வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

நினைவு நீட்டும் நீட்சியல்ல--- நியம் நியமிக்கும் நித்தலம்.


ஆகாது ஆகாது அழுதாலும் ஆகாது.
போகாது போகாது பொழுதானாலும் போகாது,
அழுகாது அழுகாது ஆரியனின் அகமோ அழுகாது.
மொழுகாக,
எம் மேனிதான் மொலிந்தாலும்.
தொழுதவனை தோள் தட்டும்
தோழமையும் தொழுவாது.

புலையான புன் சிலிர்ப்பு,
வலுவாக வாசம் இல்லை,
தொலைந்ததான எம் சொந்தம்.
தோள் கொடுக்கா தோழமைகள்.
ஏழ்மைகளின் ஏணியிலே ஏற்றம்-
என்ன நிறைந்திருக்கும்?

வலையின் வசத்தில்,
வக்கணையற்ற வரத்தில்,
குலைந்து போன குதர்ப்பில்,
வலையலென்ன வகுக்கும்?வாரும்
கொலையரல்லோ கொழிப்பார்.

தலையகன்ற உடப்புக்களும்
தாளுமை தகன்ற தவிப்புக்களும்,
கலையகன்ற காத்திரங்களும்,
விலை போன விசமிகளும்,
கொலுவிருக்கும் கொற்றத்தில்-எந்த
வலுவிப்போ வாசல் வரையும்?

கணையற்ற காதங்கள்-எங்கள்
வினையறுத்த காதகர்கள்—சொந்த
துணையிருப்பையும் தொலைக்க வைத்த பாவியர்கள்
குடி கொண்ட குற்றாலத்தில்-என்ன
படியிருக்கும்?
எம் பாரமகற்றி பாலமமைக்க-இதில்
ஈழமென்ற இலட்சியம் இரைப்பதை ஈர்க்க.

எனினும்,
எந்த ஒரு சோகங்களும்,
அது வகுத்த வார்ப்புகளே,
அதன்-
வலிமையின் வகையறுக்க வார்ப்பு வரையும்-இந்த
வன்மம் எம் பாதையின் பரப்பை,
பரிபாணத்தை-
நோக்கி,
நேர்த்தலை,
நோத்ததை தேற்ற ஒரு
பூத்தலை பூடகமாய் இப் புவியில்,

நீத்தலகற்றி நிச்சயம் நீட்சிக்கும்.
நினைவு நீட்டும் நீட்சியல்ல நியம் நியமிக்கும் நித்தலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்