விளம்பரமும்
நுகர்வுகளும்
தேவைகளை அறிந்தே
கொள்முதல் கொள்
தேனாக வாழ்வெழுத
தேவைகளை சுருக்கு
ஆலைகளில் பொழிந்ததெலாம்
ஆலாய்...
தொடர் ஊடகத்தில்
விளம்பரமாய் வீதி வரும்.
பட்டொளி விட்டு பல சுவர்களை அலங்கரிக்கும்.
பட்டொளி விட்டு பல சுவர்களை அலங்கரிக்கும்.
பத்திரிகைகளும்
வானொலியும் துல்லியாமாய்
ஆமோதிக்கும்.
விளம்பரம் போட்டால்
அவனுக்கோ காசு.
விழுங்கி நீ வாங்கி
விட்டால் விநியோகத்தனுக்கும்
காசு
அந்தோ தேவையற்ற
நுகர்வுகளால் உந்தனுக்கோ
காவு
எந்த தேவைகளையும்
பூர்த்தி செய்யாத்தால்
நிந்தனுக்கோ ஆப்பு
எவனிடம் எது இருந்தாலும்
இல்லையென்றாலும் உனக்கேன்
இந்த ஈர்ப்பு
வாழ்வுத் தேவைகளை
புரிந்து கொண்டால் உனக்கில்லை
இழப்பு
மனங் கவரும் எத்தனையோ
புதியவவைகள் உண்டு.\அவை
இனங் கவர்ந்து உனைக்
கெளவ்வும் விளம்பரங்கள்
உண்டு.
நின்று நீ நிதானி
நிச்சயம் தேவையெனில் இன்னொரு
முறை யோசி
தவிர்க்கவே முடியதெனில்
தரமானதை நுகர்ந்திடு.
உபயோகமற்ற எதையும்
ஆடம்பரத்திற்காய் வாங்காதே
ஆடம்பரத்தில் அழகு
என்றுமே கொழித்ததில்லை.உன்
அழகில் ஆடம்பரம்
செழிக்க உன்னை நீ தீட்டி எழு
விளம்பரங்களும்
நுகர்வுகளும் வாழ்க்கைப்
பாதைகள் இல்லை.
ஆசைகளிற்கு கட்டுப்போடு
அரவங்களாய் உனை
இணைக்கும் ஒய்யாரங்களை
மட்டுப்படுத்து
கவர்ச்சியாய் காணபவைகள்
காலத்தில் நிலையில்லை
உவகை தேவையெனில்
உவந்ததையே நீ ஆகாசி.
வரவுக்கு ஏற்ற செலவு
செய்ய பழகு
ஏற்புடையதாயின் ஒரு
பக்கம் சேமித்தெழு
ஈய்தல் ஒன்றையும் உன் மனக் கண் வைத்தொழுகு
வீண் விரயம் செய்வதில் விழிப்பாயிரு.
ஈய்தல் ஒன்றையும் உன் மனக் கண் வைத்தொழுகு
வீண் விரயம் செய்வதில் விழிப்பாயிரு.
பந்தாவாக வாழ்வதில்
பரவசம் நிலைக்காது
பாதைகளும் அதன்சுவடுகளும்
நின் பாவனையிலே உண்டு
பரந்தாமனும்.சிலுவைகளும்.புத்தனின்
தத்துவமும்
என்றுமே உன்னை செழுமைகளாய்
ஆக்காது
அதுபோலவே இந்த
விளம்பரங்களும் நுகர்வுகளும்....?
நன்றி என்றுமே
ஊரகனாக
சு.குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக