ஞாயிறு, 26 ஏப்ரல், 2009
வியூகம் விதைக்கும் வீரியம்.
நிதம் தோறும் வதை முகம்,எங்கள்
தலம் தேக்கிய ரத்த வாடைகள்,அழு
தணலில் எல்லாமே ஆங்கு அறமிழந்த
நம்பிக்கை அகமிழந்து அரற்றும் ஆவணம்
யார் அதை ஏறிட்டார்?
எந்த மனிதம்
மானுடம் காத்தது?
எவன் எமை ஆற்றினான்?இல்லை தேற்றினான்?
ஏற்றய செவிகள் எலாம் எமை நோக்கி,
கருவிகளை எலாம் களைந்து காடையனிடம்
கை ஏந்தவே கட்டியம் சாற்றியது.எமை
யாருமே புரிந்து கொள திருவுளம் கொளவில்லை
கொல்ல மட்டுமே,கருவிகளும்,காப்பகங்களும்,
அரவணைப்பாய்,அதன் சாரமேற்றி,
ஊற்றெடுக்கும்,உறவுகளையும்,யோசனை சாற்றியது,
அதன் பால் பயங்கரவாதிகளின் பாதமேற்றி எமை
பரம பதம் ஏக்கியது.
சற்று முன்வரை, சடுதியான
எமை மேலும் சவக்காடு
ஏற்றி சகம் ஏற்றும் சப்தமற்ற
முகாரி,முண்டுகட்டி
சகாயம் கொண்டது சர்வம் அதை சுகித்து
சுமை மீட்டியது,
இன்னமும் எத்தனை சிலுவை சுமப்பது?
அத்தனையையும் யுகமாய் சுமக்க ஆதங்கம்
தங்க ஆற்றும் அத்துணை உறவுகள்.
போர்க்கொடி சுமந்து புவி வலம் வந்து,
அவலங்களின் அத்துணை வலியையும்,
வையகம் முன் வலிமையாய் வைத்து,
வைரமாய்,முகத்தின் முகவரி கேட்டு,
நீதிக்காய்,நிரந்தர தீர்விற்காய்,நிம்மதிக்காய்,
நீர்ப்பயமற்றதோர் நியாயம் கேட்டதும்,
அத்தனையும் இங்கு வலி இழந்து போகவா?
இத்தனை அறம் ஆதங்கமாய் விதந்தது?
இரும்பொறை ஒத்த மறவர்கள் அங்கு,
வரும் பகை ஒழித்து தரும் எங்கள் நிலம் பூக்க,
சத்தியமாய் ஓர் சதுரங்கம் நகர்த்தி சாத்தியமாய்
எம் தமிழீழம் சமைப்பார். உறுதியின் உயரமது.
உயரப் பவனி பவ்வியம் பகர்,பாரில்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஏப்ரல்
(22)
- சிரையாத சிலிர்ப்பேக சிலாகித்த சிரம் சிலிர்ப்பி
- பூங்காற்று வீச பூவான மென் உளம் கோர்த்து
- தீதெய்தா நல் நம்பிக்கை கொள்வோம்
- வருவார்கள்,எங்கள் காத்திர,சரித்திர நாயகர்கள்
- பேர்லின் கவனயீர்ப்பு.
- வியூகம் விதைக்கும் வீரியம்.
- மானிடத்தை மதிப்போனே!
- யார் ஆற்றுவார் தேசிய உணர்வை?
- இசைவாயா? இரப்பாயா?
- சலிக்காமல் தீ முட்டிய என் தேசத்துறவே,
- பயங்கரவாதியே நீ எந்த படுதலம் பரவ?
- புலத்தில் களம் கொள்ளும் காலக் கொள்வனவு
- அர்த்மற்ற போர் நிறுத்தம் ஓர் ஆய்வு
- கன்னியின் காதல் போல் காந்தளமாய் கவரட்டும்
- எமையே மீண்டும் நீ கொய்வாயா? கொல்வாயா?
- படியும் நிலை சாரும்,ஒடியும் தளை யாவும்,
- பூபாளம் இயங்க புன்னகைத் தேசமாய்
- விரிந்திருக்கும் பாதையெங்கும் விஷமிருக்கும்,
- puthuvai
- Thalai Nimirvu Part-2 (DVD Cliz) : Eelaman.net
- மறுகச் சினம் கொள்வான் மருக்கலைய மறத்தமிழன்
- www.seithy.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக