
நீர்த் திவலைகள் பனித்து
இதயமே ஒரு மெளன ரீங்காரத்தை
ஓசையின்றி இழைத்தது.
மழையும்,அதன் சாரலும்
மெல்ல எம் தேசம் தழுவிய ஒரு
மாலைப் பொழுதில்
ஆலய மணியின் கணீரென்ற
ஒலியிழையில்
தேசத்து மலர்கள் யாவும் சிலிர்த்துப் போயின.
அது ஒரு காலமாக!
இன்று!
மூலைக்கு மூலை பல மூடர்களின் கண்காணிப்பும்
ஈரமாக்கவா இல்லையா எனும் உந்துதலில்
இயற்கையின் இசைவின்மையும்
மனதை நெருட--
நின்றொரு ஒலி கொட்டும் எண்ணம் மனதை உந்த
மனைகள் பலவற்றில் தீபாரதனையுடன் ஒரு மெளனாஞ்சலி
எது நடந்தாலும்-
ஏக்கம் சுமக்கும் நெஞ்சகம்
இயங்கத்தான் சாலவே தடமிடும்.
தேசத்தின் புதல்வர்களை
எம் நேயத்தோடும்,பாசத்தோடும்
என்றும் நினைவாக்கம் கொள்வோம் எனும்
நனவாக்கத்தின் நல்லிருப்பாய். உதிர்ந்து
தொலைந்து கோணாது இந்த
உயிர்ப்புக்களின் ஊடு தளம் எனும்
பயிர்ப்பாய்.
மூண்டது..
மீண்டும் வன்னித் தளத்தில் மட்டமல்ல
தமிழீழப் பரப்பெங்கும் மா வீர பெரும் சுடர்
மனங்கன்றிப் போகாது எம் மாவீரச் செம்மல்களை
நினைவிருத்தி நெகிழ்ந்துருகி
அவர் பம் பாதம் பணியும் பண்பலைகள்
என்றும் ஓயாதென ஒளி வீசும்.
இதுவே யதார்த்தமென
காத்திரர்களின் காலடி ஒற்றி
கண்ணீர் பூக்களால் எங்கும் காணிக்கை பார்.
இது மா தவம் செ(ந)ய்த மண்ணடா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக