வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

செஞ்சோலை செங்குருதி, வஞ்சினமாற்ற வகிடெடுக்கும்.


செஞ்சோலையின் செங்குருதிகள்
ஆக்ஞைகள் இழந்த மூன்றாண்டு,
அந்த,
பசுஞ்சோலையில் பஞ்சோலையாய்
பாடைவிரித்தான்,
இது!
இனி வரும் காலங்களின் எச்சரிக்கை-
என்பதான கந்தகக் கலவையை,
காலம் கழித்தே எங்கள் களம் கொண்டோமா?

மாஞ்சோலை கிளிகளாய்,
மகிழ் விரித்த மார்க்கமெல்லாம்
மனிதம் இழந்த`மா` பாவியரால்
பாழான பத்திரமாய் எங்கள்
உத்திரங்கள் உதிரம் உறைய,
சத்திரத்து சதைப்பிண்டங்களாக,என்ன
முத்திரை முதிர்க்க மூர்க்கன் முகிழ் விரித்தான்?

ஆயுள் ஆட்கொண்டாலும்
ஆறாத வடுவல்லாவா.
மாயுள் மனைவிரிந்த ஈனரின் இலக்கு.
பிஞ்சும் காயுமாய் எங்கள் காத்திர
இளையோர் இழைத்த இழப்பு.எந்த
முகாந்திரமுமற்ற மூர்க்கரின் மனைப்பு.

இந்த ஈனத்திற்கே
ஏனென்று கேளா அகிலம்,
ஈனனின் ஒத்திகைக்கு
ஒத்திசைவேற்றதா?
அப்படித்தான் அகிலம்
ஆயிலியம் ஆய்ந்ததோ?
இல்லையெனில் நாம் முள்ளி வாய்க்கால்வரை,
முகமழிய,மூச்சிழக்க,முற்றும்
சுற்றம் சூழ சிதைந்து,
அதன் சிங்காரமெல்லாம்,
அவனின்
சங்காரமாக,சதிப்புனல்சார
ஓங்காரமாய் ஒப்புவமையற்று,,,,

எங்களின்
வாசல்களை வயமிழக்க
நைவேத்தியம் நயந்த அவனி,
தமிழ் வாசலிற்கு எந்த வசந்தத்தை
வைப்பகமாற்றப் போகின்றது?
சிந்திக்கும் சிகமகற்ற சிந்தையகற்றும்,
சந்தைகளை நாம் இந்த விந்தகத்திற்கு-எந்த
விந்தையில் விடையிறுக்கப் போகின்றோம்?

நினைவகலா,
நெகிழ்ச்சிகள் அல்ல நீண்ட
நெடுமூச்சுக்கள் நெட்டுயிர்க்க,
இந்த
படு பாதக படுகொலைகளை
ஆம்,
கிட்லர் கூட களமாக்கா கொலைக்களமது.

நீதி
நிட்டுயிர்க்கும் நீட்சி நிரப்பும்,
பட்டதெல்லாம் பழி பரக்க,
நிரவும் நினைவுகள்
கொலைஞனின் கொடுவாளை
கரம் கைக்கொள்ள கலவும்,கனவும்.
காத்திரங்கள் என்றோ ஓர் நாள்
அல்ல நியமாகும் நனவாக.
இந்த இளையோர் ஈகங்கள்,

சத்தியமாய் இந்த நித்திலத்தில்
நீதி நிர்ணயிக்கும்,
நித்தியம் இது நிச்சயமென்றால்,
எங்கள் கொற்றவனின் மாசற்ற மாசிலங்கள்.
செஞ்சோலை செங்குருதி,
வஞ்சினமாற்ற வகிடெடுக்கும்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

துலங்கும் துயரங்கள் துகிலுரித்து.


ஊர் உலவ உள்ளம் உந்தும்-எங்கள்
வேர் தழுவ வேகம் விழுதேங்கும்!
பார் முழுதும் பரவச பாட்டு-எந்த
நார் நயந்து இந்த லயம் நாடும்?

