திங்கள், 24 நவம்பர், 2014

கனதி காணும் காலம்!

 நினைத்துப் பார்க்க!
காலம் சென்ற மாஐி ஐனாதிபதி J.R.யெயவர்த்தனாவினால் அமுலாக்கப்பட்ட ஐனாதிபதி ஆட்சி முறையை ஒரு முடிவிற்கு கொண்டு வருவேன் என களத்திலிறங்கிஅதையே தமதான ஆட்சியில் தொடர்ந்து கடைப்பிடித்த மாஐி சந்திரிகா---தற்போதைய மகிந்தா வரை இந்த ஐனாதிபதி ஆட்சி முறையை களையாதது ஏன்?

1.சந்திரிகா நேற்று இறக்கி வைத்த செய்தி தன்னிடம் மூன்றில் இரண்டு அதிகாரம் இல்லையென்பதுவும்,மேலும் எதிர்க் கட்சிகளும் அங்கீகரிக்கவில்லை எனவே தன்னால் இந்த மமதை பிடித்த ஆட்சி முறையை விலக்கும் திட்டம் அமுலாக்க முடியவில்லை.

 2.ஐயா மகிந்த ஆட்சிபீடம் ஏற முன் வழி மொழிந்ததுவும்
ஐனாதிபதி ஆட்சி முறையை அகற்றுவதாகும்.ஆயினும் அவர் அதை நடைமுறைப்படுத்தவே விரும்பவில்லை.ஐயாவிடம் மூன்றில் இரண்டை விட மேலதிக பாரளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் இவ் நடை முறையில் கை வைக்க முற்று முழுமையாகவே ஆட்சிபீட ஆசை விடவில்லை.

3.நேற்றைய பொழுது மகியின் கட்சி செயலாளரும்,பிரதம வகி பாகம் வகித்த (கட்சியின் செயலாளர்)அமைச்சர் மைத்திரிபாலா.ஏலவே போட்ட திட்டப்படி கட்சி மாறி ஒரு பொதுவேட்பாளராக தன்னை அடையாளம் காட்டியதுவும்,அத்தோடு 100நாட்களில் இந்த ஐனாதிபதி ஆட்சிக்கு ஆப்பு வைப்பதாக கூறியுள்ளார்.தான் ஐனாதிபதியாக வெற்றி பெறும் நிலைமை வந்தால்.அதாவது வருவார் எனும் பாரிய நம்பிக்கை(மூலம்--பல ஐ.தே.க +சந்திரிகா அம்மையார் பின்ணணியில் அமெரிக்க அதரவு இன்ன பிற இத்தியாதி அணைக்கும் கரங்களின் அனுசரணை காசு+துட்டு+,மணி,மணி)

4.மேற்படி ஆட்சி கட்டிலில் தூய இன்பம் கண்டவர்களின் சுகத்தை தான்இழப்பாரா?அதாவது் தான ஐனாதிபதி ஆகிய பின் இவ் ஆட்சி முறையை இல்லாதொழித்த பின் அதிகாரம் நாட்டின் பிரதமர் கையில் வீழும்.அதுதானே நடைமுறை.அப்போது ஐனாதிபதி ஆனவர் வெறும் டம்மி தேவை ஏற்படின் அவசர காலத்தில் அதிகாரத்தை கையிலெடுக்கும் ஒரு பிரகிருதியாகவே இருப்பர்.
(யோக்கராகவும் வைக்கலாம்)





ஆக!
வரும் தேர்தலில் வெற்றியீட்டினால் இப்படியான ஒரு ஏதுமற்ற பதவியில் தற்போதைய பொது போட்டியாளர் இருக்க ஆவல்படுவாரா?.
இது யதார்த்ம்தானா?
பதவி கிடைத்த பின் யாபேர்க்கும் இவர் "பெக்கே" காட்ட மாட்டாரா?என்ன நிச்சயம்?எத்தனையோ ஒப்பந்தங்களை குப்பையில் போட்ட வரலாறு படைத்ததுதான் பேரினவாதத்தின் நிலைப்பாடு.
ஆயின் ????
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மு.கு.
எவர் வந்தாலும் ஈழத் தமிழினம் பற்றி அக்கறை காட்டப்படப் போவதில்லை யாராயிருந்தாலும்.
ஆயின் தமிழரின் வகி பாகம்+அவி பாகம் யாது?என்பதை ஒரு மூலையில் முடுக்கி விடாமல் கவனத்தில் கொள்க!
கார்த்திகை மாதத்தில்
எனக்கும்
காரியமில்லாத இந்த
களவேலை.
இனி
கரிகால சந்ததி பதில் வரையட்டுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்