ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

அழகு




அழகு
அன்பு உள்ளம் கொண்டாய் நீயும் அழகு
ஆருயிராய் இணைந்திருந்தால் அழகு
இன்பம் ஒன்றே போற்றவேண்டும் அழகு
ஈதல் ஒன்றே என்றும் எங்கும் அழகு
ஈதல் ஒன்றே என்றும் எங்கும் அழகு

உறவுகளை காக்கவேண்டும் அழகு.அங்கு
ஊக்கம் கொண்டு பேணவேண்டும் அழகு
எங்கும் நாங்கள் காணபதெல்லாம் அழகு
ஏன் என்ற கேள்வி ஒன்றே பேரழகு...
எதிலும்
ஏன் என்ற கேள்வி ஒன்றே பேரழகு

ஐயம் இன்றி படிக்கவேண்டும் அழகு
ஒழுக்கம் கூட்டி ஒழுக வேண்டும் அழகு
ஓயாமல் இயங்க வேண்டும் அழகு, எதிலும்
ஓளவையாரை படித்து நீயும் ஒழுகு.
ஓளவையாரை படித்து நீயும் ஒழுகு

உற்றாரை பேணவேண்டும் உளமாய்.
உந்தன் பெற்றோரை மதிக்கவேண்டும் நியமாய்
சுற்றத்தாரை கவனமாக பேணி..நீ
கற்பதெல்லாம் உவந்து வரும் அழகாய்
நீ கற்றதெல்லாம் உவந்து வரும் அழகாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்