வியாழன், 29 அக்டோபர், 2009

பிரிகேடியரின் பிரம்மங்கள் பிறவிக் கடனாற்றும்.


முரசேந்தி நின்றவன் ஈழ முகிலவன்,
பகலவனின் வாரிசாக வசம் தரித்து வகைந்தவன்,
உலக வலவில் உண்மைகளை உறுத்தவன்-,மிகையிலா
பலமதில் பாதை விரித்து பரந்தவன்,
செவ்வனச் செல்வன் எங்கள் சேந்தல்களில் இளையவன்,
இனியவன் இலங்குவதிலும், இழைவதிலும்,
ஈடில்லா ஈர்ப்பவன்,நூர்த்தவன் பாதைகளை
நுகை முகை புன்னகையுடன் பூத்தவன்
மிகையில்லா மிடுக்குகளை மிதமாகவே தரித்தவன்,
தமிழ்ச் செல்வனவன்,தார்மீகச் செல்வனவன்.

பிரிகேடியர்,
பிரிவதை தவிர மார்க்கம் மாற்றில்லையென
உரிமையுடன் உலக வலவில் உறுதியாய் உரைத்தவன்,
பரிவவன் பாதையெலாம் புவனம் பூபாளம்தான் புனைய
புன்னகையாலே புலவுகளை புதித்தவன்,
உதித்த திசையெல்லாம் தித்தித்தவன்,
மதித்தவன் மதியின் மரபில் மாண்பின் மனைப்பில்
கொதித்தவைகளை கோலம் கோர்த்தவன்.
ஆதலால்தான்!

எதிரியின் ஏவுகணைக்குள் எள்ளளவும்
தினையாமல் ஏற்றமாய் பிழைத்தவன்,
ஆரியனிற்கு அனலவன்,ஆர
அணைப்பவர்க்கு அனந்த களிப்பவன்,ஆக
இன்னமும் எதிரிக்கு கொள்ளிக் கண்ணாய்
கோலம் அளித்தவன்,

எனவேதான்!
எங்களவனை
எப்படியும் எரிக்க எதிரி முகாந்திரம் முச்சூடும் சூட்ட
தப்பாத தளத்தில்கூட தகமையாய் தப்பித்தவன்.
உப்பிட்ட உளத்தைக் கூட எங்கள் உறவுகள்தான்
உருவழிக்க என்ன மனம் காவி எதிரியில் சரணடைந்தானோ?
பாவி,பரதேசிகளின் பாங்கு எங்கோ,எப்படியோ அரணமைக்க
எங்கள் செல்வன் ஏகாந்த தேசம் நோக்கி அவன்
அறுவருடன் ஈழப் பரப்ழுக ஏகினான்.

அண்ணலே!
ஆரோக்கிய அகத்தவனே,இந்த
இகத்தில் ஈரடி இலக்க மூவடி சறுக்கும்,
முகத்தில் ஈரூடக பாய்ச்சலாய் ஈர்த்தவனே,
தகத்தில் அதன் தளத்தில் என்னே பரப்பளவேந்தினாய்,
பெரும் பாய்ச்சலின் பரமம் நீ-இன்று ஈராண்டு
இலக்கெய்ய ஈழத்தில் எத்தனையோ
இழவுகள் சுமந்து நாம்,ஆயினும் உங்களின்
உறுதியான உலைக்களத்தில் உந்தன்
நினைவு நீவி நாம் நிமர்வெய்வோம்.

தலைவனின்!
தார்மீகங்கள் தளராத பீறு நடை பிறளாமல்,
ஏந்த புலத்தில் புவியில் பூப்பெய்ய-நாம்
உன் சந்தங்களின் சாதிப்பில் சலியாமல்
சகமேற்றுவோம்,
நிச்சயம் சாதிப்போம்,
நிலப் பரப்பில் எங்கள் முகாந்திரம்
முத்தெய்யும்வரை.
அன்று உன் ஆசிகள் அனந்தம் பெறும்,
வனப்பெய்யும்,
வரம்புகள் எங்கள் வயலாக.

செவ்வாய், 27 அக்டோபர், 2009

பெளதீகம் தர்க்கிக்கும் தாக்கம் தரமேற்ற!


ஏமாற்றும் ஏற்றம் தோற்றம்--யாரை
ஏமாற்றவும் இந்த தேற்றம்,
ஊற்ற,ஊற,வீற்றும் வித்தகம் நாளை
உலகறிய எல்லாமே?ஏளனம் சொட்டும்.

காற்றுக்குள் கூடு கட்டும்
மார்க்கம்
எந்த மையத்தில் மனிதம் ஏற்கும்?
மீள் குடியேற்றமென்ற ஏமாற்றும்
கொற்றம் மகிந்தாவின் ராஜதந்திரம்.
தூற்றுகின்ற துர்க்கன் துகிலுரித்து,
தூர் துவைத்து துளை போட்ட துலாம்பரம்-ஏன்
இவ் வையகம் வாய் பொத்தி மெளனம்?

இளைஞர்கள் இளம் தலைமுறைகள்
இன்று காதகனின் கைகளில் கனதி இழந்து
சான்று யார் சார்த்தார்கள்,கேட்டார்கள்-இவர்
சா“ விளிம்பில் சாகா வரம் பெற்றதை-எந்த
சாத்வீகர் சாகரம் சாய்த்தார்?

ஏய்!
ஐரோப்பிய அறிவாளிகளே,
உன் வரிச் சலுகைக்குள் இந்த வைரிகளை
மடக்கும் மார்க்கம் அறியாயா?ஏன் எங்கள்
உற்றங்களின் சாவினிற்கான உற்பவம் உரக்கக் கேளாயா?
நீதிகளின் காவலர்களே!,
மனித உரிமைகளின் மையர்(ல்)களே!
வெறும் சல்லிக்காசு சதைப்பதற்காக எங்கள் இளவல்களை
ஈனச் சாவாக்கிய,இரக்கமற்ற இருளர்க்காக,

எங்கள் “சா“ மேட்டில்,
உங்கள் சகவாசங்கள்,
வியாபாரிகளே,
வெறும் கஞ்சிக்கும்,மருந்திற்குமா,
வன்னி மக்கள் வ(சு)யமிழந்து தவிக்கின்றார்கள்?
ஞாபகம் உண்டா-
ஹிட்லரின் விச மாடங்கள்?
இருந்தால்!
எங்களை இந்த ஊனத்திற்கு உள்வாங்கியவனை
ஐ.நா மன்றில்
நீதியின் மடியில் நித்திரை நீவ-நீவிர்
நித்திலம் அமைக்கலாமா?

எங்கள் „மா“ விதைகளின்
விரையழிப்பிற்கு என்ன மாதவமாற்றப் போகின்றாய்?
எங்கள் மாநிலம் விரிய இன்னமும்
எத்தனை விதைகளை
ஈகமளித்தும் எங்கள்
மான நிலம் சமைப்போம்,
மார்க்ங்களின் ஈரத்திற்கு ஈகமாய் என்ன
கோர்க்கப் போகின்றாய்?
தர்மம் தலை நிமிர,
தமிழீழம் தரணி தரமேற்றும்.

வியாழன், 22 அக்டோபர், 2009

சில்லென்ற சீவிதங்கள் ஈழ மலராய் ஈடேறும்.


திண்ணிய நெஞ்சினர்,
தினவெடுத்த தலைவனின்,
நுண்ணிய பார்வையின்,
நுனிவரை சென்றனர்.
எண்ணிய காரியம்-
ஏற்றியே முடித்தனர்.
எரி தழல் மீதிலோர்-
காவியம் தீட்டினர்.

