திங்கள், 28 செப்டம்பர், 2009

உறங்கா கண்மணிகளின் உன்னதத்தை உயிர்த்து.


களங்கமில்லாமல் துலங்கிய புன்னகை இது,
காலமெல்லாம் காத்திடும் காவியப் புன்னகை,
இதயம் இழைந்து வழியும்
ஈடில்லாப் புன்னகை,இமயமாய் இகம் நிறைந்து,
ஊடில்லாத உதயமாய் உலகொல்லாம் உயிர்த்த,
பாடு பொருள் புன்னகை_தலைவனின்
தாரகப் புன்னகை பார்,
பாரே பார்.

கயவனைப் பார்,புலையன் புறம்போக்கு,போக்கிரி
எந்த கல,கலப்பும் இல்லாமல்,
எத்துணை வஞ்சம் கொண்டான்—இல்லை
வஞ்சமல்ல,
அது வாய்க்காது எந்த வளத்திலும்
கொஞ்சம் கூட வலையாது..

என்னே! கோர நெஞ்சம் கொண்டான்_எங்கள்
கோத்திரமெல்லாம் குதறி,மனத்தின் வளத்தில்
சாட்சி இல்லா சாத்திரன் இவன்_
இவனை,
தூற்றுவதில்லை எண்ணம்_என்னவோ?
இந்த
ஒளிப்படம் என்னை எங்கோ எல்லாம்
அலைப்பதால் எழும் சீற்றம் அவ்வளவே,

ஆயினும்!
அடங்க மறுக்கும் மார்க்கம் தேடி நினைவுகள்!
துடித்து,துடித்து,
ம்,ம்,
எந்த பெரு மூச்சை,
எந்த காற்றில் கலக்க,
உறவாடி கெடுப்பது உயர்ந்த ராஜ தந்திரம்
என்றோ எங்கோ கேட்ட,
மனம் விட்டு அகலமறுக்கும்,மறக்க நினைத்தாலும்
மறையாத,
ராஜாங்க வார்த்தை இது,

இந்த சொல்லாடலே எங்கள் களத்தின்
வல்லாடலை வரித்து வைக்க,
என் சொல்ல,
நெஞ்சிற்கு தேவை மனசாட்சி அது அற்றபோதே,
நாமும் ஆகுதி அற்றுப் போனோமா?
அறவிடமுடியாக் கடன்போல் இதுவும்
அறுக்கேவே முடியாத கடனாக போயிடுமா?

இல்லை,
இந்த சென்மத்தில் இந்த துரோகிகளின்
நிழல்கூட நித்திரையில்,
நிலைக்க விடக்கூடாது.
எண்ணங்கள் மட்டும் எவ்வளவு ஆரோக்கியமானவை,அது
நியமாக ஆகக் கூடாதா?
இந்த ஆதங்கம் என் ஆத்மா பிரிவதற்கு முன்
எந்த பிரம்மன்
இவன் பிறப்பறுக்கப் போகின்றானோ?
அன்று ஆத்ம சாந்தி கொள்ளும்,
ஆயிரமாயிரம் ஆயிலியங்கள்,

சிம்ம சொப்பனமாய் இவன் சீவித்தல் தகுமோ?
வன்மம் எனக்கேறுதே,
வாய் கூசுதே,
சின்னத்தனம் சீந்தினால் சிறுக பொறுக்கலாம்_ஆனால்
எங்கள் சித்திரங்களின் நித்திலத்தில்
நீங்காத கறையான இந்த கறையை
எந்த காயகல்பத்தில் கழுகேற்றப் போகின்றோம்?
சொப்பனமே வாழ்வாய்,
சுவையான சுவையெல்லாம்
வெறும் கனவாக,கானலாக
கலனள்ளி வாழ்வோமா?

இல்லை!
களம் காத்த காவியரின் காலம் வெல்ல,
கனல் வீசி விழைப்போமா?எங்கள்
உளம் ஏந்தும்,
உன் மத்தங்கள்,
உரசும் இந்த வலங்களின் வயல்கள் பின்ன,
சிரசேந்தி சீற்றுவோமா?

