வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

விலை போவோமா?நிலை ஏற்றி நிறுவுவோமா?


எமதான உறவுகளும்,உற்றார்,சுற்றம் எல்லோருமே தினம்,தினம் ஆக்கிரமிப்பாளனின் எறிகணையால் நிதமும் இறந்தும்,படுகாயமுற்று,எவ்வித முதலுதவிகளுமற்று,மருந்து,சிகிச்சை,ஆதார்ச மருத்துவம்,உணவு,தங்ககம்,உடை,ஒரு குடில்கூட அற்ற எவ்வித உதவிகளுமற்று,அநாதையாக,அனுசரணைக்க எந்தவிதமான அடிப்படை வசதிகளுமற்று வாழ்வா,சாவா,என்ற எதுவித தெரிவுமற்ற கொடுமையான,வார்த்தைகளிற்குள் வசப்படுத்தமுடியாத கொடூரமான வாழ்வை எந்தவிதமான பற்றுக்களிற்கும் உட்படுத்தமுடியாத விலங்கைவிடவும் அவல வாழ்விலும்,தங்கள் வலிமையை,அதனூடான போராட்டத்தின் வலுவில் தங்கி தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இறுதிவரை துணைபோகும் வரலாற்றுப் பணியில் தம்மை ஈடுபடுத்தி,களம் காணும் வல்லமையை புலம் பெயர்ந்து வாழும் நாம் இன்னமும் வீச்சாக எமதான அதி உச்ச பங்களிப்பால் மேம்படுத்தவேண்டிய,முக்கியமான,அதிமுக்கியமாக கவனிக்கப்படவேண்டிய காலக்கடமைக்கு உட்பட்டுள்ளோம்.இது தவிர்க்கவோ,அன்றி ஒத்தி வைக்கவோ முடியாத அறமாகும்.ஆயின் இதில் எத்தனை வீதமான புலம் பெயர் சமூகம் தன் கரங்களை களம் நோக்கி நீட்டியுள்ளது என்பதை கவலையுடன்தான் நோக்க வேண்டியுள்ளது.உண்மையை நாம் ஏற்கத்தான் வேண்டும்.இங்கு ஜேர்மனியை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டால் புலம் பெயர் தமிழர் ஏறக்குறைய 80,000பேராவது இருக்கும்.இந்த தொகையில் சர்வதேசம் நோக்கி எமதான இந்த அவல நிலையை ஆர்ப்பாட்டங்கள்,கவனயீர்ப்பு போராட்டம் மூலம் பங்கு எத்தனை வீதம்? ஒரு 20%கூட இல்லை என்பது வேதனையளிப்பதாகவே உள்ள இந்த நிலை ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடாக இல்லை.ஏன் இன்னமும் விழிப்பணர்ச்சியற்று இருக்கின்றார்கள்.சரி மறு வளமாக நிதிப்பங்களிப்பை நோக்கின் கடைசி வேலை செய்யும் மக்கள் தொகையை 40000பேர் என எடுத்துக்கொண்டாலும் இவர்கள் தமதான நிதிப்பங்களிப்பை முழுமையாக ஆற்றி இருந்தால்,இப்படியே உலகம் முழுதும் புலம் பெயர் சமூகம் தங்கள் ஆழுமையான, முழுமையான பங்களிப்பை காலக் கனிவான கடந்த கால எல்லையில் ஆற்றியிருந்தால்,அதாவது வலிமையே வாழ்வு தரும் என்றபேரிகை மூலம் தலைவன் இட்ட வேண்டுகோளுடன் இயைந்திருந்தால்,இன்று நிலையே வேறு.சரி இப்போ, என்ன இந்த நிலையிலும்,, ஏதாவது சாட்டுக்கூறி தனதான தேசியப் பணியை ஒத்தி வைக்கும்,அல்லது மறுப்பளித்து ஏதாவது காரணம் கூறி ஏய்த்து திரிவதை விட்டு சீரிய காலக்கடமையாற்றி எமதான தேசியத்தையும்,இனத்தையும்,மண்ணையும், மீட்பதற்காய் களம் காணும் எமது தேசிய வீர்ர்களையும் எல்லாவற்றிற்கும் மேலாக சூரியத்தலைவன்,தேசியத்தலைவன் இவர்களிற்கு நாம் எமதான நேரிய,சீரிய,வினைத்திறன் மிக்க பங்களிப்பால் கரம்பற்றி எமதான வரலாற்றுப்பங்களிப்பை நிறைவாக்கி,நமதான மண்ணைமீட்கும் எமதான விடுதலை வீரர்களை இன்னமும் உரமேற்றி ,,விடுதலை காண விரைந்து செயலாற்றுவோமாக.புலம் பெயர் தமிழ் சமூகமாகிய நாம் 100%பங்களிப்பை எமதான விசாலமான நெஞ்சகத்தால் தங்ககமாக்கி தரணியில் எம் தேசம் மலர தானைத்தலைவனின் பாதையில் அணி திரண்டு,செயலாக்கி செம்மையாய் படைப்போம் தமிழீழம்.

தும்பையூரான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்