
புலிகள்-ரணில் சமாதான காலகட்டத்தின்போது கனடாவில் இருந்து லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜிம் கரியான்ஸ், டிரக் லீ போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களை வன்னிக்கு அழைத்து சென்று பிரபாகரனுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்களான வைத்திய கலாநிதி சிவாஜி, கணேஸ் சுகுமார், குலா செல்லத்துரை போன்றவர்கள் பிரதானமாக செயற்பட்டவர்கள் ஆவர். தமது பிழைப்புக்காக அன்று புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களை துரோகிகளாகவும், தீண்டதாகதவர்களாக கூறிவந்த இந்த வர்த்தக சமூகம் இன்று வன்னி இறுதி கட்டபோர் மூலம் தமிழினத்தின் அவலத்திற்கு காரணமான அரசுடன் ஊடல் கொள்வது மிகப்பெரும் துரோகமானது.
இது கனடா வாழ் வர்த்தகர்களின் இரண்டகமா?அல்லது பச்சோந்தி தனமா?இல்லை எல்லாமே இப்போ வியாபாரம்.சுயநலமிகளின் சூத்திரம் எப்போதும் இப்படித்தான் இயங்கும்.கேட்பவன் இல்லையென்றால் ஈசலும் ஈசன்தான்.
பலமிழநதோம் பேரம் பேசும் சக்தியும் அற்ற போது எல்லாமே?????
ஆயினும் அற்றதான இத்தனையும் வினையறுக்கும்,விதி என்பது மாறும்.மாற்றப்படும்.