கலையாத கனவது,
யாராலும் கலைக்க முடியாத,
களம் இது.
விலை போகா வீரியங்கள் விழையும்,
வித்தகம் ஏற்றி இழைக்காமல்_ நாம்
இழைப்போம்,இலங்கும் இந்திரியங்கள்
இமை மூடா இளையங்கள் நாளை எம்
சூரியனின் சூத்திரத்தை
சீரியதாய் சிறப்பேந்த வளம் அள்ளி வளர்ப்போம்,

அந்த அந்தகன் முதல் கொண்டு_எங்கள்,
விந்தகம் பிரித்த விலங்கினமதை வகைத்து,
குந்தகமில்லா குதமதாய் குளிர்வோம்_கந்தக--
சந்தத்தில் சதை,நரம்பதாய் சாய்ந்தவர் மீதோர்,
சத்தியம் சாற்றி சாக்களம் மீட்போம்.
உறங்கா கண்மணிகளின் உன்னதத்தை உயிர்த்து.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

குலையாத கொற்றம் கொலுவேச்சும்.


நீ என்பதும்,
நான் என்பதும்,
உறவு என்பதும்,
உற்றார் என்பதுவும்,-,சூழ
உள்ள சுற்றம் என்பதுவும், மற்றெல்லாம்
உயிர் இனம் என்பதுவும் எவ்வளவு உண்மையோ!.

அந்தளவும் உள்ள சுதந்திரம்,
சுகம், துக்கம் கவலை ஆதரவு,
ஆலிங்கனம்,அரவணைப்பு,தானே தீர்மானிக்கும்,
தகவுகள்,மற்றும் மரபுகள் எல்லாம்,
அங்ஙனம் அகமேந்தும் ஆர்ப்புக்கள் எல்லாம்!

ஏன்?
என்னினம் இழந்தது,
தமிழனாய் பிறந்ததா?
இல்லை நிச்சயமாய் இல்லை,நாம்
அடிமையாக அன்று ஆழுமைக்கு சிக்கியதன் சாரமே தவிர
வேறில்லை,
அடிமையாக,
வாழ்ந்து,வாழ்ந்து சுதந்திரத்தின் சூட்சுமம்_
சுகிக்க சுரணையற்று போனதே அன்று_
வேறில்லை ஏதுக்கள்,
சரித்திரம் இதைத்தான்,
தாக்கமாய் எம் சிரசறைந்து எம்மைப் பார்த்து
ஏளனமாய் உரசுகின்றது,

ஏ!
தமிழ,
சுயமான சிந்தனையை உன்_
அகம் பற்றினால்,
சரித்திரம் சாற்றும் சங்கதி புரிந்து கொள்வாய்,
சுயத்துக்காக எம் முன்னோர்கள்,
எமை ஆழப் புதைத்து,அடிமை விலங்கு பூட்டி
அவாள் மகிழ்ந்த அந்த ஆயிலியத்தை,
அதன் சுரத்தை
அடியொற்றி இன்று ஆரியன் எமதான எல்லாவற்றையும்
வேரோடு பிடுங்கி வெற்றலாக்க.

நாமோ!
இன்றும்
நாச்சியாரின் நாமம் நனைந்து,
எம் ஆரோக்கியமான அதிகாரத்தை,
அடுப்படி விறகாய்,
நிதம் எரித்து எம்மை நாமே?

ஆடிய பாதமும்,பாடிய பாட்டும்
அதன் ஆள வேரதை சட்டென அறுக்காது.
சொறியலில் உள்ள சுகம் போல
அது சொறிவதிலேயே செறிவாய்
ஆதலால் தான் இந்த வாய் எமக்கு!