முன்பென்றால் முந்தி எம் பயணம் முகிழும்-இன்று
எந்த மூப்பெழுதி சந்தி சகாயம் சாரும்?
விழுதெல்லாம் வியர்க்கும் விதி நோக,சிந்தும்
செழிவெல்லாம் சேதம் சேந்த-இதயம்
விழி வியர்க்கும் வீதி பார்க்க.

சிரம் என்றும்,
சுத்தி எந்தன் கொல்லைக்குள் கொசுவம்
சொருகும்,
கரம் இந்த கர்மம் கலவ
இயல்பாக இலங்கும்,
வரம் இந்த வையகம் எமக்களித்த-அவலக்
களிப்பெய்தவா கலயம் மொள்ளும்?.

விடுமுறை?
இந்த வீதியை எங்கள்
உறவுகளுடன் உவகையாய் உறுப்பமைக்க
உள்ளம் உயர்ந்த அந்த உயர்வுகள்,
எல்லாம்,
இனியும் காலக் கனவாகவா கருக்கொள்ளும்?
எந்த
உருவமைத்து எங்கள் வயல்
வளப்போம்?

நாளும்,பொழுதும்
எம்மை ஆளும் சேதிகள்-எந்த
வல்லமையையும்
எங்கள் வசமாக்க உசாவழிக்கவில்லை,
ஆயினும்,
வசமாகும் வல்லமை வயக்க
உள உரணை இன்னமும் உரம் ஊட்டி,
உற்ற வழி ஆக்கும் எங்கள் உருத்திரர்களை,
பற்றுவோம் பாதை பரவ இந்த உபாதை உலர.

சிந்தனைகள் சோர்வளித்தால்-எந்த
வந்தனைகளும் வசம் விரிக்காது.
கற்பனைகளை கன்னா பின்னாவென்று
களம் இறக்கும் இந்த
காதகத்தை கொன்று,
உற்ற வழி அமைக்க_நிற்கும்.
விற்பனர்களை பெற்ற பேறாக்க,
ஒற்றுமையாய் ஓர்மம் ஓங்குவோம்.

குற்றம் கீறும்,
குதர்க்கங்களை முற்றாக மூச்சடைக்க,
ஒற்றும் ஒற்றங்கள் ஓரளவேனும் ஒதுங்க,
சிற்றம்,சுற்றம்,சீராக்க சிந்தனையின்,
சிறப்புக்களை சுரம் சூட்டுவோம்.

எங்களில் உலவும் நக்கீரங்களின் நகல்களை,
நாமாகவே நச்செரிக்க வியக்கும்.
வித்தகங்கள் எம் வாசல் விரிவாகும்.
தமிழ் வாசலிற்கு வரவு நக்கீரங்களல்ல-வித்தகம்
விதைக்கும் உத்தம வசிட்டர்களே.

களம் காத்த எங்கள்,
வீஷ்மர்களை புறம் கூறும்.
பிறைகளை பின் தள்ளி,
ஊகத்தில் உறையும் ஆக்கங்களை அகம் அகற்றி-
தமிழ் வேரெடுக்கும் வேதங்களை வேகமாய்,
விவேகம் விகற்றுவோம்.

ஊர் போக உளம் உந்தும்,
வேர் தழுவ வேகம் விழுந்தோங்கும்,
தேர் இழுக்க இலங்குவோம்.
இயங்குவோம்.

பார் பாடும் தாலாட்டை,
பாங்குடனே பயனேற்ற,எங்கள்
ஊரோடு ஊடாடி பேரோங்க
தூரெடுப்போம்.
துலங்கும் துயரங்கள் துகிலுரித்து.

சனி, 8 ஆகஸ்ட், 2009

விதைக்க எங்கள் விதைகளை விரைகிள்ளி.