எதிரியின் ஏற்றத்தை-
உதிரியாய் உதிர்த்தவர்.
குருதியின் குதத்திலே-
கூரிய களத்திலே-
பருதியாய் படித்தவர்.பாரினிலே,
ஈழப் பாரினிலே விடி வெள்ளியாகினர்,
புரவியின் பாய்ச்சலாய்-
பரவியே பனித்தனர்.
இரவின் மடியிலே-
விடிவினை விதைத்தனர்.

வார்த்தைகளின் வகிடுக்கப்பால்-
வைரமாய் வகைத்தவர்,இவர்,
ஈகையின் தொழுவம்,
ஈழப் பாதையின் விட்டம்,
விஞ்சமுடியாத வீரியத்தின் தொகுப்பவர்.

ஆற்றலே,
உறுதியின் உரமே,
மாற்றங்கள் இன்று ஈழப்பரப்பில்,எனினும்
உங்கள் ஈகங்களின் தாகங்கள் தரணியெல்லாம்
தாக்கமாக,
நாளை இந்த தோற்றம் மாறும்,
எங்கள் ஆதவன் உயர்த்திய ஈழக் கொடி
தங்களின் தியாகத்தின் தீப்பிழம்பில்
உலகப் பரப்பில் உத்வேகமாக உயரப் பறக்கும்,

ஞால கதிரதில் அன்று இந்த ஞானியரின்
ஞான விழா,
ஞாயிறாகும்,ஞாயங்கள்
ஞானம் தவிர்த்து நீர்ப்படையாது,

உங்கள் நிறங்களின் உரங்கள் தாகங்களை
தாற் பாரியமாக்கும்.தர்மம் தலை தவழ்வதாக
பவனி என்றுமே பார் மேயாது.
ஈழம் மலர்ந்த பின்பும்-உங்கள்
ஈகங்கள் செழித்தே ஓங்கும்.
கல்லறை மேனியரே உங்கள் களிப்பில்
சில்லென்ற சீவிதங்கள் ஈழ மலராய் ஈடேறும்.

என்ன சாகசம் காட்ட சாசனம் எழுதினான்?


உள்ளம் உறையும்?
உறங்கா உண்மைகள் உயிர் கரிக்க,
உபரிகளாகும் உயிர்களின்
உன்னதம் உறக்குமா?
சின்னங்களேந்தி சிதைக்கும் சின்னத்
தனங்கள்-எங்கள்
வண்ணக் கனவுகளின் வரைபுகளை வறுத்தெடுத்து,
ஈனத்தனம் ஈற்றும் இந்த இழி பிறவிகளை,
என்ன தனம் கொண்டு கறுத்தலாம்,

இன்னமும் எத்தனை உறங்கா!
உண்மைகள் உறவரிக்கும்,ஊன
சிங்களனின் இந்த சித்தத்தை,எந்த
மத்தையில் போட்டு மகுடமெரிக்க,
வித்தகம் விதற்றுவோம்?கண்கள்
ஒத்தடம் ஒதுக்கும் ஓர் விழி கரையும்,
நீர் வரைந்த இந்த நிலவுகளை,எந்த
கானத்தில் வைத்து கழுத்தறுத்தானோ?

புத்தனிற்கு அபிசேகம் எங்கள்
புண்ணியரின் குருதியிலென்றால்
புத்தனும் கூட சித்தம் மகிழ்வானா?
தித்திக்க,திகட்டாமல் எங்கள் சதைப்பிண்டங்களில்
என்ன சாகசம் காட்ட சாசனம் எழுதினான்?
விகாரையின் விகாரங்களில் விக்கிப்பதெல்லாம்
முகாரி விக்கும் வினயமாற்றும் தமிழ் குருதியன்றோ!

என்றோ ஒர் நாள் விடையிறுக்கும் என்று
மன்றாடி எங்கள் மானம் மறைக்கும்
மார்க்கம் வேண்டாம்,
நின்றறுப்பான் நித்திலனென்று நிழல் ஒதுக்கும்
மன்றத்தை விலத்தி,
கொன்றறுக்க கோர்க்கும் கோகிலத்தை கோர்ப்போம்,

அன்றேல்,
நாளை இது உன் வாசல் வந்து
வசந்தம் வரைக்கும்,
உன் வாசத்தை
சீழாக்கி, சூழாக்கும் சுரம்தான் சுரக்கும்,
உறவே!
உறங்கும் இந்த உபாதைகளை ஊர் பரப்பு,
கிறங்காத உந்தன் உறுப்பமை,
விரைவில் விடியல்!
இல்லையெனில்?
விதையெல்லாம் நுரை தள்ளும்
விரையின்றி விதையில்லை விகல்பகற்றி விரிவடை.

வியாழன், 15 அக்டோபர், 2009

தினம் மென்னி கிள்ளும் மேனியரை!


உலகெங்கும் ஓலங்களாய்-எங்கள்
வலம். இது என்ன சீலம் என
கலம் நோகும்?உள்ளம்
உவகையை மறந்து பள்ளத்தில் பல நாட்களாய்-
எந்த,
பாசாங்கும் அற்று விசும்பும்
எண்ணற்ற உறவுகளின் தாகத் தவிப்பில்
தரணியில் தமிழர்,

உலகப் பரப்பை நிரப்பவா நாம்?
திலகம் இட்டுள்ளோம்,
நிலவாதா?
வசந்தமென நீட்சிக்கும்
நயங்கள் என்று நார் கோர்க்கும்?
கலகமென்று முன் காதை விட்டார்,
இன்று!
நிலக் கிளிகளாகக் கூட கூடின்றி
புலம் பெயரும் பூப்புக்களுள் எங்கள்
கோமேதகங்கள்,

கனவாகாத
எங்கள் வயல் மீட்டிருந்தால்???
நிலம் நீட்டி இருந்தால்!! இந்த நிலை
ஈய்ந்திருக்குமா?
ஈனம் இழைந்திருக்குமா?
இல்லை,இந் நிலை
இலங்கித்தான் இருக்குமா?

புலமே!
நீ
மெல்லுவது போல் உள்ளத்தை கரைசலில் தோய்த்து,
எங்கள் கனதியை குறைக்காதே.
இல்லாத திருநாளை உன் கலசத்தில் ஏந்தாதே.
மெல்லக்கூட வழியின்றி எம் இனம்
தினம் மென்னி கிள்ளும் மேனியரை
அவர் ஊனம் உலகாக்கி,
எங்கள் தள மைந்தர்களை
அவர் சுயமூட்ட,
தரமாக்க உற்ற தகமைகளை கரம் பற்று.

நிலமே,
எங்கள் வளமே,
நலமாக்க நல்ல ஞாயம் வகி,

புலமே!
சூலம் ஏந்தும் சூத்திரத்தை சூடு நீக்கி
ஞாலமேந்த இன நமைச்சலை நா`` விரி,
கீலங்கள் தான் விலக்கி
சீலங்கள் தான் சுமக்கவே!பகை
முகாம் சூடு விலக,
சீரியமான சிந்தையை கரம் கொள்-ஆரியன்
காரியமழித்து எங்கள் காலம் வெல்ல.
ஊர் வலம் வா.
தமிழர் பேரவையின் தாற்பாரியத்தில்
தகமை வகி,
இளையோரின் இலங்கலை இயைந்து கை கொடு
இலங்கட்டும் உன் ஈடிணையற்ற இருப்பு.

திங்கள், 12 அக்டோபர், 2009

வல்ல பகையால் எங்கள் வாசல்!