அடக்கப்படுவதையும்,
அழிக்கப்படுவதையும்,
இன்னமும் கண்டும் காணாததுமாய்,
கோடரிக் காம்பாய் இன்னமும் எம்மில் பலர்,

இந்த இழி நிலை ஏந்தும்,
துரோகிகளை தூரெடுத்து துரத்த இன்னமும்,
வக்கில்லா எம் இனமே!
என்ன செய்வதாய்,
உன்மத்தம் உனக்குள் அகமேந்தும்?

ஆக!
தமிழனாய் இத் தரணியில் தர்மம் அகன்று,
பிறவி எடுத்ததாய் தாழ்வு தரம் கொள்ளும்,
தகம் அறு.
உனக்குள் உறங்கும் ஆளுமையை அரங்கேற்று,
ஒட்டுப் புழுக்களை நன்றாக இனம் காண்,
இன்றை இவ் இழி நிலைக்கு ஒட்டுப் புழுக்களும்
காரணம் என்ற கசப்பை உள் மனக் கொள்,

எமதான,
அன்றைய அரசு கவிழ்ந்தற்கும்,
இன்றைய எம் கொலுக்களெல்லாம்,
பிசிறேந்தி பொதிழிழந்து பொற்பாதம் அகன்றதற்கும்.
நாம் பிறழ்வதற்கும்!
நாளும் பொழுதும் நரம்பேந்தி எம் நாணயங்கள்
நரபலி ஆவதற்கும்,

எனினும்,
விழ,விழ
எழும் வீரியம் எமக்குள் மீண்டும்
விழிதெறியத்தான் போகின்றது,
அதற்கான ஆளுமையான புற ஏது நிலைகள்
இதைத்தான் நாளும்,பொழுதும்
எம் நரம்பேந்துகின்றது.

நாள் கொஞ்சம் ஆகலாம்,
என்றபோதும் இந் நிலைதான்,
கருக் கொள்,
காலம் எமக்கு கனலெடுத்து,
கற்றுக்கொள்ள கை காட்டி_
களம் காட்டும் சேதி இது,

போதும் இனி
போதி மரத்து வேர்கள் அங்கு
மண் பார்த்து,
மடம் கோர்த்து
ஆளுமை கொளமுன்
ஆர்த்தெடுக்கும் அனல் கொள்
இல்லையேல்

கட்டி இருந்த கோவணமும்,
இந்த காடையர்களால்
வெட்டி எறியப்படும்
வேளையே இங்கு நுகம் கொள்ளும்,
விழித்தெழு
விலை போகா மீண்டும் தலைக் கொள்ள
நிலையான எம் நித்திலம் மீட்க,

குலையாத கொற்றம் கொலுவேச்சும்,
நாள் குறிக்க,
மலையாக மனுக்கொள்வோம்.
வலையாத வழு நீக்கி,
விழுதான வீர விற்பனங்கள் வீதியேந்தி,
மருக்களம் மாற்றி எங்கள்
செருக்களம் செதுக்க.

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

விழலாய் விதைந்தே வீரியம் விதையுமா?


அயல் அறியாதா?—இந்த
வயல் செழியாதா?-எந்த
கயல் மறைக்க கயவர் ஈன
செயல் இறைக்க கீறுகின்றார்.

புயல் பூத்த எம் தேசம்-நிதம்
புண்ணியர் ஆடிய பூந்தேசம்-இன்றோ
சித்தமெல்லாம் சிதைந்ததாய்,
ரத்தம் ஈந்த எம் தாயக தேசம்,

விழலாய் விதைந்தே வீரியம் விதையுமா?
குழலாய் நித குரலாய் திரும்பும் திசையெல்லாம்,
வளமாய் எம் வானம் வனைந்த வரம்,
காலக் கிரணத்தில் ஞாலம் இறைந்ததால்-அதன்
ஞாயம் கரைந்து போமா?

மழையாய் வானம் மத,மதத்தாலும்,கோர
இடியாய் இந்த கோலம் கொடி வளைத்தாலும்,
சோர,இனமானம் கோரம் மெளவ்வ நாம்
கொய்யம் குலைந்து,
கொலுவாற்றும் முகம் கரைப்பதா?

