ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

பெறாமகள் பிரியாவிற்கு



                இல்லற வாழ்வில் 11.02.2018
இணைந்த செல்வி -சிறீ.."ப்ரியா" விற்கு சமர்ப்பணம்.











இத்தினம்
உன் வாழ்வின் அகத் தினம்
நினைவழியா நாளாக நினை
ஆட் கொண்ட முத் தினம்.

கைத்தலம் பற்றி பரிவெழுதிய பாக்கிய தினம்.
முத் தேவர்கள் வாழ்த்தினார்களோ இல்லையோ
உன்
முற்றத்து சூழலும்
முதிர்கொண்ட வாழ்வாங்கு வாழ்ந்தவர்களின்
வசீகர வாழ்த்துக்களும்.நிந்தனை
அக ஆசிகளால் அரவணைத்த தினம்.

உனதான இல்வாழ்வு சிறந்தோங்க
தொலை தூரத்தில் இருக்கும் உன்
பெரியப்பாவின் வாழ்த்தும் உனை ஆசிக்க
இந்த ஒரு மென் மடல்.

செளபாக்கியம் பெற்று
சகல ஐசுவரியங்களுடன்
நினதான தாம்பத்திய வாழ்க்கை
ஆரோகணிக்கட்டும்.

ப்ரியமானவளாய்
பிரேமைகள் நின் பிரியமானவனுடன்
என்றும் நிலை தடுமாறாமல் நிலைத்திருக்கட்டும்.
வாழ்வியலின் கூறுகளில்
சகலதையும் நின் மணாளனுடன் பகிர்ந்து கொள்
பரவசம் நிறையும்
நின் பிரபஞ்ச வாழ்வில்.

வாழ்வின் சுகமே
புரிந்துணர்வுகளின் படிக்கட்டுக்களில்
சகலதையும் மனமார பரிமாறிக் கொள்வதில்
பூரணமாகும்.

இவ் வண்ணம்!
பெரியப்பா

சு
.குமார் குடும்பம்
(யேர்மனி
)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்