இலங்கிடுமா இவர்களின் இயலாமைகள்,
இந்திய காங்கிரசின் இலக்குகள்
இனியும் மறக்குமா?
ஈழத் தமிழனவன்னிற்கு
இன்னல்கள் இலக்கிய ஈனர்கள் இன்று
எந்த முகம் ஊக்கி எங்களவர் அகதி நிலை
ஆய வந்தார்.இல்லை வேய வந்தார்?

இன்னல்கள் சூழ முன்னர்
என்னவெல்லாமோ நாம் இரந்து நின்றோம்,
சொல்ல நாக்கூசும்,
நினைக்க மனம் கூசும்.

நாம்!
நெக்குருகி புழுவிலும் கேவலமாய்,
உக்கி உருகி செத்தழிந்த போதெல்லாம்,
செவிடராய்,
ஊமையாய்,
குருடராய்
குனுகி இருந்த இந்த குன்(ற்)றமெல்லாம்,,,

இன்று
எந்த மென்னியை அறுக்க
எங்கள் மேனியை நனைக்க வந்தார்?
எந்த
கோலம் கொண்டு எங்கள் கோகுலம் ஏகினர்?
என்னதான் இவர் எத்தனை வேடம் போட்டாலும்
இவர் வந்ததால் எந்த ஏணமும் இழையாது,
இது
முந்தையர் ஆண்டது போல் நாம்
மீண்டும் எம் மண்ணை
ஆளாமல் எந்த விந்தையும் விழையாது,
சிந்தை இவர் நிச்சயமாய் இந்த
வீச்சள்ள எண்ணார்,

மகிந்தாவின் குதம் தடவி மக்கள்
சுகித்த பெரு வாழ்வெய்தார் என்றே
நாளை அழகான விதை தூவுவார்,

காங்கிரசின் கைப்புண்கள்தான் இன்று எம்
வீரர் கால் பட்ட வீரியமான விளை நிலத்தில்!
எந்த காரியமும் இவன் காத்திரமாய் ஏந்தாமல்
பந்தம் அவர் வாழ்வில் பவ்வியம் காத்திடவே,
வெந்த எம் புண்களில் வேலேந்தி கீறும்
சந்தனத்தையே இவன் சாதகமாக சாத்துவார்,

இருந்து பார் இனமே,
இராணுவத்தின் முற்றுகைக்குள் எங்கள் மக்கள்
எந்த மூலிகையை இவர் முன் ஏற்றுவார்,
இந்த அரசியல் நாகரீகம் தெரியாதவரா?
நாம் என்ன இன்னமும் பாமர மக்களா?
சுயாதீனமாக எந்த சுந்தரத்தை சுகிக்க அவன்
இங்கு வந்தான்?

டீ,ஆர் பாலு!
கோடரிக்காம்பின் கொற்றம் இவன்,
இந்திய அரசியலின் விந்தையை அறிவர்,
ஈழ மக்கள் மட்டுமா,இகத்தில்
இளையவரும்,எம் மக்களும்,
இது புரியாத பரி பாசையா?
கருணா நிதிக்க ஒரு வெற்றுத்தாள் கொடு,
இனி புதிதாக ஒரு பா`` பாட,

சேவகரே!
கருண கரத்தின் பாதகரே,
அந்த சேந்தலிற்கு ஒரு
மடல் கொண்டு வாரும் தன்
உடன் பிறப்பிற்கு ஒரு ``மா`` காவியம் சொருக
இவரால் ஈழத் தமிழினம் புளகாங்கிதம் பூண்டதாக
ஒரு உண்மையான சேதியை உறவுகளுடன்
பகிர்ந்து கொள்ள.

மகிந்தாவின் மகிமையை இவர் தேசம்
மொள்ள உடன் ஒரு வெள்ளைத்தாள்
சூரிய உதயத்திற்கு முன் இவன் முன் தாள்
தாள் பணி.
தாடையைத் தடவி நீ என்ன எழுத
திண்ணமாக எண்ணம் கொள்வாய்,
நாளைய முரசொலி வாசி
அப்புறம் சுவாசி.

ஞாயிறு, 11 அக்டோபர், 2009

எங்கள் எதிரிகளின் கைக்கூலிகள்!

எள்ளி நகையாடுது!
எங்கள் எதிரிகளின் கைக்கூலிகள்,-தம்மையும்
தமிழரென்றே தரம் வேறு தார்மீகமாம்-எது
ஈழ விடைதலையின் பால் ஏகம் கொள்ளும்?-எதிரி
தன்னை ஏந்தும் இந்த வக்கற்ற கூட்டங்கள்-எந்த
வைடூரியத்தை எங்கள் மனவிருளகற்ற
மா`` விளக்கேற்ற போகின்றார்கள்?

ஆட்சியில் எந்த ஆர்ப்புக்களும் எல்லாள
காட்சிகளை கானம் ஏற்றாது.
மாட்சிகள் எங்கள் பரப்பில் என்றும் ஏந்தும்,
சாட்சிகள் எல்லாம் இன்று சரணாகதியாய் முகாம்களில்
வாயடைத்து,வயிறடைத்து,மூச்சடைத்து
எங்கள் முத்தாரங்கள்,
எந்த மூலவன் இவர்
கையறு நிலையை காத்திரமாய் கானம்
ஏற்றுவார்?

ஒற்றுமை அகன்ற எம் உறவுகளே!
ஒற்றும் இந்த ஓனம் ஒகர-நீ
ஏற்றுவாயா? தமிழ் ஒற்றுமையின் சாகரம்,
இல்லை உன்னால் அது என்றுமே இனி-இந்த
தளம் தகிக்காது.ஏனெனில்
வல்லாளன் பிரபாவின் வனங்கள் இந்த
பார்ப்பனர்களின் பாதையால் பரப்பிழந்து-
மீட்சிகள் எல்லாம் வெறும் காட்சிகளான பின்கூட-நீ
சாட்சிகளகற்றும் சாரளத்தில் தான் இன்றும்
எம் எதிரியின் கைக்கூலியாய் அவன்
கானமிசைக்கின்றாய்-போலிக்கு பிறந்த
போக்கற்றவர்களாய் அரிதாரம் மிக அழகாக,

மீண்டும் உங்கள் அகத்திற்கு ஆழமாய்
அறைந்து ஆரமிடுவது,
ஆயுத போராட்டமே மீண்டும் எங்கள்
களம் கனதியாக வேண்டும்,
தோல்வி என்பது எங்களின் படிக்கட்டுக்களாய்
தோழமை கொள்ள வேண்டும்,
அழுதலும், தொழுதலும் எந்த
ஆளுமைகளை அரங்கேற்றாது,
விழ,விழ எழுதலே எங்கள்
வலுவான வையகம்-இதை
மெனமையாய்,மேன்மையாய்
மீள மீண்டும் அகக் கொள்
ஆளுமைகள் மையம் தரிக்கும்,
ஆற்றல்களை இனி ஆதரவாய்
தேற்றி தோற்றம் கொள்,எங்கள்
பகலவனின் பாதம் எங்கள் பரப்பேந்தும்,
புவியே!

பிரபாவின் பிரம்மங்கள் களம் மீட்கும்
காலத்தை நாம்தான்
கலயமேந்த வேண்டும்-இனி
இழத்தல்கள் அற்ற இருப்புக்கள் வலயம்
இருத்தும் வன்மங்கள் வாகையாய்
தரமேற்றும் அந்த தாளங்கள்
உரமேற்ற உவகையாய்-உன்
கரமேந்த கருவிகள் களம் மொள்வோம்,

ஈழத் தமிழம் தகமேந்த
வேற்று வழி நிச்சயமாய்-அந்த
நரகத்தில் இல்லை,ஆற்றாமையை
அகமகற்று,கால வெள்ளம் இந்த
கலயத்தை மிகவும் நேத்திரமாய்
உந்தன் சூத்திரமாக்கும்,
நிச்சயமாய் இதுதான் நீதி பகற்றும்,
இது காலத்தின் கட்டளை,

ஸ்ரீ லங்காவில் என்றும்
சீதளக் காற்று வீசாது,எங்கள் களமெரிந்த
அந்த கலசத்திற்கு காத்திரமான
ஒரு முடிவேந்தாது எந்த ஒரு முச்சூடும்
முகிழ்வுகள் அதன் முற்றம் முகராது,
இது கால வெள்ளத்தின் கனதியான
கட்டளை,
இகமே!
இருந்து பார் இது ஈடேற்றாமல்
வையகத்தில் எமக்கு எந்த மூச்சுக்
காற்றும் முத்தாரம் சூட்டாது.

சரிசாசனம் சாத்தாத சங்கதிகள் இனி!

நமைச்சலின் நச்சரிப்புக்கள்
அமைக்குமா ஆனந்தம்?
குமைக்கும் குதங்கள் குங்கிலியம்,
கூட்டுமா?
எமை எமைத்தவன் அமைத்ததே
சமையலாகும்.
சாயல் இனி
எரிமலையாய் எழுந்தல்
உளம் சரிக்கும் சிங்களம்.

சரிசாசனம் சாத்தாத சங்கதிகள்- இனி
எந்த சாலையையும் சாராது.
உரிமங்களின் உரியாசனம் உலவாததால்,
பரிமாணம் பாற்றும் பகலவ பாதைகள்,
கரிசல் காட்டு கட்டமைக்கும் கனதிகள்,
விரிசலகற்றும்.
எங்கள் விபரம் விரிக்கும்.
புரிதல் இனி சகாயம் சதைக்கும்.
எங்கள் விரிதலின் வினைகளை வினயமாற்றும்.
பரிமாணங்கள் நிச்சயம் தரிசனமாக்கும்.

எரிந்தவைகள்!
எழும் ஏகம் கரிக்கும்.
சிரித்தவைகள் இனி சிந்திக்கும் முன்
இவைகளெல்லாம் புரிதலின் புன்னகையில்,
மரித்த மார்க்கம் சில் ஊடகத்தில்,
மீண்டும் பணம் பண்ண பண்ணசைக்கும்,
இந்த கூட்டங்கள் தங்கள் கூத கைகளை
கூச்சமின்றி மாற்றியோர் மாரணைத்து
மாமன்றம் மாற்றுவார்,
இவை அன்று போலவே என்றும்,

இன்றும்!
இவைகளில் மாற்றம் என்ற மாற்றம்,
என்றும் இணைந்திருக்காது.
மனிதாபிமானங்களே என்றும்
மாற்றங்களுடன்
கற்றகமாக வீரியம் சூட்டும்.

தோற்றமே இல்லாத மாக்களிடம் எங்கே
தேற்றமான தேர்விருக்கும்?
இவர்கள்
எங்கள் எரிதணலிலேயே தங்கள்
அடுப்புக்களை ஆனந்தமாக ஆலிங்கத்தவர்கள்.

வெள்ளி, 9 அக்டோபர், 2009

உராய்வான எதிர் தடைகளின் ஆரமாக!

நிலவு சுடும் நெருப்பாக,
என் உணர்வகள் அதன் பாளங்களாக,
சீதளக் காற்று சில்லென்று வீச,இந்த
வேதனைக் காச்சல் கொல்லென்று,
மனம் காய்ச்சும்,

செய்திகள்!
சிந்தை வெள்ளத்தை தடம் புரட்ட,
விழ,விழ எழுந்த வீரியங்களை,
அப்படியே பாடையேற்றவே,
காதர்களுடன்,பாதகர்களும்,

விழுந்தவனை மாடு ஏறி மிதிக்குமா?
அழுந்தவனை ஆரியன் அப்படித்தான்,தன்
கொழுந்துகளால் கொல்கின்றான்,ஆக,
ஐந்தறிவு சீவனுக்குள்ள ஆளுமைகள்.
ஆற்றிவு சூடியதாக ஆர்க்கும்,அந்த
அங்கத நாட்டவனிற்கில்லை.

இது!
இன்று,நேற்று நோற்ற பாடம் இல்லை.
ஆனால்,
இன்னமும் இந்த ஈனத் தமிழனிற்கு ஏன்
புரியவில்லை?
அன்றே,
அல்லது,
பார்த்திபனின் பாதக் கமலங்கள்,
பாடை விரித்த போதாவது,
பாதிப் பேரிற்கு புரிந்த இந்த
மார்க்கம் ஏனோ?
இல்லையில்லை,
சிலரிற்கு புரியாமல் இல்லை,
எதுவும்
புரி விக்கவம் போவதுமில்லை.

தன் நயங்களுடன்,தன்னலங்களை
சூடினால்,அது
பொது நலமாகி விடுமா?
அப்படித்தான் சில தலைகள்
வலைகள் யாத்தன,
இன்னமும்,
அதே குட்டையில் யாக்க முனைகின்றன.

ஓடும் ஓட்டத்திற்கு தடை எப்படியோ,
கடை விரிக்கத்தான் கோகின்றது.
உராய்வுகள் என்று அதை நியூட்டன்
விதிகளாக விபரித்தது,
இயற்கையின்
இயங்கலது,
இயற்கைக்கே இந்த மூலம் விதி விலக்கல்ல,
ஆயின்
செயற்கையாய் இலங்கும்
இந்த செம்மறி கூட்டத்திற்கு?

பெளதீக பாடத்தில் மட்டுமல்ல-எங்கள்
பெளதீக மாடத்திலும் தான்,
சில இழப்புக்கள்தான்,
இந்த
உராய்வான எதிர் தடைகளின் ஆரமாக
ஆக்கமான பல இழப்புகளும் பங்கெடுத்தன,
இல்லையேல்
உருளும் பொருள் இடைஞ்சலின்றி
என்றுமே
ஓடுதளத்தில்

எந்த
மையமும் இல்லாமல்,
ஆரை என்ற குப்பில்லாத,
எந்த விட்டமும் இல்லா வீதியின்,
ஆடுகளம் இல்லாமல் இயங்கிக் கொண்டே
இகம் முழுவதும்.

நடை முறைக்கு
எதுவும் சாத்தியமற்று
சாலை விரிக்காது.

செவ்வாய், 6 அக்டோபர், 2009

தடையின்றி விடை இறுக்கும்..

சொல்லிற்குள் இல்லாத சொரூபங்கள்
மல்லுக்கு நிற்தில்லை.
வில்லுக்குள் என்றுமே அம்பு தூங்குவதில்லை-அது
கொல்லுமிடம் ஆர்த்தே கோலம் மொள்கின்றது.
வினைப்பவன் வினையாற்றமுன் வித்தைகளை,
தினைப்தில்லை,
காலம் நேரம் காத்திரம் கோலும்.
கனிந்துவர காத்திருத்தல் அவசியம்,
வேட்டை வெறும் வேட்கையல்ல-அது
கோட்டை விடாத கொலு வீற்றிருக்கும்.
பாட்டை பரிந்தெடுக்க பாத்திரமான,
பகுப்புக்கள் வேண்டும்-இது எல்லோர்க்கும்,
எந்நேரமும் கைகூடுவதில்லை,இதன்
நேத்திரங்கள் நெய்தலிற்கு அப்பாற்ட்டு,
தோத்திரங்களின் தோழமைகளை களைந்து,
ஆளுமைகளை மைக்கவேண்டிய கனகச்சிதமானது--,இதில்
கனிவுகள்கூட கால வெள்ளத்தால் களையிழந்து
போகலாம்.
பொங்கும் பொதியல்கள் குவியத்தை குறி
வைக்கும் போது கலயம் உடைவதுபோல்—உடைவது
கலயம் இல்லாமல் காவல்களே களையானால்,
எரிப்புக்களின் தகிப்புக்கள் அதிகமாக,அதிகமாக
அடுப்பே அனல் தாங்காமல் அழிவு நெய்தால்,ஆம்

எரிதலிற்கும் அளவு வேண்டும்-அது
எரிவாய்வாக எங்கள் களம் தீய்ந்தது,
பொஸ்பரசு எரிகுண்டாய் எங்கள் கனத்திரர்கள்,
பொசுக் குண்டாய்-----

எதிரி உண்மையில் வலுவுள்ளவனானால்,
நேரடி மோதலிற்குள் முகம் பூக்க வேண்டும்,அஃதின்றி
அயல் அட்டைகளுடன் அவனதன் ஆதிக்கத்துடனும்
களம் பொருதுதல் எந்த நீதி,நியமனங்களிற்கும் ஆகாது,
மனு நீதி என்பது நியமான போராளிகளிற்குள்ளேயே
குடிகொண்டிருக்கும்,அது
அற்றவனிடம் எதுவும் ஆற்றுமை மையாது,
அதுவும் ஆரிய வெறியனிடம் எந்த
வேதமும் வெயில் அள்ளாது.சிங்களவனிடம் எந்த
சிந்தையும் போர் முறை தழுவி இல்லை.
புணருதலிக்காய்,தமிழரை கொல்லுதற்காய்,
பிரேதத்துடன் பிதிராற்றும் பிடையர்கள்.

எல்லாமே நடந்தது எங்கும் பிணக்காடு,எங்கள்
பூமி ஒட்டுமொத்தமாக இத்தனை மைந்தர்களை,
எதிரியின் எத்தனத்தால்
மிகவும் பாரத்துடனேயே தன் பாயேந்தியது,
கருகியவர்கள்,காயங்களுடன் முனகியவர்கள்,
வயது வேறுபாடற்ற சமரசமாய் சாவு இவர்களை
ஆரியனின் கணக்கில் ஈடேற்ற இறுமாப்பு இந்தியனாலும்
இழைப்புக்கள் இலங்கியது,இல்லையில்லை,ஏதோ
ஒரு வகையில் அறவிடமுடியாக் கடனாக எங்கோ
ஒரு குரல் தன் குலம் காத்ததாக,கர்மம் ஆற்றியதாக
குரல் ஒடுக்கி நீலிக் கண்ணீர்-----???

உரிமக் குரல் உரிமைப்போர் உறவுக் களைவுகளால்
தன் இயக்கத்தை மாற்றி வழியின்றி மொளனித்துக் கொண்டது,
இது தாற்காலிக ஓய்வே நிச்சயமாய்,---ஆனால்
இதில் காலங்களின் காற்றசைவை எவரும்
கட்டியம் கூறமுடியாது,எனினும் அந்த ஈடிணையற்ற
தாகம் மீண்டும் தன் தவிப்பை தரணிக்கு தாக்கமாய்
தரவேந்த போகின்றது.

மொளனமான புயலாகவோ,அன்றி
மரண அவலத்தின் கடன் தீர்கும்,
புனலாகவோ ஏதோ ஒன்று இன்றோ,நாளையோ,
அப்போது தரணியே பார் புலத் தமிழனில்
புரையோடிப் போயிருக்கும்,அந்த
ரணகளங்கள்
ஒப்புவமைக்கு அப்பால்
இனி தடைஓட முடியாத புரவியாய்
தளம் அமைக்கும் தமிழரின் தாகம்
தடையின்றி விடை இறுக்கும்..

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

என்ன கொற்றம் கொள்வாய் என் கோகுலமே?

கருணை கொஞ்சம் வேண்டாதார்-எந்த
கருப்பையும் மனதில் தீண்டாதார்,
சுரணை மிஞ்ச சுரம் திண்ட சோகியவன்-எந்த
மரணையும் மருட்டி மகிழ் வெய்வார்,

பொருளை பிறன் பொருளை
காவு கொள்ளும் கடனாளி-சொந்த
மருளை மனதால் ஒறுத்து நிற்பான்,மீண்டும்
சரளை வீசும் கல்லாக அவன் கனவில்
தனியே தவித்து நிற்பான்.

ஒருவன் பொருளை மனதாலும்
சிறுமை பொங்க சுரண்டுபவன்,
கருமம் மறைந்தே மகிழ்ந்திடும்-இந்த
மார்க்கம் என்றும் நிலைத்திடுமா?

கற்ற கல்வி கலந்திட்டால்
பெற்ற யாவும் கலந்திடவே
மற்ற மக்களை மனம் கொள்ளும்,
உற்ற துணையாய் உறுப்பமைப்பான்,

ஆதலால்,
கல்வி ஒன்றே காலமெல்லாம்
உலவி உந்தன் உறவு கொள்ளும்,
நிலவும் இந்த நிலைகளை நீட்சி கொள்ள
புலவிலும் கல்வி கல்,ஏந்தி நிற்பாய்.

எனவே,
எந்த நாட்டில் வாழ்ந்தாலும்,
அந்த மொழியை நிறைவாய் கற்றிட்டால்,
பொழிவு உந்தன் வாழ்வாகும்-நல்ல
கொழிவாய் நாளும் அகம் மொய்யும்,

தங்கி வாழ்வது வாழ்வல்ல-நீ
தாங்கி வாழ்வதே வாழ்வாகும்,
தூங்கி விழித்தால் தூபம் இல்லை-இதை உள்
வாங்கி உவப்பாய் உலவிடுவாய்.

பிச்சை ஏற்கினும் கற்றல் நன்றே,
உச்சமான வார்த்தையிது,
கொச்சை படுத்தி வாழ்வதிலே- என்ன
கொற்றம் கொள்வாய் என் கோகுலமே?

மிச்ச நாளையாவது -நீ
கற்கையில் கவனம்
செலுத்திடு-அது சகவாசம் உன்னில்
தனைக் கொடுக்கும்,ஆள சகாயம்
உன்னில் உருத்திடும்.

எம் இதய உளவுரண் அசையாது,

இருண்டதெல்லாம்
மரு அளிக்குமா?நாம்
மனத் திடம் கொண்டால்
ஒளி மறையுமா?
கருக் கொண்டதெல்லாம்
கரு அழிக்குமா?காலன்
விருக் கொண்டாலும் விதை அழியுமா?

ஒருக் கொண்டு ஒப்பாரில்லா
கரிக் கொண்டாலும்-மெருக் கொண்ட
திருக் கோயில் வீதி விலக்குமா?கால
வெள்ளம் அதை கரை ஏற்ற எம்
ஞாலக் கதிரர்கள் ஞாயிறாக அங்கு.