புலமே,
என் உறவே,
ஈழ மலரே,
நம் இளைய தலைமுறையே,நாளைய
நம் வாசல் வரையும்,
நல் வித்துக்களே!ஈழ நல்முத்துக்களே
உம் முன்னால் விரிந்து பரந்து,
இன்று பார் கெளவ்வும்.
காலக் கடமை கரம் இணைத்து,
உன்னை கனத்த மனத்துடன்,
கடனாற்ற கட்டளை கூர்த்துள்ளதை,
காலக் கடனாய் கொள்.

விடாக்கண்டனாய் உலக வீதி வா,
விரிந்து விடை கேட்கும் வீதி,
உன் வலம் வேண்டும்.
வைரியின் வைகுலத்தை நீதி கேட்கும்
ஞாயம் ஞாய்க்க,

புல உறவே!
புன்னகை மறந்த தேசத்து பூவை உன்
கையில் எடு,
பார் முழுதும் அதன் பாதை கேள்,
நாளும் பொழுதும்
நம் உறவு கரையும் சோகம் கூறு,
ஆரியன் அழித்த அத்தனை சொத்தனைக்கும் நீதி கேள்,
வையப் பரபபெங்கும் வாதை கூறு,
எம் பாதை கேள்,

நீதி நிமிர்வெய்ய நியாயம் கேட்போம்.
நிச்சயம் எம் பாதை விரிப்போம்.
பாரிலே எம் தேசம் சமைப்போம்.எம்
பாதகம் கரைத்து ஈழ பாகம் மீட்க.

புதன், 23 செப்டம்பர், 2009

மகிந்தா தேசம் மறைத்தே மகிழுதோ?


கலங்கும் காலங்கள்,
உலங்கும் உறவுகள்,
துலங்கும் துயரங்கள்,
மலங்கும் மானிடங்கள்,
விலங்கு ``மா`` மானிதர்கள்.
விபரமற்றதா உலகம்?
விந்தையானதே எங்கள் தளங்கள்.
கலங்கள்.

கலங்கிய காலங்கள்,
காத்திரர் கலைத்தார்.
விலங்கிலும் கீழாய்
உலங்கியவர் உறைந்தார்—இன்றோ!
மலங்கல் எல்லாம்
மறைந்தே போயினதோ?இல்லை
மகிந்தா தேசம் மறைத்தே மகிழுதோ?

விலங்கிலும் கீழாய் என் இனம்—இதை
விளங்கியும் மதியார்—இது என்ன மானிடம்?---பாரில்
பலமில்லை என்றால் எந்த பாதையும் விரியார்-எதை
பரிபாலிக்க இந்த பாரது பகிரும்?

விடியலற்று போனதா?விவேகமற்று வினையாற்ற,
முடியிழந்து போவதா? மூத்த தமிழ்க்கொடி---எந்த
குடியிழந்து போகிலும் கொண்ட கொள்கையதை மாற்றவா-
இத்தனை மாதவங்களை இழந்தது?
இல்லை என்போர்
இணைந்தே எழுக!

இலங்கும் ஈனத்தை அழிப்போம் இணைக,
பொல்லாப் பகையதை போர்க்கொடி ஏந்தியே
இல்லாதொழிப்போம் இறுமாந்து எழுக!
வல்லாளன் வகுத்த வாரியமே வலம் கொள்ள,
சொல்லா துயரம் துலைத்து எழுக,

இணைந்திங்கு ஈர்த்தல் ஈழம் இலங்கும்,
பிணைந்திங்கு தூங்கல் துயரத்தையே வகுக்கும்,
பிணந்தின்னி பேய்களே பேரவலம் சூட்டும்-இதை
உணர்ந்திங்கு உழைத்தல் உபத்திரவம் கலைக்கும்-
களமங்கு திறக்க காத்திரரே எழுக,
கனலான கங்குகளே காத்திரமாய் எழுக.

