பு இராணுவம் மட்டுமில்லை சர்வதேசமும் மீண்டும் பாடம் படிக்கத்தான் போகின்றார்கள்,வன்னி கொள் ராணுவம் இனி சிங்க தேசம் திரும்பாது,சிங்களதேசம் இனி போர்பற்றி சிந்தியாது,இந்த நிலை எம் வலை கொள்ளும்,அந்த நிலை விரைவாக்க எம் கரங்களை ஈழம் நோக்கி இன்னமும் நீட்சியாக்குவோம்.நன்றி
தும்பையூரான்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
மார்ச்
(26)
- எம்தேசியம் சூழ்ந்திருக்க சுதந்திரக் கொடி சூட்டியவன்.
- பசுந் தமிழ் ஈழத்திற்காய் பாரம் சுமப்போம்
- விலை போவோமா?நிலை ஏற்றி நிறுவுவோமா?
- களமாடும் உற(ள)விற்காய் கரம் பற்றும் கருவிக்காய்
- நீயோ விச விந்து, ஈழத்தில் உலர்ந்த உசாத்து
- சிந்தாமணி ஒலிக்க திசையெலாம் சிலிர்க்கும்
- தமிழீழக் கொடியினை தரணியில் தாங்குவோம்
- மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட
- பாட்டுடை தலைவன் படை இனி பாடை ஏகுமா?
- பொங்குமோ உளம் திரிந்து?
- songs
- செயற்பாடுகள் ஒரு பார்வை
- வட்டியுடன் மீளளிப்பு ஆற்றவேண்டிய காலக் கடமை
- களையெடுத்து நிலைத்திருப்போம்
- பிறவியில் பிரபா வகுத்த நித்தியம்
- பூமிப் பந்தில் புதியதோர் உலகம் நெரு...
- நிர்ப்பயமின்றி போயின நீதி
- நிசம் தரிசித்த நீலப் புலி
- நெகிழ்வான வாஞ்சை
- உரிமைகள் அகலும் போது உளவுரண் வலிமையாகும்கருமைகள் ச...
- தீவினை திரும்பி வாரா தீந் தமிழீழக் கொடி சிரிக்கும்.
- நாவழி சொல்லென்றால் அது மனரூபத்தின் ஆழ்ந்த வெளிப்பா...
- தினம் எரியும் நெருப்பு இவர்கள்
- அழகான ஆழுமையின் இயல்புகளின் இறுமாப்பு
- vasantham: வளம் சேர்க்க விழைந்திரு
- ஞாலத்தில் அன்று ஈழ ஞானிகளின் வசந்த விழா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக