செவ்வாய், 27 டிசம்பர், 2011

பிரான்சில் தலைவரின் ஒளிப்படத்துடன் கூடிய தபால் தலை வெளியீடு.


என்னே ஒரு அற்புதமான சேதி.
மனதில் ஒரு வகை இறுக்கம் தளர்ந்தான,
ஆத்ம திருப்பதி.
பேரிருள் ஒன்றில் ஏதோ ஒரு பொறி தென்படுவதாக
ஆதார்ச நிகழ்வது.

ஆம்!
இன்று பிரான்சு எனும் ஐரோப்பிய நாடானது
தமிழினத்தின் பெருந்தலைவனாம் மேதகு பிரபாகரனது
போர் முகம் ஒளிர
அவர் தம்
ஒளித்தடத்துடன்
தமிழீழத்தின் வரைபடம் முதல்-
அதன் தேசியத் தன்மைகளான-
தேசியப் பூவாம் கார்த்திகைப் பூவையும்,
தமிழீழ தேசியகொடியையும்,
தபால் தலைகளாக வெளியிட்டு எமது பெருந்தலைவனையும்
அதன் தார்மீக போராட்டத்தையும் கெளரவப்படுத்தி எமது தார்மீக போராட்டத்தை,
ஏற்றுக் கொள்ளக் கூடிய புறச் சூழலை உருவாவதற்கான
வெளிப்பாடாக என் கருத்து இங்கு பதிவாகின்றது.

பிரான்சின் தபால் துறை அமைச்சு இந்த தபால் தலைகளை இன்று அதிகார பூர்வமாக வெளியிட்டு வைத்தது.இந்த பெரு நிகழ்வு எம்
விடுதலைக்கு தாயக உறவுகள் இதுவரை சிந்திய குருதிக்கு கிடைத்த ஒரு சிறு
தார்மீக வெற்றியாகும்.

ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்ததானது எம்
முன்னேற்றத்தின் பல தடைகளை ஏற்படுத்தியிருந்தது என்பது வெளிப்படையான உண்மையாகும்.

இதனால் பல தடங்கலுடன் கூடிய போராட்ட பின்னடைவை 2009 வைகாசியில் தேசிய ஆயுதப் போராட்டம்
மெளனிக்க வைக்கும் வரை அகோரமான தன்மையை ஏற்படுத்தியது இங்கு பலராலும்
நினைவுகொள்ள வேண்டிய நிகழ்வாகும்.

ஒன்றை இழப்பதால்தான் இன்னொன்றை பெறமுடியும் என்கின்ற யதார்த்தத்தின் பிரதிபலிப்பு இது.

எனவே இப்படியான புறச் சூழலில் ஏற்படுத்தப்பட்ட அதாவது வெளியிடப்பட்ட தபால் தலைகளை தமிழர்கள் தமதான தபால் மற்றும் பொதிகளை பட்டுவாடா செய்வதற்கு பிரயோகிப்பதன் மூலம் எமது போராட்டத்தின் மறுபக்கத்தை உலக சமூகத்தில் மிக சுலபமாக சென்றடைய வழி வகுக்கும்.

ஆவன செய்ய வேண்டியது பிரான்சில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் சமூகம் ஆற்ற வேண்டிய பெரும் பணியிது.

நன்றி.

ஞாயிறு, 4 டிசம்பர், 2011


எங்களின் தேசத்து தேசியக் கவிஞனிற்கு
இன்று அகவை ஒன்று கூட
அகம் சிலிர்க்கின்றது.

வரைய எந்த வார்த்தையும் வகையவும் இல்லை.
வையகத்திலும் இல்லை.

மெளனமே வார்த்ததைகளாக.
என் மனம் யாகிக்கும்
புவனத்தின் மெளவலில்
இந்த வலி மறையாதிருக்கும்.

இது ஏற்றும் மறையே!
விடியலில் வீதி திறக்கும்.
ஆளில்லா இடத்தில் எந்த அரவமும்
அகம் சொரியாது.

தாளில்லா தடயம்
பெரு மூச்சே ஒரு புலமாக புயம் தழுவும்.
ஈழப் பெரு வீச்சே!
நீ ஏற்றிய புரட்சி வரிகளில்
ஈழம் நிமிர்வெய்தும்

வலைப்பதிவு காப்பகம்