விரிசல் சுமக்கும் உள்ளம்,
உணமைகள் சுடும்,
இருந்தாலும் இருளகற்றும் திறன் வேண்டும்.
கரிசல் காட்டு களமாக,
இந்த தளம்,
தளம் மட்டுமா?
எங்கள்
தாளங்கள்,மேளங்கள்,ஏன்?
தமிழ்,
வானங்களும் கூட,

வானர சேனை பூமரங்களிற்குள்-
புகுந்தால்,
வாகை எதுவும்-
பாகை பகற்காது,
உலக மண்டலத்தில் இது
ஒன்றும் புதினமில்லைதான்.

உரசும் எந்த சக்கியும்
ஏணம் அகற்றும்,
பார்த்திபன்-
படை என்றாலும்,அந்த
கார்த்திகேயனே களம் கலந்தாலும்.
விசம் வீசும் எந்த வித்தகனும்,
வீரியம் கொள்வான்,

இப்போது.
இந்த விசம் களத்தில் மட்டுமா கலயம்
சுமந்தது?
இன்றும்,இனியும்,
இனி என்றும்,
முகாந்திரம் முகிழ்த்த முட்கம்பி முகங்கள்,
முக்திக்கு இந்த முகமனே முன் நிற்பான்.
இழைய
எந்த சக்தியும் ஏடம் ஏற்றாது,இது
சத்திய சாரம்.

பாவி,இவன் பார்க்கும் பார்வை எல்லாமே,
ஆவி,இவன் ஆர்க்கும் ஆரத்திலும் அதுதான்,
மேவி,இந்த தளம் நகர்க்கும் தகமை அற்றோம்,
பாவி,இவன் பாளம் பரத்தும் பரனையே பற்றினோம்.
சாவி இவன் திறக்க,இல்லை சாதித்து,
நாம் உறக்க உற்ற ஊற்று
எங்கு உண்டு?
காவி,இனம் காவி,
சாவில் தினம் சாவு,

பிச்சை மட்டும் ஏந்த-
இந்த பிறவிகள் அவன் அதமத்திற்குள்,
ஏன் என்று ஏதும் கேட்கா,
அகிலம் கூட இவனிற்கு நிதிக்கடல் நீட்டும்.
எந்த,
சிந்தையை இகம் இழைக்கின்றது?
இந்த வித்திலத்தின் விபரம் சாகித்தியமாய் என்-
சந்தைக்குள் விரியவில்லை.

அள்ளி,அள்ளி-
அமெரிக்கன் முதல்,
ஐரோப்பிய நாடுகள் வரை,
எந்த வரைமுறைகளுமின்றி,
எந்த சொப்பனத்தை செதுக்க,இந்தியா
முதல்,
இத்தாலி வரை-
வரைபின்றி-
வைப்பகம் நிரப்புகின்றது?

இந்தியா!
புரிகின்றது இதன் புரி,
ஆயின் அகிலத்தின் அந்தம்!
எந்த?
சந்தையை தரை தழுவ
ஸ்ரீலங்காவின் சிரசை
சீதளமாக சிந்து சீட்டுகின்றது?

ஓ,
வியாபாரம்!
விளையுமென்றால் எந்த-
வித்தகத்தையும்,
விழுக்கொள்ளும் வித்தையை,
வியாபித்த வித்தகர்கள்,இனியும்
எங்கள் சாக்காட்டில் தங்கள்
சந்தங்களை சாவகாசமாக.
விதைக்க எங்கள்,
விதைகளை விரைகிள்ளி.

பொறுப்புக்களை பொதியவிட்டால்?.


ஈர விழிகளுடன்,
ஈன மொழிகளுடன்,
ஊன பொழிவெடுக்கும்-மானம்
ஞான வழி வருடுமா?

பார நெஞ்சங்கள்,
பாரா பிரபஞ்சங்கள்,
சீரா சிறப்புக்களை,
ஊராட ஊடுமா?எந்த
நீராட நாம் நித்திலம் நிறைந்தோம்?

சித்திக்கும் சீலமென்று,
எத்திக்கும் ஏரெடுத்து,
முத்திக்கும் முற்றத்தில்-
சித்தமாய் முடிசூடிய-தமிழ்
வித்தகமெல்லாம் விழலாய் விறைந்தனவே.