சீலம் சிந்தும் எங்கள்
ஞாயம் அஞ்சும் வழி அறியா
விழி பிதுங்கும்,மொழி ஆக்க
பழி ஏற்கும் பார்த்திபங்கள்
பரமங்களை மிகவும் பாத்திரமாய்
அரண் கொள்ளும் வேளையிது

எத்தனை வேலி இழந்ததாய்
இங்கு எத்தனை பேர் தம் அரிதாரம் களைந்தார்
தம் உத்தமமான உழைப்பென்று
அவர் தரித்த ஆடைகளை எம்மை
அம்மணமாக்கி அவர் நாணாமல்-எம்
நாணங்களை அவர் தம் நாணயமாக்க,
நம்
நாயகர்களின் நாமம் நரித்தார்,


இத்தனை காலம் சூடிய
அடையாளம் அகற்றி தம்
முகத்திற்கு அஞ்சியதான வேசை முகம்
முகர்ந்தார்,பரிபாலனாய் எம்
பார்த்தனை பாரெழுதும் பரிணாமம் களைந்தார்.
பலம் இங்கே பழுவேந்திய போதே தன்
பக்கங்களை கலசமாய் களைந்நெடுத்த
இந்த
இடும்பர்பளாலே எம் இதய உளவுரண் அசையாது,

விந்தகத்தில் இது நியாயம் ஆனாலும் அதுவே நியமம்…

சின்னத்தின் சிகரங்களே-என்றும்
சினங்களாக,ஏங்கும்
வன்மங்களின் வதைப்புக்களே-மனதின்
வாதைகளாக-ஏந்த
அகம் சீந்த இகம் என்ன வேள்வியை எங்கள்
வேலிக்குள் வேயவிடுகின்றது?

உன்னதங்கள் அதன் உரிமங்கள்
கன்னக் கதப்புக்களில் காஞ்சலாக
விஞ்சமுடியாத வேதனைளின்
வெப்பியாரங்கள்,துஞ்சாதா?
சோகம் துகிலாதா? எண்ணங்களிற்கு
எப்போதுமே வெட்கங்களை வேய்வதில்லை,
ஏனோ?

துன்பங்களின் சோபனமாய் வாழ்வரிக்கும்
மன்றங்களாய் எம் மனதரிக்கும்,
யதார்த்த கிண்ணங்களாய் அதுவே
இனி காரமும், காலமாய், கிரமங்களாய்,
கிள்ளி எம் சோலைகளை தமதான
சொப்பன வாழ்விற்காய் நிதமும்,நிதமும்

சின்னத்தனங்களின் சிற்பமாய்,சிரமமாய்
சீதளக் காற்றளைந்த எங்கள் சிம்மாசனங்கள்
ரணங்களை இனியும் சீரணிப்பார் சிறக்க
விவரணங்கள் சூட்டி வீராணங்களை விதைப்பார்.

தாக்கத்திற்கு மறுதாக்கம்,பெளதீகம் பகருகின்றது,
தாக்கமான தாக்கம் மொண்டு தகர்க்காமல் தரமெய்யோம்,
ஊக்கமான உளவுரனுண்டு ஊடறுத்து உருவெய்வோம்.
தீர்க்கமான திடம் கொண்டு தீர்த்து வைப்போம்,
எமதாக்கம்.

சர்வம் எங்கும் சாவிரித்தாலும் எம்,
சாந்தங்களை நாமே சகாயமாக்கவேண்டும்.
வர்மமான வளைகள் உண்டு. கர்மமாய் கடன் முடிப்போம்,
ஓர்மம் எங்கள் உடன் பிறப்பு ஓயாது அலைகளென,
சிந்தாத ரத்தம் சிறப்புறாது.
விந்தகத்தில் இது நியாயம் ஆனாலும் அதுவே நியமம்…

சனி, 3 அக்டோபர், 2009

எள்ளெரிக்கப் போகல்லையோ?

எள்ளெரிக்க போகல்லையோ?நீங்கள்
எள்ளெரிக்கப் போகல்லையோ?
கொள்ளி வைத்து உந்தனது கொற்றங்களை
எரிக்கின்றான்—நீங்கள் எள்ளெரிக்கப் போகல்லையோ?
எள்ளெரிக்கப் போகல்லையோ?

வெள்ள முள்ளி வாய்க்காலில்
வேதனாயால் உன் இனம்
வேண்டாத
கொற்றம் இல்லை அவன் வேதனையை
வேய்க்கவில்லை-நீங்கள் எள்ளெரிக்கப் போகல்லையோ?
எள்ளெரிக்ப் போகல்லையோ?

அங்கு கொற்ற சனியினின்,
சங்கூதல் கேட்கல்லையா,நாங்கள் இங்கழுது
பங்காத பாட்டெடுத்தோம் `பா` கேட்கல்லையா?
வெங்களத்தில் வேதனையில் வெந்த சனம்
கொஞ்சமா?இங்கு வேர்த்தழுது நாம் கோர்த்த
கோரங்கள் கொஞ்சமா?
நீயெடுத்து கல்லதனை கடவுளாய் படைத்துவிட்டு,
அதை காப்பதற்கு காத்திரமாய் கோயிலதை கட்டி விட்டு
அங்கு காப்பதற்கு காவலனும் காக்க வைத்த,
பேதனைகள் முடிவதற்கு
எள்ளெரிக்க போகுமையா,
எள்ளெரிக்க போகுமையா,

இல்லாத ஒன்றதைனை எத்தனை காலம்
காத்து நிற்பாய்?
உன்னை உண்டாக்கி வைத்துவிட்ட
காப்பரணை என்ன செய்வாய்?
நாடது இல்லையென்றால் நானும் கூட இல்லையல்லோ,
காடது காத்திருக்கும் காலம் எல்லாம் என்ன செய்வாய்?
பாடக எங்களை பாடையிலே ஏற்றி வைத்தான் பகைவன்
பாடையிலை ஏற்றி வைத்தான் நீ பாங்காக பாட்டெடுத்து
பள்ளி கொள்ளும் பார்ப்பனக்கு எள்ளெரிக்க ஏக்கம் கொண்டாய்.

ஈழத்து தமிழனிற்கு நாளெல்லாம் சனி பிடிக்க-நீ
நாகரீகமாய் நாளெடுத்து எள்ளெரிப்பாய்,உன் மூத்த குடி
எரித்து வைத்த எள்ளதனால் ஏது சுகம் கண்டு கொண்டாய்?
-உன் வருங்கால
சந்ததிக்கும் நீ எள்ளெரித்து ஏற்றம் வை.
காலமது காலமாய் காவியாக நீ இருந்தாய் அதனால்
கண்டதெல்லாம் என்னவென்று
காவலாய விளக்கு வைப்பாய்?
எள்ளெரித்து வாழ்வதற்கு ஏற்ற பாதை எங்கு உண்டு?
உன் காலெரிக்கும் நோயதற்கு காத்திரமாய்
மருந்து உண்டு,
காலகாலமாய் காவித்திரியும் மூடமான முட
நம்பிக்கைக்கு
எள்ளெரிக்க நியமம் உண்டோ?
பகுத்தறியும் உன் புத்திக்கு என்னதான் பகுப்பாய்வு வைத்தாய்?
வகுத்தாய்ந்து உன் வைப்பகத்தை
வையத்தில் விரித்தெழு, விருத்தம் எழுதும் உன்
வேதனைக்கு விரிவாகும் இந்த பிரபஞ்சத்தின்
விஞ்ஞானத்தின் ஞானம் கோர்,

அவனவன் இன்று சனி கோளதில் சாரளம் திறக்க
சாலைதனை வகுக்கின்றான்,
ஈன தமிழ இன்னமும் ஏனோ?
ஆதி கால ஆய்வகற்றி ஆழமான பாதை அகற்றி
மீதி உள்ள காலத்திற்கும் மிளகெரிக்க
ஐயகோ!எள்ளெரித்து நீ உள்ளெரிந்து வாழுகின்றாய்.
பரிதாபத்திலும் அரிதாரம் பூசும்
இந்த கலி கால நாயகர்களே
கரிகாலந்தான் களம் மீட்கும்,எரிக்கும் உன்
எள்ளு உன் ஏகாந்ததிற்கு கூட எள்ளுப்போடாது.