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

சரிந்த தலம் மீண்டும் சாதிக்க,

மனமெரியும் நினைவுகள்தான்-எனினும்
மரணம் எழுதும் பாவியரை பார்த்திருத்தல் தகுமோ?
இனமெரியும் வேளையிது இங்கு நாம் இயங்கல்
தவிர்த்தல் தகுமோ?

எரிந்த கலம் மொண்டு-எங்கள்
விரிதல்களை வியாபிக்க
சரிந்த தலம் மீண்டும் சாதிக்க,
செருக்க வேண்டிய சேதிகள் பல உண்டு.

உரிந்துதான் உச்சம் கெட்டோம்.ஆயினும்
வரிந்து எங்கள் வயல் மொள்ள
கரிந்ததான கயங்களை காலக் கிரமம் மேவி
பரிந்தெடுத்து விரியல் தைப்போம்.

ஆயிலியங்கள் என்றுமே அகம் அதைக்காது.
போலியானதான பொக்கங்கள் அதை தரம் கொள்ளலாது.
வேலிகள் எங்கள் வெங்களங்கள் வெகுத்தெடுக்க-புல
தாலிகளும் தங்கள் தரம் தைக்க வேண்டும்.

வலி தந்த வரிகளை வயம் வகுத்து,
கலி கட்டின காயங்களை கலம் கலைத்து,
புல புத்திரர்கள் தங்கள் புயம் பூக்க வேண்டும்-ஆங்கு
வலம் வகுக்க வெங்களம் வேர்த்திருக்க புயல்
இங்கிருந்தே மையம் கொள்ள வேண்டும்.

புனலாக,அனலாக எங்கள் அலகெரிக்கும் ஆங்காரத்தை
கனலாக,களமாக்க அங்கத தளமெரிக்க,
வனமானதான எங்கள் வளம் மீட்க, நல் வாகை சூட
கனமான எங்கள் காத்திரர் மீண்டு
நனவாக்க நல்ல நயம் நீட்ட,

கனவாகா களம் அது கண் சிமிட்ட,
வானக வையர்கள்,மாவீரர்கள் வாழ்த்துரைக்க,
சேனை கொள் தமிழ் வீரர் தோள் கொள்ள,புல
கானகங்கள் அங்கே கரம் சுரக்கும்,அன்று

விதி சுமந்த வீணர்களின்
விழி பிதுங்க பழி கலைத்து,பண் இசைக்கும்
வழி விரிக்க விழித்திருப்போம்,
எங்கள் அகம் சுரப்போம்.

சனி, 19 செப்டம்பர், 2009

இதயமிழக்கா,இரவல்சுரக்கா!


கோழி வளர்த்த கிளவிகளாய் சிலர் இங்கு
விடியல்களை விமர்சிக்கின்றனர்,
வாதை இவர் வகுத்தார் என முகுகில்
உபாதை கலந்து குத்தும்
மோடிகள் சிலர்,
அன்று!
பகலவனின் பாதையில் பரிந்துணர்வுகளை பற்றினார்கள்.

புலி தூங்கினால் எலியும் ஏறி விளையாடும்,
வலியறியாது,
வறுமையென்று வக்கணையாய் கதை பகரும்,
துதி பாடி எம் தோட்டங்களையும்,
தேட்டங்களையும்,
தனதான விட்டங்களாய் வனம் பொழியும்
பலி(ரி) காணார்,
சுகம் தேடும் பாவிகள்!
இவர்
கலி கால காத்திரராய்
கனவெய்வார்,

காலம்
என்றும்
கறுப்புக்களை களம் சுமப்பதில்லை என்ற
யதார்த்தம் மொய்யா
பொய்யர்கள்
போதிப்பது சித்தமல்ல,
பித்தம் மென்ற
ஞானம் என்றும் யோகம் சுரக்காது,

இயற்கையின் பல இழப்புக்களே
இன்றைய புது யுக பிரவாகம்.
சரித்திரம் ஒன்றும் குருதி சுரவாமல்,
இந்த
வனப்பெய்தவில்லை
ஒன்றின் இழப்பே
மற்றொன்றின் பிறப்பென்ற
வேதமறியா வெட்டிகளே

இதயமிழக்கா,இரவல்சுரக்கா
சேந்தல்கள் செப்புவது ஏதும் இல்லை-அது
துப்புக் கெட்ட துரியோதனமாகும்,
பகலவனை சுட்டதாக,
என்றும் எந்த சோதிகளும்,
மகிழ்வெய்தவதில்லை-சுய
பரிசோதனைகள் என்றும் சுகமிழக்காது,
சுயம் இறக்க சூட்டிய,
சுதந்திரம் என்றும் தரமிழக்காது.

