வெள்ளி, 19 ஜூன், 2009

சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.


சொற்பதத்தினுள் உனை செதுக்க சிதைந்தேன்.
மற்பதமாகவே மருக சிலிர்த்தேன்.
உற்பவங்கள் உதிர்க்கும் உரையே,
நிற் பதங்கள் நிலைக்க நிழல்வாயா?

ஆற்பனாக நான் ஆகியே ஆதிர்ந்தேன்.
நூற்பனாக நீ நுகைக்க நுகைந்தேன்.
பாற்பனாக நீ பதிக்க பதைந்தேன்.
வேற்பகனாக உன் வேதினியில் வேர்த்தேன்.
கூற்பனாகி குலவி குயில கூடினேன்.

அற்பனாக நான் ஆகியே அனந்தேன்,
கற்பனாக கனிய கனிந்தே கனித்தேன்.
குற்றாலத்து கொத் தருவியாகி தானே,
விற்பனங்கள் விதைய விரவியவளே.நிந்தன்
பொற்பாதங்கள் பொதியத் தகுமோ?இந்த
சிற்றாளனை சீவிய சிலையே.

வற்றாமல் வருடும் வாரக வதியே.
நற்றாமரையின் நாணிய இதழ்போல்,
பெற்றாள் அவள் தன் பேறு நகையே,
உற்றால் தகுவேன் உற்பவளே.
கற்பாய் என்னை கனிவாய் கற்பாய்.

தற்பன வெல்லாம் தகையே தணிந்தே,
சிற்றறி வெல்லாம் சிலையே நிலையே,
வற்றறியா வகையே வனையே,
பெற்றிருந்தேனே பெருந்தகையே பேறே.
உற்ற உன் உளமெல்லாம் உறுதி உடுத்தே,

கற்பனுக்கு காலம் கலையோ?கடையோ?
மற்றெல்லாம் மறைக்க மறையோ?முறையோ?
விற்பனமெல்லாம் விதமோ? விதையோ?
முற்றெனமெல்லாம் முகமோ? முதிர்வோ?
சுற்றனமெல்லாம் சுகிப்போ?சுவையோ?

சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்