பாட்டெழுதி பாட்டெழுதி
பாவை உந்தன் சீரெழுதி
பார்த்திருந்தான் நிந்தன் பாதை
பார்க்கவில்லை அந்த கோதை
நெஞ்சகத்தில் தந்த வலி
கேட்டிடுமா இந்த ஒலி
வஞ்சகமோ உந்தன் வழி
வாழ்ந்திடுமா எந்தன் மொழி
கண்ணகத்தில் என் அகத்தில்
காட்டுகின்றாய் தீப சுகம்
எந்தகத்தில் இந்த பாரம்
இறக்கி வைப்பேன் இதன் ஈரம்
வாழ்வெழுதிப் போவதற்கும்
வாழ்க்கை துணை தேவையென்று
பாவை உனை பார்த்திருந்தேன்
தினந்தோறும்
பாவின் வழி நாடி நின்றேன்
பதம் தேடி
பார்க்கவில்லை என்னை பேதை
கோர்க்கவில்லை எந்தன் பாதை.
ஊரெழுதி கொண்ட சுகம்
உள்ளதெல்லாம் உந்தன் வசம்
பேரெழுதி போகுமா எந்தன் யாகம்
பேதை இவள் பார்க்கவில்லை பெரும் வாதை.
பாட்டெழுதி. பாட்டெழுதி
பாவை நிந்தன் பேரெழிலில்
பார்த்திருப்பேன் வெகு காலம்
பாட்டுடைத்துப் போவேன் ஒரு லோகம்.
பாட்டெழுது.ஒரு பாட்டெழுது.
பாவையே எனை சேர்த்தெழுது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக