ஞாயிறு, 27 நவம்பர், 2016


 மனக் கணக்கில்
ஏதோ மதி மயக்கம்?
கனக்கும் நினைவுகளால் வந்த தயக்கமா?
உவக்கும்
இது
உனக்கும் எனக்குமென எண்ணுவது பேதமை.
அது
தனிக் கணக்கு.

மனிதக் கணக்கு எப்போதுமே தவறுமா?
இல்லை
மாந்தர்களின் மையல்களில்
சாந்தமற்ற சந்தங்களில்
வசந்தமற்றுப் போனதாய்
வகுக்கும் சில நிலைகளில்
எந்தன் சிலை தவறி வீழ்ந்திடுமா?
இல்லை
எமது
சிலைகளும் சில்லான சிலிர்ப்பான
எண்ணங்களும் அதன் வண்ணங்களும்-

மனம் விட்டு
மதி திறந்து உரையாட
இரையாகிப் போனதாய்
தம்
உணர்வென சில மானிடங்கள்
தம் மதியை ஒரு
குச்சொழுக்கில் விரவி விட்டு
விதண்டாவாதம் பண்ணுவது விதியா?

இல்லை
புரிந்துணர்ணை புதை குழி தோண்டி
பரிந்துரை செய்யும் வையகங்களில்
மனக் கணக்கும்
மானக் கணக்கும்
சிலரின்
இரைப் பைகளில்
எம்
துரவுகளை துளாவி
அலசி
அவித்தெறிந்து போன தடயம் ஆறாமல்
அடுத்த அசைவில்
என்ன இசைவு வரும்?

நேற்றைய உரையாடலில்
தெளிவான சேதி ஒன்று
வீச்சற்றுப் போய்
திசைக் கொருவராய் தசை பிடுங்கி
தாளம் போடும்
யாலங்களினால் உன் மனக்கணக்கை
மரக்கையிலிட்டு மசித்து விடு
சேதி இதுவாக
என் செவிப் பறை நாண
தணலில் இட்டு என் சந்தங்களை -----??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்