சந்திரனில் இன்று தண்ணீர் வளம் உண்டாம்,
தன் சடையில் வைத்த உன் சாகசனிடமே இனி
வருங்காலம் வையகம் கொள்ளும்,இது விஞ்ஞானத்தின்
வீரிய காலம் இன்னமும் ஏனோ,
இந்த சைவம் என் அசைவம் சூடும் மூட
நம்பிக்கை வைரவர்களே!

பலமே என்றும் பால் அமைக்கும் உன்
இந்து மத்திலும் இதுதான் பாலர் பாடம்,
வலம் வா`` வரம் தரும் இந்த
வையகம் அறி ஆற்றாமை என்ற மையை ஆற்றில் எறி.
தாயகம் என்ற தாகத்தைஉன் கண்ணில் விரி.
எள்ளை எள்ளி விதைக்கும் நுட்பம் நூண்,இந்த
விதை கூட நாளை உன் இளைய சந்ததிக்கு,
ஒரு விறைப்பான விதை கொள்ளும்.

நீளும் இந்த பதிவாய் நுகம் கொள்ள,

இங்கு பதியம் பகுப்பவைகளால்-எமது
விடியல் ஒன்றும் விளங்கப் போவதில்லைதான்,
ஆயினும்,
உள்ளத்தில்,
உணர்வில்,
ஆதங்கத்தில், எம் மக்களின்,
அவலத்தில் அவர் தாங்கொணா தவிப்பதில்,
என்னால் ஏதும் ஆக்க பூர்வமாய் எதையும்,
எந்த ரீதியிலும் எந்த முகூர்த்தத்தாலும்,
எதையும் ஆற்ற,தேற்ற எவ்வித,
தோற்றமும் தேற்றமிழைக்க முடியவில்லையே!

இந்த ஆர்ப்பனவுகளை,
அதன் அங்கலாய்ப்புக்களை,
அனலூடலான அந்தரிப்புக்களை,
அவையெல்லாம் எம் அகம் எரிக்கும்,
ஆர்ப்புக்களை!
எந்த கலயத்தில் ஒதுக்கி கவசம் சூடுவோம்?

வெந்தணல் புழுவாய்,இவ் வேதினியில் எம்
ஆத்மங்கள் அங்கே அனு தினமும்,
ஆற்றுவாரோ,தேற்றுவாரோ,போற்றுவாரோ.,
யாருமின்றி அவமானங்களின்
உச்சத்தில் அது ஊட்டும் அச்சத்தில்

வாழ்வாதாரம்?
வதைகளாக,பதை,மதைப்புக்களாக,
எந்த,
பத்ம வியூகத்தில் எம் காலக் கடனை
காப்பரணாய் களமிறக்குவோம்?
வேதனை சூழும் வேளத்தில் என்
வேதாகமங்கள்,
ஆழிப்பரப்பின் அக்கறையில் ஒர் நாள்
அடுயோடழிந்த அந்த அனர்த்தங்கள்,
ஆமியின் அக்கிரமத்தால்,அடாவடிகளால்
இன்று
அருவருப்பாய் தினமும்,

ஏதாவது என்றென்ன?
இப்படி எம் ஆற்றாமைகளை!
அனலெடுத்து எழுத்துக்களாய்,
தினம்,
வினையெடுக்க முடியாத என் முடிச்சுக்களை,
எழுத்துக்களில் வெப்பகம் ஊற்றி,
எனதான விடுதலையின் எமக்கான மறுகரையினையும்,
எமதான உறவுகளின் விடுதலையின்,
விகற்பத்தையும் ஏந்த ஒரு நல் வழி இயற்றும்.
நாயகனின் வருகைக்காய்,அந்த தலைவனின்,
தர்மத்திற்காய்,

இந்த எழுத்துக்களை பவுசேற்றும் வரவேற்பில்,
உணர்வுகளின் அந்தரிப்பில் கருத்தரித்த,
இந்த காயப கல்பங்களை காத்திரமாய்.
பதிவேற்றி எம் பாமர,மக்களிற்காய் பதியமிடுகின்றேன்,
வார்த்தைகள் வாழ்க்கையாகாதென்றால்,
பா எதற்கு?,பத்திரம் எதற்கு?
புத்கமாய் புவியில் பூமி சாத்திரம் எதற்கு?

புரியாத பதர்கள் எப்போதும்,
வரிக்கும் வன்மங்களை எங்கும் கண் கொள்ளார்.
வலிக்கும் வார்த்தை தொடுத்து எம் வைகையர்களை
வதம் கொள்ளும் வக்கணையே இவர் தேர்வு,
புற நானூற்றை புரிந்து படியென்றால் இவர்கள்
புறம் கூறும் நாள் நூற்று அறம் கூற வித்தை கொண்டார்.

எமதான சமூகத்தில் அடிப்படை வாழ்வே
வேலி ஊடி, ஒட்டு கேட்டு, ஓதி வாழுதல்-இதில்
எங்கே திருத்தல்கள் திவ்வியம் கொள்ளும்?
மற்றவரை சுட்டி காட்டி,குறை கறைத்து,கரித்து,
எம் சமூகம் வரைந்த வார்ப்புக்கள்,
எதற்கெடுத்தாலும்,
அயலவனை அர்ச்சித்து,அவனின் வீழ்ச்சியில்
எழுச்சி கண்டதுவே இந்த தமிழ் சமூகம்,
இது முற்று முழுதான மூச்சடைக்கும் உண்மை.

மனம் வலிக்கும் உண்மை இதை ஏற்றுக் கொள்ளும்
பக்குவம் இன்றி பலர் இன்றும் புல வாழ்வில்
இது நாளும் பொழுதும் இன்றும் ,இப்போதும்,
எல்லா ஐரோப்பிய,அமெரிக்க கண்டத்திலும்
இதுதான் இன்றும் அவலமாய் ஆர்த்தெடுத்து
ஐயகோ!
அனுபவம்
கண்டத்தில் எல்லாம் கச்சிதமாய்,
காத்திரர் வாழ்வதனை கண்கொள்ளா,
மானிடமும் கனடா முதல் அமெரிக்காவரை,
இதையே இங்கு கோர்த்தெடுக்க கோகிலம் கொண்டு
நீளும் இந்த பதிவாய் நுகம் கொள்ள,
நோத்திரம்,
தோத்திரமாய் தோரணை சூடி!

இராமரிற்கு அணில் ஏதோ,
அதனாலான சிறு அர்ப்பணிப்பு,
ஒப்பிற்காய் இதை ஒற்றவில்லை
ஒடுங்கும் என் இனம்
ஒடுங்கா மனம் வேண்ட
ஓர்மமாய் ஓர் ஓலை வேண்டும்,
கூர்ம அவதாரமோ அன்றி
வர்ம மனுதாரமோ,
எந்த மயிலிறகும் எம் மானம் காக்கா,

பசிக்கு உணவு எப்படியோ?நோய்க்கு
மருந்து அவ்வாறே,அதேபோல்
விடுதலைக்கு கருவி அத்தியாவசியம்.
அதை எதிரி தீர்மானிக்கும் போது,நாம்
அதையை ஆர்த்தெடுத்தல் அவசியமான,
ஆணையாகும் அன்றி விதையற்றுப் போனது.
ஈழசரிதம். இதை ஆழ நினைத்தல் ஆள,எமை
அழ புதைக்கும் ஆரூடம்,ஆக

ஊசியை ஊசியால் தடுத்தல் பக்க
விழைவற்றதாகும்,
இங்கு
ஊசி என்பதை கூர்மமாய் கவனி
வீசி எறிந்து வேளை தகர்க்கும் வேள்விக்கு வேளை குறி.
அஃதின்றேல்
ஆழி தின்றது போக,மீதி ஆமி அழிப்பது போக
இனி மீதி வேள்வி ஏந்தாவிடில்
மேதினியில் நிச்சயமாய் ஏதும்!
நிறைவினிலே நிழல் ஒற்றாது.

