செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

வலை வீசி வளைய வந்தால்.

என் வாழ்வில் ஓர் இரவு
விழி வாசலில் ஓர் கனவு
வந்தாள் புது வரவு..என்
வாழ்வில் நீதான் வெண்நிலவு
நிலவு.

விழி மூடிட இமையும் தொல்லை
மொழி பேசிட வழியும் இல்லை
கலி தீர்த்தாள் கிளிப்பிள்ளை
கனிவானாள் மொழி கிள்ளை.
வாசலில் நின் வரவு.இது
இன்பத்தின் புது மரபு.

 Bild in Originalgröße anzeigen







பனி சிந்திட மலர் முல்லை.சிலிர்பாய்
சிந்திடும் என் முல்லை.மலரே
நீயே என் மலர்வு.வாழ்வில்
வந்திட்ட புது வரவு வரவு

இதம் தந்திடும் மென் காற்று.வீசும்
மெல்லிய பொன்மாலை.நிலவில்
கண்ணிமை மூடி நின்றேன்,கலையாய்
பெண்மையே நீ தந்தாய்.வாழ்வில்
வந்திட்ட புது நிலவு.
நிலவும் விழி வாசலில் ஓர் கனவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்