ஞாயிறு, 27 நவம்பர், 2016

மாவீர பொற் பாதம் தாளாது காண்

இதயப் பரப்பில்
எழுச்சியாய் என்றும் வீற்றிருக்கும்
நாயகர்களே
உதயம் காண தன் இன்னுயிர்களை
ஈந்தளித்த தேசத்தின் சுடர்களே

சூரியத் தலைவனின் ஞாலங்களே
தமிழீழ நியாயர்களே
நித்திலர்களே உங்களின் உத்தம
வேள்வி நியாயங்கள் நியமானவை
அப்பழுக்கற்றவை









தேச அணுக்களின்
ஒவ்வொரு பரப்பிலும்
உங்களின் உதிரச் சுவாசமே
என்றும் ஆலிங்கனம் வகுத்திருக்கும்
இது சத்திய வேள்வியின்
சரித்திரச் சுவடு.
ஆதலினால்தான் என்றும்
ஈழ தேச சுதந்திரச் சுவர்களில்
சூத்திரமாக என்றும் தகைத்திருக்கின்றீர்கள்
இது ஆன்மாவின் அவிபாகம்.
 யாராலும் எதனாலும் அழிக்கமுடியாத
பெருயாகம் பெற்றீர்
நிலைத்திருப்பீர் எங்ஙனமும்
சுதந்திரக் காற்றிடுக்கில்
சுந்தரமாய் எக்கணமும்.
இதயத்தில் கனல் விடும் மூச்சுக் காற்றை
தொட்டணைத்தே உங்களின்
ஞாபகக் கல்லறையில் இட்டுணர்ந்து
தலை வணங்கி நிமிருகின்றோம்
உங்கள் தங்ககத்தில் இதயப் பூச்சொரிந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்