புதன், 12 நவம்பர், 2014

மன்னிக்குமா தமிழினம்?

நீதிக்கு தலைவணங்கும்
நியாயவாதியாக
மகிந்த சிந்தனை
வகுத்ததெல்லாம்
(அ)நியாயங்களை அழித்ததே ஆகும்.

அரச கட்டில் தரும் சுகம்-இனி
எந்த ஆயுளிலும்
மகிந்தருக்கு கிடைக்காது.
நீதியரசர்களை
நிந்தித்தே நீதி வாங்கு(பவர்)

இனி
சாவரும் போதும்
சாக்காட்டிலிருந்தும்
சனாதிபதியாக சாப விமோசனம் பெறுவார்.
இவர்தான்
இலங்கையின்
நியமான
நீதியரசர்..

ஆனாலும்
தமிழர் தம் வாக்குடிவங்கியில்
பசிலிற்கு ஏனோ ஒரு மோப்பம்:
எனினும் ஈழத் தமிழர்
ஏப்பமாய் விடுவர்-அது
தமிழின ரத்த வடுவாய்.
படுவான்கரை முதல்
முள்ளி வாய்க்கால் வரை--






சிந்திய குருதிகள்
கூனிக் குறுகுமா?
காலம் என்னய்யா பதில் கூ(று)தும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்