வெள்ளி, 2 அக்டோபர், 2009

சிறப்பேந்தட்டும் சிட்டுக்கள் நாளை எம் வானம் சிறகடிக்க!

பரத்தில் என்ன பாரம் உனக்கு-புலத் தமிழா
பகலவன் பாரமேந்திய களமதை
சற்றேனும் நினையடா,பரத்தையர்
கூட்டமொன்று மென்று துப்பிய எங்கள்
கலத்தையும் கலையில் கொள்ளடா,

விலைமாதர் கூட்டமொன்று எங்கள்
விதை அழித்த சுவடு உன் சுவாசத்துடன்
சூழட்டும் அது கனலாக,கலமாக உன்
நெஞ்சகக் கூடதனில்!
வெறும் கூடாகாமல் அவன் விரித்த
கூறுகளை கூற்றுக் கொள்ள குதம் கொள்ளடா,

கரத்தில் நல்ல கலவு மொள்ளு-உன்
சரத்தில் அதன் சாரம் அள்ளு,இகத்தில்
இந்த
ஈன,ஊனம் சுமத்திய சூரர்களை,அவன்
சூதகமது சூல்(ள்) கொட்டிய ரணங்களெல்லாம்
உன் கரங்களாலேயே கறை அகற்ற வேண்டும்,
சுரமது உன் சுத்தமான சுதி கொள்ளட்டும்,விதி
வரைந்தோமென்று கரைந்தவன் களம் கலைக்கட்டும்.

வீழ்ந்தெல்லாம் விளைவதற்கே என்ற-எங்கள்
வேதங்கள் அங்கு வெங்களம் ஏந்த
சூழ்ந்தெல்லாம்,சுரந்தெல்லாம் சுதந்திரத்தின்
சுனைகளென்ற சுரம் சுகிக்கட்டும்,
மாய்ந்த எங்கள் மாமனிதங்களின் மரண
ஓலையின் மேலொரு சுவடு பதித்து.எங்கள்
சுதந்திர சன்மானங்கள் ஆங்கே மதிப்பேந்த
நிரந்திரமான நீதி அங்கு நியமாற்ற,

நிர்மலான அந்த மேகங்களின் மினுக்கில்
மாவீர மனங்கள் ஆதங்கங்கள் அசையும்
கர்மங்கள் உன் கடனாக கயமற்ற கலயமேந்தும்,
வர்மங்கள் வலு ஏந்த வாகை உன் யாகமாகும்,
வலு ஏற்று அன்றி எந்த வலுக்களும் உன்
வயல் மீட்க வகை தகைக்காது.

சிறப்பேந்தட்டும் சிட்டுக்கள் நாளை எம் வானம் சிறகடிக்க!

ஓய்வென்பது உடலிற்கே தவிர உணர்விற்கல்ல,

நீராடும் நினைவெல்லாம்
ஊராடும் எங்கள் உறவாடும்-போராடும்
போது என்ன போகம் கொண்டாயென
தீராத வலியென்னை திசையெல்லாம் திட்டும்,
வேரறுந்த மரம் போல் என் வெற்றுடம்பு,
ஊறு கொட்டி வேறென்ன வலயம் வர
காதறுந்த பட்டமாய் பரவலற்ற வெளியில்?

தேரோடும் தெருவின்று,
தேசக் கோயிலிழந்து,தேமாங்கான
மணியிழந்து,அதன் மரகந்தகத்துடன்,
மகிழ்வெலாம் மதியோடிழந்து,
முகிழ் வெய்தும் முகரம் முறித்து,
பகழ,பகர பாதையிழந்து,பலமிழந்த
பம்பரமாய் பகலிழந்த பாரத்தை-எந்த
பரத்தையவன் பாதை தறித்தானோ-அவன்
பரமறுக்க விறுமமேற்ற விகல்பத்தை
வீரியமாய் விவேகமாய் என்றாவது
விழுதெறிந்து விசாலம் வீற்றும்---

காலக் கனவுகளாய் எங்கள்
களம் அகன்று போகுமா?அன்றி
ஞாலத்தில் வேறற்ற வழியென்று
கோலமது மீண்டும் கோத்திரமாய் கோர்க்குமா?
கீலமது கிளிஞ்சல்களாய் சிறகிழந்து மூசாமல்
வேலமது வீற்றிருக்க வேந்தனது கொற்றமேந்தி
சாலமது சற்றேனும் சலிக்காமல் சரிவகற்றி
வேளமேந்தும் வேளை பொதிய போகம் அகமறுக்க
போர்க் களம் ஏந்தும்,சேந்தல்கள் அலுங்காமல்
ஆர்ப்பரிக்காமல் ஆற்றும் அஞ்சல்கள்—நாளை
விடிவானேந்தும் வினை ஆற்றும்.

பூத்திருக்கும் பூ சிணுங்க
பார்த்திருப்போமா?கரிகாலக் கனவதன் கச்சிதத்தை
போற்றும் போர் வழியகற்ற மனம் விஞ்சுமா?
மாற்றுப் பாதை அதை மாற்றான் திறந்து வைக்கான்,
வீற்றிருந்த வீரியத்தை வினையாற்ற அறைகூவல்
காற்றகலாக கங்குலமாய் கரு வேங்கை களமேந்தும்
காலம் வெகு விரைவேந்தும்,கனவு கலையா நனவாகும்.
வேர்த்த எம் இனமே,
வேங்கை வெங்களம் பாயும் எம்
குருதி குடித்த கடன் மீட்கும்,
காலக் கடன் காத்திரர்கள் தீர்த்து வைப்பார்—அப்போ
மொளனம் காத்த மொளத்திர்கள்,எந்த
மங்கலத்தை நம்மில் மைப்பிப்பார்?

வெறும் எதிர்பார்ப்பல்ல இது
கூறும் கல்லுலகில் இதுவே களம் வேயும்,மேயும்.
பாறையாய் ஆனதாய் பத்திரம் இனி வரையா
பக்குவம் இகம் பரத்தும்,பார்ப்பனர்
சொப்பனங்கள் சொதம்பலாகும்,
செமிப்படைய,
எம் பாடைகளை கிளறுவார்,பார்
இது பரவலாய் எம் பாத்திரம் மொய்யும்,

அண்டை அயல் நாடு நாளை,
பண்டையமாய் இந்த பாகம் மொய்வார்,சீற
சீனன் சீற்றும் சித்திரங்கள்,அங்கத நாட்டின்
அசல் கிளறும்,பாரத பாத்திரம் சிதறும்,
கூற்றுவன் களம் மாறி எங்கள் கொற்றவன்
பாதை மேய்வான்,அது பாங்காய் பகடை கலக்கும்.
கொன்றதெல்லாம் கொற்றமேந்தும்,மென்ற
குன்றமெல்லாம் எங்கள் குதம் கலக்கும்.

இன்றைய
காலை களலள்லும் வேளை வெந்தணல்
அள்ளும்,
ஆக்கம் அமரர் களமாய்,
அரண் கீறும்,
ஆக்கம் அது நாளை ஆர்க்கும்
சிந்தை கொள்ள ரொளத்திரம் பழகு,
தமிழ,
நாளை விடியலின் பாதை உன் வெஞ்சினத்தில்
என்னும் வினைகளை பரம் கொள்.
பாதை உனதாக பக்குவம் கொண்ட
பகலவன் பாதை விரிக்க வினையாற்று.

ஓய்வென்பது உடலிற்கே தவிர உணர்விற்கல்ல!

வலைப்பதிவு காப்பகம்