சனி, 14 மார்ச், 2009

நெகிழ்வான வாஞ்சை


எங்கள் அழுகை எங்களிற்கானது,
அதனால்தான் நாம் நிமிர்கின்றேம்,
எமை ஆற்ற நாம் யாரையும் நோகவில்லை
எங்கள் ரணங்களையும் எமதான வலியையும் நாமே போக்குவோம்.

கண்களில் நீர் வற்ற அழுவதில் என்ன உண்டு.
ஆயினும் அழுதோம், ஆதலால் வீரியமுற்றோம்,
எண்ணங்களிலும், ஏந்திய நேரியலிலும் நீர்க்கமாட்டோம்
திண்ணிய நெஞ்சமுற்றோம் தினவெடுத்த தீர்க்கமுற்றோம்.

இழப்பற்ற வாழ்வு இகத்தில் என்றுமில்லை
உழைப்புடன் உயர்ந்த வீரம், ஈகத்துடன் விழைந்த தீரம்
விழலிற்கிறைத்த நீராமோ வீச்சுக்கள் அற்று விறைந்திடுமா,
இழவு வீழ்ந்து சூழ்ந்திடாமல் இறுதிவரை காத்துநிற்போம்.

எல்லாளன் அன்று சூழ்ச்சியினால் வீழ்ந்ததாக
கற்றதுண்டு நாம் சரித்திரமாய், எங்கள்
வல்லாளன் என்றும் எந்த வீழ்ச்சியையும்
வென்றிடுவான் தனதான எழுச்சியினால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்