வியாழன், 17 செப்டம்பர், 2009

ஊழ் வினை ஆற்ற உக்கிரம் கொள்!


இது!
இளைப்பாறும் களமல்ல-இளைய
தலைமுறையே!
இருப்பை இறுக்கமாக்கும் இயங்குதளம்.
நோக்கி நீ நேரெழு,
சேடம் இழுக்கும் எம் சனம்.
சோக்கான வாழ்வுனக்கு எங்ஙனம்?

மாடம்,மாளிகை,கூடம்
பாடம்,மளிகை,பொதிகை
ஏதனம் ஏந்த வைத்து நீ வாழும்
நூதனம் நுகை கலையும்.
தாடகைகள் எம் தாம்பாளத்தில்-நடம் புரியும்
நோய் உன் வீட்டு வாசலில்,
உன் தடைகளை தளம் தாட்டும்-இல்லையேல்

இருப்பிழந்து,இன்னபிற அத்தனையும்
நெருப்பிழந்த எம் இனத்தின் மூச்சு-உன்
அத்தனை முனைப்பையும்
சித்தம் தளர்த்தி சீக்கிரம் நீ சீக்காளியாகும்
தேர்க்களம் அங்கு சிங்களனால் சிரசெறிய
பார்க்களம் பார்க்குது,

நீர்க்கும் உன் சந்த்ததியின்
போர்க்ணம் புலவெடுக்க உன்
வடங்கள் கை கலந்தால்-மீட்சியற்ற
திரட்சியாய்
ஊரிழந்த உறவுகள் நாளை
பேரிழந்து பேய்ப்புலத்தில் அந்தப்புரம்
ஆக்கிரமிக்கும் ஆயிலியம்தான்,அரக்கர் வான்
தொக்கும்.

தோழமைகள் உன்
சோம்பலை கரைக்க
பாழமையா பாக்கேந்தி
ஊழ் வினை ஆற்ற உக்கிரம் கொள்
சத்திரம் சாற்றும் ``சா`` தனைதவிர்த்து

விகண்டெழு வீதி வா
விதி வரையும் விரையர்களின் முகம் கீறு
பாதி வழி பயணித்த,பா தொடரு
நாளை விடியல்கள் உன் முகம் நீவும்
நீ இல்லையெனில் கூட உன் சந்ததி
அதிதியல்ல என்ற ஆதங்கப் பூ சூடும்-இந்த
கானம் அங்கு களிப்பெய்ய உன்
கவசங்களை களைந்தெறிந்து,
ஊனம் உறையும் எம் உற்றாரை மீட்க
ஈனம் ஈய்ந்தவனின் ஈரல் கிழிய,
உக்கிரமாய் குரலேந்து.

மானம் மீட்டாரின் மகிமை பண்ணொழிக்க,
ஓது
உன் ஈழம் விடியும் வரை வரையில்லா,
வரைபுகள் உன் வையகம் கொய்ய,
மரபேந்தி மை தீட்டி பாரக வீதி வா.

உதிரம் பொதித்த போதியரின்,
போலி முகம் காலியாகும் வரை,
கனதியாய் கனலெடு காத்திரமான,
கதிரவனின் காயலெடு உதிக்கும்-
உலகம் உன் வாசலில்.

