திங்கள், 25 ஜனவரி, 2016

மல்லிகை பூச்சரம் சுமந்தபடி..நான்

நீ ஒரு சேதி சொல்லு
என் நெஞ்சிற்குள் மீதி சொல்லு.
விழி பூத்திருக்கும்
மனம் காத்திருக்கும்
இளங் காற்றே~தென்னங்கீற்றே
எனைத் தழுவும் இளம் பூவே பூவே பூவே.



காலங்கள் நாளை கனிந்து விடும்
காவியமாகி விடும்
சோலைகள் ஆயிரம் பூத்திருக்கும்.இன்பம்
இழைந்திங்கு தினம் தளைக்கும்.
இளங்காற்றே தென்னங்கீற்றே
இன்பத்தேனே.உன்னைத்தானே தானே
நீ ஒரு சேதி சொல்லு

மல்லிகை பூச்சரம் சுமந்தபடி..நான்
மனதெழ நாணம் கொள்ள
மங்கை இவள் கங்கை வழி
மனம் நிறை சாரல் அள்ள
என் நாயகன் தான் வரும் வேளை.எந்தன்
நம்பிக்கை நியமாகும் நாளை
என்ற சேதிகள் சுமந்தபடி
எந்தன் சேடிகள் தூது சொல்ல
நான் காத்திருக்கும்
வழி பாத்திருக்கும் காலங்கள் கனியாக.
நீ ஒரு சேதி சொல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்