வெள்ளி, 25 நவம்பர், 2016

அகவை 59

அகவை நாளை 59 ஆகும்
ஆதலால் ஒர் ஒளிப் படத்தை ஒற்றுகிறேன்
காலம் எவ்வளவு கனதியாக
சடுதியாக கழிந்ததை நினைப்பெழுதி
வியக்க கடந்தகால
நிழற்படம் ஓர் அத்தாட்சியாக
இடைப்பட்ட காலங்களில்
கனிந்தவைகளையும்
கழிந்தவைகளையும்
இடர் பட்டு இடிந்தவைகளும்
என்
நினைவுத் தடங்களில்
ஓர் கனிவுப் பந்தலை சுவைக்கின்றது.

எத் தடை வந்த போதும்
எத்தனை எத்தனங்கள் இடறியபோதும்
அத்தனையையும் சாலக்
கடந்து
சத்தனைத்தும் சொத்தாக
கொத்தாய் கொய்து
கோப்படக்கிய கோலமதில்
சுரங்களின் சுரங்கம்
இந்த நிழற்படம் எனக்குரைக்கும்
தினமாய் திடமாகி செழிப்பாய்.

மலர்ந்தனவும்
மலரடக்கம் கழிந்தவையும்
மலட்டாக்கம் கொண்டனவும்
அலர்ந்து அவை அடங்கி
புலர்ந்தவைகளும் புணர்ந்தவைகளுமாய்
புளகாங்கிதமும் புழுகாங்கிதமாய்
அழுதாங்கி கொண்டவைகளும்
இந்த படத்தில் படலம் கொய்யும்.

இது
தினவெடுத் தோள்கள் கொண்டவெற்றித்
திருமுகத்தின் அட்சயப் புன்னகையாய்
என்றும் துலங்கும்
ஆதலினால் சிலிர்ப்பெழுதும்
சிலாகிக்கும் சின்னத் தனமகற்றி
இந்த அகவடக்கம் யாவும்
புல வாழ்வு என்
புயத்தில் தீற்றிய அடையாளச் சின்னமாய்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்