உடைப்பதை உடைக்க,
வளைப்பதை வளைக்க,
சீரான நோக்கோடு வளையாத,
வல் நெஞ்சம் வருடு.
பார் பாடும் தாலாட்டு உன்-
ஊர்பாடும்,
உற்றமும்,சுற்றமும்,ஏன் உன்-
வம்சமே வயலாற்றும் வா!
இளைப்பாறும் களமல்ல,
இளைய தலைமுறையே!

தோழமையான தோள் கொடு.
பாழான உன் பரம்பலாவது,
சீதளக் காற்றோடு சீரான வாழ் விளக்கேற்றும்,
பூத்தாடும் உன் பூஞ்சிட்டுக்கள்-
புனர் வாழ்வேந்த-அவர்
நீர்த்தாடும் இன்றைய குரலை கூர்த்தாட.

புதன், 16 செப்டம்பர், 2009

திலீபனின் தீபத்தின் மேலொரு சுடரேற்றி!


ஈரக் காலடி இழைந்த புண்ணியன்.
இறுதி வரையும் இலங்கி இணைந்தவன்.
காலக் காவடியில் கரைந்து போகவா_அவன்
காத்திரமாய் ஈழக் கனவில் கனன்றான்?

பூத்திருக்கும் புன்னகை புயம் மொள்ள,
வேர்த்திருக்கா வேதம் அகம் மொவ்வ,
யாத்திருந்த யாகம் யதை இழக்குமா?அதை
யாத்தவன் யாத்திரை ரதம் இழக்குமா?

காலக் கருக்கல்கள் களங்களை கரைக்கலாம்!
கோலம் அது மாற கோத்திரம் கோர்க்கலாம்!
ஞாலக் கலயம் ஞாயம் நனைக்கலாம்_ஞான்ற
ஈழக் கனவதை சிதைக்க முதிருமா?

ஊழிக் காற்றது உலகொழுங்கை உய்க்கலாம்_வேலி
சாய்த்தெம் வேகம் கரைக்கலாம்_சால
விழித்த எங்கள் வேள்வி கதைய காத்திரம் கொள்ளுமா?
வேண்டாம்!
எங்கள் வெய்யனின் வெப்பக காற்றது வேர்க்காது,அதை
வேய்ந்தவன் காலடி மொண்டு எம்-
வேதத்தை வேய,

மாய்ந்த எம் மைந்தர்களின்,
மயானத்தின் மேலொரு மையத்தை மகித்து,
கொய்ய ஈழ காலத்தை எம் கனவின்-
காத்திரத்தை சிரமேற்றி களைப்பகற்றி தீப்பந்தம்,
தீற்றி எங்கள் தேசத்தை நோக்கிய நேர்த்தலை நெய்வோம்.

ஓய்வு என்பதும் சலிப்பு என்பதும்,
சாய்வையே சார்த்தும்,
தோல்வியின் படிமத்தை எங்கள் தோத்திரமாக்கி-ஆன
சூத்திரம் சூட்டும் சுந்தரர்களை கரம் கொள்வோம்.
வெற்றி படிக்கட்டாய் அந்த தோத்திரமே எங்கள்
தோள் சாயும்.

ஈயா அரக்கரின் ஈமக்கடனாற்றும் தேசக் கடன் உண்டு.
தேயா பிறப்பெய்வோம்,சூடும், சூழும் எத்தகை இடரையும்,
அகக் கொள்வோம் அற்ற கடனெல்லாம் கடனாக,
ஈகக்
கடவுளரை மனக் கொள்வோம்-
திலீபனின் தீபத்தின் மேலொரு சுடரேற்றி-
அனலாக,
புலனாகும் பாத்திரம் ஏந்துவோம்.

ஈழக் கனவேந்திய,
சோழர்களின் சேந்தல்களை களமேற்ற,
வீழாக் கரம் கோர்ப்போம்.
விடிவு தேடும் உள்ளம் விசாலிப்பையே யாக்கும்,
சலிப்பெறிவோம்,
உத் வேகம் பூண்டு எம்
உணர்வேற்றி உளவுரண் ஊக்குவோம்.

வலைப்பதிவு காப்பகம்