
நேர் கொண்ட வார்த்தையும்,
நிமிர்வான
வாழ்வும்
தேர் கொள்ளும் உனை தோள் கொளும்.
பார் இந்த பாரில்
உனக்கான வாழ்வை
தோள் கொண்ட
தோழர்கள் யார்?
என்றும்,
மறைமுகத்திற்கு
அப்பாற்பட்வர்கள்-.
இன்று!
புல
வாழ்வில்
எத்தனை அறிவுரை ஆற்றும்
இந்த
முத்திலர்களை
புரிந்து கொள்.
முட்டாள்தனமாக
எத்தனையோ?
முத்திரையிடுவர்.
ஐயா
வினா மட்டும் வேண்டாம்?????
இவர்கள்
யாருமே
எம் நித்திலம் பகிரா பாவியர்கள் .---
அல்ல!
இவர்கள்
பவித்திரர்கள்
ஆம்!?
எமை!
காக்க!
அவதாரமெடுத்த
ஆரியர்கள்.
புத்தி கூறும்
புவித்திரர்கள்.
ஏய்!
முட்டாள்களே!
என்---?
தலைவனை விட
தரமெழுதும் த(ச)ரித்திரர்கள்
ஏற்றுக் கொள்.
மன்னிக்கவும்
நேரமாகுது
பூம்பாவை பாட
போ!
சோரம் போ!
பாடு
விடியும் காலையில்
தேசிய கீதம் பாடு.
அதையும்
சிங்களத்தில் பாடு.
இனி
உன் வாசலில்
திருவெண்பாவை+காப்பெல்லாம் விடுத்து
தேசிய கீதம் பாடு.
பாளி மொளியில் பாடு.
தமிழ்
விட்டு வடு.
இல்லை விடு.
மனிதா!
ஈனத் தமிழா!
இனி
மரம் நடும் வேளையில் அரச மரத்தை மட்டும்
தவிர்த்து விடாதே.
உன்
வீட்டு
முற்றத்தில்
அகதியாய்
மகிந்தையும்,மகிந்தாவும்.
அது சிறீலங்கா!
ஐரோப்பா அல்ல????????