பத்தியம் பதித்திருக்க,
முத்திலமும் முகிழ்த்திருக்க,
நித்தியர் நிறைத்த நிலம்-நிரலழிந்து,
கூத்தியர் குழாமாக குலங்கள் ஆங்கு,
குரங்கு கை பூமாலையாய்.

சத்தியம் சரிவெய்த,
சாத்தியம் கை கொடுக்க,
மத்தியம் மலிந்தழிக்க,
வெத்திலம் வேரறுக்க,
எத்திலம் ஏற்று முகிழ்வோம்?

பத்தோடு பதினொன்றாய்,
பத்ம நாதங்களும் நலிவெய்த்தும்,
உத்தரம் உருத்தெடுக்கும்,
உதிரங்கள் உறுப்பமைக்க-எந்த
உதரங்களை உறுக்கொற்று-உலக
ஊட்டங்களை உறுப்பொய்வோம்?

தமிழ ஈன தமிழ,என இந்த பரமம் பழிக்க,
உமிழ நீ என்ன உறுப்பமைத்தாய்?
கமழ,ஈழ நேயம் கமழ கமலத்தின்,
செதிலங்களை எந்த செப்பனாற்றில்-நாம்
செப்பனிடுவோம்?

ஆதங்கங்களை ஆரமிட்டு-எந்த
பூதாரங்களில் எம் புனரமைப்பை,
சீதளங்கள் அகற்றி சீரமமைப்பு சீற்ற-உற்ற
வேதாளங்களை வேண்டி நிறைய,
பாதாளங்கள் பரமேற்றும்,
பதிவதனை பரிப்போமா?

இருட்டினில் எங்கள் இழவுகள்,
மருட்டி நிற்கும் மதர்ப்புக்கள்,
விரட்டி விடும் வீரியமற்றோமா?
உருட்டி உதாசிக்கும் உறவெடுப்போமா?
பொறுப்புக்களை பொதியவிட்டால், எந்த
உறுப்புக்களும் பொதிகையாகாது.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

வீழும் இந்த வெந்தகத்தை வேயல்கள் விரித்து.


நினைவழியா நாட்கள்-இனி
நினைவெழுதும் நாட்களா?எந்த
பூக்களை சூட்டி அதன் பூபாளத்தை இசைப்பது?
கனவாகி,கானலாகி,வெறும் கற்பனையாய்-எங்கள்
களம் ஆகாதா?நெஞ்சகத் தளத்தைத்தான்
இங்கு நினைவுகள் தாற்பாரிக்கும் வளத்தை.

புழுதி வீசிய இந்த புலம் பழுது தீர்க்காதா?
மெழுகி அந்த வனத்தை மேம்பாடாக்காதா?தினமும்
உழும் ஈர நெஞ்சகத்தை நீவும் நேயங்கள்.
வீழும் இந்த வெந்தகத்தை வேயல்கள் விரித்து,
வேதினியில் வெம்மை நீக்கி வயல் வரம்பை,
வகுக்க வலம் வார்க்காதா?

இன்னமும் எத்தனை தலைமுறைகள்-இந்த
சலனங்களிற்குள் தங்கள் சாவீடுகளை தனம்,
தார்ப்பது?
புன்னை மரத்து புளகாங்கிதம் கூட இந்த,
தென்னைகளிற்கு இல்லையெனில்-எந்த
சன்னல்களிற்குள் என் சனம் முகம் சாய்ப்பது?

வல்லாளன் வகைத்த வாகை-இந்த,
பொல்லாளனை எம் பூமியில் பொய்கை-
பூட்டச் சொன்னது?
ஆட்கொள்வதற்கு ஆளில்லை என்றால் யாரும்,
மீட்பாரில்லாத மிதவைகள்தான்-ஆதலால்தான்
கோட்பாடொற்றி எங்கள் கோலம் கொற்றோம்.பகையின்
ஊட்பாடகற்றி எங்கள் முற்றம் வீற்றோம்.

