சனி, 4 ஏப்ரல், 2009

மறுகச் சினம் கொள்வான் மருக்கலைய மறத்தமிழன்


மக்களை கேடயங்களாக்கி மறமாற்றார்,அவர்
மானிட கவசமாகி மக்களை காத்து நிறைவார்.
மாமனித சுவாசமே, மகத்தான திறத்தாலே
மனித மன்றில் முடிசூடி மாவீரம் மலர்ப்போரே!

உருவாக்குவதை அருகாக்குவான் ஆக்கிரமிப்பு அந்நியன்
கருச்சிதைவாக்கி உளச் சிதைவை உருவாக்குவான்,முனைய
வெருகச் சிதை மூட்டி,வெங்களத்தில் சங்கறுத்து,
மறுகச் சினம் கொள்வான் மருக்கலைய மறத்தமிழன்,
ஒன்றிணைத்து, சிரம் கொள்,ஒழுங்கமைப்பான்
ஓங்கார போரொலிக்க தமிழர்,ஓளடதத் தலைவன்.
புனித வலயங்கள் புனையும்
கரிகாலச் சிற்பிகள்,பரி பாலனின் வித்தகர்கள்.

மரியும் மகிந்தாவே!
புரியும் உனக்கு ஆயினும்,
புத்த மத மற்ற பித்த புத்தி
வரிந்து கொண்டு வன்புணர்வு கொளும் உன்
வக்கிரப் புத்தி உளம் கொள உனை விடா?
எனில் அது ஆரிய அழிவுப் பத்தி.

மனிதாபிமானமென்றும்,மகிந்தாவின்,
மாபெரும் வெற்றியென்றும்,
மனிதப் புதைகுழி புதைத்து,
புனிதப் போரென்றும், மனித பேரவலம் விதைத்து,
புத்தனின் தத்துவப் புதல்வரென்று,புலமெலாம்
புலம்பும்,உன் பித்த புத்தி,

எந்த கள யதார்த்தங்களையும் வரையும்
ஊடகங்களையும்,அதன் சார் புத்தி ஜீவிகளையும்,
களையும்?,
உனதான வெந்தணல் புத்தி,
எந்த நிலை வரைய இறுகப் பூண்டிருந்தாயோ?
அந்த வலை அறுத்து, நிலை தறித்து,
வளம் கொள்வோம்,உனை பூண்டாக்கி,

உலகப் போர் பூண கிட்லர்க்கு ஓர் கோயபல்ஸ்,
இதே மார்க்கம் நாண உனக்கு ஓர் கோத்தபாயா?
அதே கிட்லரின் ஆதார்ச
சேனைக்கொரு பிறீட்றிட்ஸ் பவுலோஸ்
சேதாரம் கொள உனக்கு சரத்பொன்சேகா ஆக?
சரித்திரம் உளம் நீ கொண்டிருந்தால்
தரித்திரம் உன் வளம் கண்டிரா?

வரிசையாக உன் வாசலில் எந்த
சிங்கள சிப்பாயும்,ஏன்,
உன் வா(ச)ல் ந(ய)க்கும்
ஒட்டுக்குழுக்களும் கூட
வரிந்து உன் வளம் சேர்க்கார்,காண்பாய் நீ
எரித்து உன் நினைவை கனவாக்கும் கரிகாலன் பேரொளி
சரித்து, வரித்து ஈழ எல்லையாக்கி தமிழ் வாசல்
தெளிப்பார் வாகையாகி உன் வாசல் பிரிப்பார்.

இன்றைய வன்னி நிலை நாளை உன்
வாசல் செழி(றி)க்கும்,யார் கண்டார்?
உன் இனமே உனை சகதியாக்கி,
மகிந்த சிந்தனையின் சித்த ஆர்த்தம் கேட்கும்.

அந்தோ நினதான
புதைந்த சித்தம் யாக்க புவியில் சிங்கதேசம்
சிந்(த்)தை கொளா?

அன்று
செங்கொடி சங்கொலிக்க செவ்வானம் விதைந்துரைக்க
செழுமை காணும் உலகத் தமிழினம்.அந்த
சிலிர்ப்புடன் எம் சிந்தையான சிகப்பு ஈழம்.

தகமையான தமிழீழம்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்