ஞாயிறு, 31 ஜனவரி, 2016

உன் அகத்தில் என் அகத்தை!

ஆனந்தப் பூங்காற்று வீசும் ..அதில்
ஆயிரம் கானங்கள் சேரும்.ஆலிழை பூவொன்று
ஆரத்தி சீர்கொண்டு ஆடிட சேதி சொல்லு.நீ
அன்பெனும் பாதை வெல்லு.

நித்திலம் நிலைக்கும் என்றாய்.நீ
நிம்மதி வாழ்விலென்றாய்.சத்தியம்
என்பதும் தர்மங்கள் என்பதும்
சாய்ந்திட பாதை இல்லை.இவை
சந்தமின்றி வாழ்வதில்லை.

ஆனந்தப் பூங்காற்று வீச
அதில் ஆயிழை நூதனம் கொள்ள
சீர்தளம் பொங்கிடும் காற்று
என சில்லிட்டு தளிர்த்திடும் நாற்று.

தேனாற்றங் கரைதானே தேயாத நிலாதானே
இயற்கையை ரசித்தெழுது
இன்பச் சேதியை காதில் சொல்லு
அதில் கானங்கள் நீவட்டுமே
எம் காதலும் வாழட்டுமே.

காலங்கள் எமக்காக கனிந்திருக்க.அங்கு
கார்த்திகை பூக்களாய் மலர்ந்திருக்க
கோலங்கள் யாவும் மனம் சொருக
மகிழ் ஞாலங்கள் எம் கனவிறுக்க
நித்திய பூமிக்குள் நிறைவிருக்கும்.என்றும்
ஆனந்தக் காற்று வீசும்.
அதில் ஆயிழை நீ தனம் கொள்ளும்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்