ஆனால்!
அத்துமீறி எங்கள் அவயங்களை,
ஆதியோடந்தமாக அநியாயமாக.நாம்
அவலம் சூட்ட அத்தனையையும் சுட்டான்.
அகிலம் அங்கலாய்க்கவோ,இல்லை
அவலங்களையோ எந்த முக்கண்ணாலும்
முகங் கொள்ளவில்லை,ஆயின் நாம்
நேயங்கள் கலைந்த தேசங்கள் கலைந்த,
மேக மூட்டமாய் எந்த வையத்தில் எங்கள்
வைப்பகத்தை வலம் கொள்வோம்?

வீடிழந்து,வீதியிழந்து எங்கள் வலிமையின்-
விதிழியந்து இன்னும் என்ன இழக்க,
இருப்பு இருக்கின்றதென்பதையும் இழந்து.
ஓ வானகமே,
உன் அகன்ற விரிசல்தான்,
எங்கள் வாழ்வகமென்றால்—எங்கள்
வனப்புக்ள் எல்லாம் ஏதிலியின் வாசமா?

காட்டாற்றின் கனதிகள் எந்த கானகத்தை,
நெட்டாற்றும்?ஊற்ற உற்ற போராட்டம் பொழுது,
கரைக்கவா நாம் போராயுதம் போகித்தோம்?இல்லை
என்றாகின் எந்த முகாந்திரத்தை இனி-
மொய்யெழுதப் போகின்றோம்?
உரிமையின் உரசலிழந்த உப்பாற்று தென்றலிலா?
எங்கள் தேகம் இனி காலமகற்றும்?
கரிமைகளின் காத்திரங்கள் எங்கள் பரிணாமத்தை,
புரியகற்றி பூப்பெய்துமா?சரியாகின் எந்த
சதிர்க்களம் தமிழின் சரியாசனத்தை சன்மானமாக்கும்?

துன் மார்க்கனின்!
மார்க்கத்தில் எந்த மாமனித மார்க்கம் மையல் மகிழ்க்கும்?
சன்மார்க்கமாய் துய்க்க சுதந்திரம் ஒன்றும்,
சுக்குத் தண்ணியில்லை.அது வைப்பகம் வேதிக்கும்.
வைடூரியம் அதை எந்த வல்லாளனும் சும்மா
வகிடு பிரித்து எங்கள் வயல் வகுக்கான்,

அதுவும் பேரினவாதத்தின் அட்டைப் பிரிவில் கூட-
அடக்கமாக்கப்பட்ட ஆயிலியம்-ஆதலால்
எதுவும் எங்கள் வசமாக்க ஆயுத போராட்டம் தவிர,
போதிக்க வேறு மார்க்கம் ஏதும் அறவே இல்லை.
சத்தியமான இந்த நித்தியம்.
வேறு சாலையாக விரைவில் எம் சாதகம் தரிக்கும்.
இதை பாலையாக எண்ணும் பாதகத்தை,
பரணெறிந்து பக்குவாய் பகரும்-
உகரம் வித்தகமாய்
அகரம் ஆய்க்கும்,இன்றோ அல்லது
நாளையோ?

இந்த நாயம் கோர்க்கும் நாயகர்கள் நயமாய்
நாளை எம் நாண் ஏற்றுவார்.வேளை வேற்று
வான் வயல் வகுப்பார்.
நெஞ்சகம் நேற்ற நோவகற்ற
வஞ்சகம் பூத்த வரம்பகற்ற தஞ்சகம் தகற்றி
விஞ்சும் விறுபங்களை விதைப்பாக்க,
துஞ்சாத பிஞ்சகங்கள் மஞ்சமகற்றும்
ஆரிய வெற்றியின் அகம் அறைந்து
வீரியம் விளம்பலகற்றி சூரியம் சூட்டும்.

விழ,விழ எழுந்த அலையாய்,
தொழுவகற்றி விழல்கள் விறைக்க,
பழுதில்லா பன்முகங்கள் பார் ஏற்ற,
விழுதெறிந்த மௌனங்கள்---
செழிப்பேற்றும் சேந்தனின் பழுதகற்றி,
விழிப்பேற்றும் வியாபகங்கள் வியாசம்-
வரைய.

வெறும் வெற்றல்கள் வேயாத,
பொறுப்புக்ளை புலம் பலம் பௌவ்வும்.
வெறிச்சோடிய வானகம் ஊறும்.
வேதங்கள் ஒப்புவமையகற்றி மீதங்கள்-
பாதங்கள் பரப்பும் வையக வையல்களாக்கி.
பூப்பரவும் புனிதம் புன் மார்க்கம் புலத்தும்.

நினைவெழுதும் நாட்களன்று.
நினைவழியா நாட்கள் நன்னும்.
தினைவெடுத்து அந்த திரவியர்கள்,
வினை முடிக்க வினையாற்றும் திடம் தீற்றும்.

நினைவு நீட்டும் நீட்சியல்ல--- நியம் நியமிக்கும் நித்தலம்.


ஆகாது ஆகாது அழுதாலும் ஆகாது.
போகாது போகாது பொழுதானாலும் போகாது,
அழுகாது அழுகாது ஆரியனின் அகமோ அழுகாது.
மொழுகாக,
எம் மேனிதான் மொலிந்தாலும்.
தொழுதவனை தோள் தட்டும்
தோழமையும் தொழுவாது.

புலையான புன் சிலிர்ப்பு,
வலுவாக வாசம் இல்லை,
தொலைந்ததான எம் சொந்தம்.
தோள் கொடுக்கா தோழமைகள்.
ஏழ்மைகளின் ஏணியிலே ஏற்றம்-
என்ன நிறைந்திருக்கும்?

வலையின் வசத்தில்,
வக்கணையற்ற வரத்தில்,
குலைந்து போன குதர்ப்பில்,
வலையலென்ன வகுக்கும்?வாரும்
கொலையரல்லோ கொழிப்பார்.

தலையகன்ற உடப்புக்களும்
தாளுமை தகன்ற தவிப்புக்களும்,
கலையகன்ற காத்திரங்களும்,
விலை போன விசமிகளும்,
கொலுவிருக்கும் கொற்றத்தில்-எந்த
வலுவிப்போ வாசல் வரையும்?

கணையற்ற காதங்கள்-எங்கள்
வினையறுத்த காதகர்கள்—சொந்த
துணையிருப்பையும் தொலைக்க வைத்த பாவியர்கள்
குடி கொண்ட குற்றாலத்தில்-என்ன
படியிருக்கும்?
எம் பாரமகற்றி பாலமமைக்க-இதில்
ஈழமென்ற இலட்சியம் இரைப்பதை ஈர்க்க.

எனினும்,
எந்த ஒரு சோகங்களும்,
அது வகுத்த வார்ப்புகளே,
அதன்-
வலிமையின் வகையறுக்க வார்ப்பு வரையும்-இந்த
வன்மம் எம் பாதையின் பரப்பை,
பரிபாணத்தை-
நோக்கி,
நேர்த்தலை,
நோத்ததை தேற்ற ஒரு
பூத்தலை பூடகமாய் இப் புவியில்,

நீத்தலகற்றி நிச்சயம் நீட்சிக்கும்.
நினைவு நீட்டும் நீட்சியல்ல நியம் நியமிக்கும் நித்தலம்.

திங்கள், 3 ஆகஸ்ட், 2009

சிரிப்பாய் நீ விரிப்பாய் இல்லை இருப்பாய் என்னை எரிப்பாய்.


சிருங்கார சிரிப்பினிலே
ரீங்கார அசைவிருக்கும்
நீங்காத உறவிருக்கும்-வண்ணம்
தூங்காத சுகம் இருக்கும்.
சின்னப்பூவே எந்தன் உயிரே-
சீண்டும் எந்தன் உயிர் பரப்பே.

அன்று இருந்தாய் அகம்
நிறைந்திருந்தாய்,
இன்று எங்கு சென்றாய்?
உறவில் விரிசல் கொண்டாய்,
சென்றிடும் நாளிலிலே என்ன சேதியை நீ இறைத்தாய்?
கனவா?கானலா?
உறவே விரிவா?
உணர்வே பிரிவா?

தினம் வந்து
காதில் சொல்லும்,
உந்தன் சிந்து
காயம் அள்ளும்-சின்னப்பூவே
எந்தன் வண்ணப்பூவே,
என்று,
என்றுன்னை காணுவேன்-எந்தன்
ஏக்கத்தை என்னென்று கூறுவேன்,
நீ வரும் வாசலை பார்த்திருப்பேன்-என்றும்
விழி மூடாமல் இமைகளால் பூத்திருப்பேன்,
இது
கனவாய்,
வெறும் கனலாய்
ஆகாமலே என்னை ஆகாசிப்பாய்,
எந்தன் நெஞ்சத்தின் ஆவலை ஆத்திருப்பாய்,

விழி சிகப்பாய்,
வழி கருப்பாய்
மொழி பேசும் இந்த மோகனத்தை-நீ
வரும் வாசல் கலைத்திருக்கும்-உந்தன்
காந்தழிதழ் அதை கரைத்திருக்கும்-காலம்
காயுமோ?காற்றது வீசுமோ?

பனிப்பூவே,கனிப்பாயா?இதம் இழைய
நீ வருவாயா?-
நீ வரும் நாளினை பாத்திருந்தேன்.
நிம்மதி யாவையும் இழந்திருந்தேன்,
யாழது இனிமையை இழந்திடுமா?
யாகங்கள் யாவும் யதித்திடுமா?
சின்னப் பூவே சிருங்காரமே.எந்தன்
உறவின் விழும் உயிரே.

காத்திருப்பில் எந்தன் காலம் செல்லும்-உந்தன்
பூத்திருப்பில் அவை புன்னகைக்கும்-உள்ளம்
வேர்த்திருக்கும்.
இந்த வேதினியில்-என்ன
வேரிருக்கும்
உன்னை
இழந்தால்,
உள்ளம் நெகிழ்ந்திருந்தால்
வளம் அத்தைனையும்,
வனம் இழந்து விடும்-நீ
வரும் நாளிலே
நிறைவிருக்கும்,
உன் வரவெல்லையில்
உறவிருக்கும்,
இந்த உயிரில்
உள்ள உணர்வில்.
உருகும்
உயிரே
உயிரே உயிரே.
சிரிப்பாய் நீ விரிப்பாய், இல்லை
இருப்பாய் என்னை எரிப்பாய்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

வல்லான வலி நீக்கி வளமாகும் வகை யாப்போம்.



உபத்திரம் உத்திரம் உயர்த்தா!வலிச்
சித்திரம் சிந்தனை சீந்தா!
எத்திரை ஏற்பினும் முத்திரை முதிரோம்.
பத்தரை பதித்தே பாரதில் பதிப்போம்.
யுக்தியை யுகிப்போம் யாத்திரை யதிப்போம்.
எத்திசை ஏறினும் சிங்களன் முகத்திரை முறிப்போம்..

ஊக்கத்தை உதைப்பான்,
அதன் தாக்கத்தை தளையான்,
நீக்கத்தை நிறைப்பான்.
ஆயின் நியங்களை நிதிக்கான்,
இல்லாத ஒன்றை இறுமாப்பாய் இழைக்க
வல்லாத
வகைப்பை வகையாக பதிக்க
பொல்லாத பொய்கையை பொறுப்பற்று பற்றும்
நில்லாத நிறைவே இல்லாமல் போமோ?

காலச் சுழற்சியின் காத்திரம் கதைக்கும்.
சீலச் சிறப்பது சிகப்பாய் சிறக்கும்.
ஊழ உறுப்பை உறுப்பாய் உரைக்கும்,எனினும்
ஈழ இழைவது இலங்கியே இயக்கும்.

அதன் காத்திரம் காப்புவோம்-அந்த
வேயலை ஒற்றி எங்கள் நித்திலம் நியக்க
புதன் பூப்பிக்க புத்துயிர் புனைப்போம்
அதன் உத்திரம் உயிர்க்க.

உறுதியின் உயிர்ப்பில்
பொறுதியை பொருத்தி
பெறுமதி பெறுவோம் உரமாய் உழைப்போம்,
இழப்பதை இழைத்து இயங்கலை இயப்போம்.

தொல்லை தொழாத இல்லாத பொழுதில்லை
சொல்லாத சோகம் செரிக்க, ஈழம்
இலங்காமல் இனிமையில்லை
வல்லான வலி நீக்கி வளமாகும் வகை யாப்போம்.

வல்லான வலி நீக்கி வளமாகும் வகை யாப்போம்.


உபத்திரம் உத்திரம் உயர்த்தா!வலிச்
சித்திரம் சிந்தனை சீந்தா!
எத்திரை ஏற்பினும் முத்திரை முதிரோம்.
பத்தரை பதித்தே பாரதில் பதிப்போம்.
யுக்தியை யுகிப்போம் யாத்திரை யதிப்போம்.
எத்திசை ஏறினும் சிங்களன் முகத்திரை முறிப்போம்..

ஊக்கத்தை உதைப்பான்,
அதன் தாக்கத்தை தளையான்,
நீக்கத்தை நிறைப்பான்.
ஆயின் நியங்களை நிதிக்கான்,
இல்லாத ஒன்றை இறுமாப்பாய் இழைக்க,
வல்லாத!
வகைப்பை வகையாக பதிக்க,
பொல்லாத பொய்கையை பொறுப்பற்று பற்றும்.
நில்லாத நிறைவே இல்லாமல் போமோ?

காலச் சுழற்சியின் காத்திரம் கதைக்கும்.
சீலச் சிறப்பது சிகப்பாய் சிறக்கும்.
ஊழ உறுப்பை உறுப்பாய் உரைக்கும்,

எனினும்
ஈழ இழைவது இலங்கியே இயக்கும்.

அதன் காத்திரம் காப்வோம்-அந்த
வேயலை ஒற்றி எங்கள் நித்திலம் நியக்க,
புதன் பூப்பிக்க புத்துயிர் புனைப்போம்.
அதன் உத்திரம் உயிர்க்க.

உறுதியின் உயிர்ப்பில்,
பொறுதியை பொருத்தி,
பெறுமதி பெறுவோம். உரமாய் உழைப்போம்,
இழப்பதை இழைத்து, இயங்கலை இயப்போம்.

தொல்லை தொழாமல்,
இல்லாத பொழுதில்லை.
சொல்லாத சோகம் செரிக்க, ஈழம்
இலங்காமல் இனிமையில்லை.
வல்லான வலி நீக்கி வளமாகும்
வகை யாப்போம்.

பற்றுரைக்கும் பரமர்கள் பாதை விரியார்.


விளை நிலத்துப் பயிர்கள்.
களைகளால் களையிழந்த,
விளை நிலம்-என்று
புரையிழந்து விழைத்தேங்கும்?

காலத்தால் பயிர் செய் புன் நிலம்.
ஞாலத்தால் சபிக்கப்பட்டதா?
இல்லை!
எதற்கும் ஞாபிப்பற்ற எம் சில அயோக்கியர்களால்,
அறம் அதமமாக்க,
அழிக்கப்பட்டது.

சற்றே சிந்தனையை நிதானமாக ஞாயித்தால்,
ஞாயம் ஞாய்க்கும் நலிவுகளின் நர்த்தனம்.
விற்பனங்கள்,விவேகமற்ற வீண் விவாதங்கள்,
அடியோடொற்றும் அர்த்தமற்ற பழிகள்,இன்னமும் நெருங்க
வினைசாற்றும் சுய நலங்கள்,

ஆம்!
எங்கள் ஆதி முதல்-
முள்ளி வாய்க்கால்வரை?
வகுத்தெடுக்க வசதி சதியாக்கியது.
சுத்த
சுய நலங்களின் சீண்டலால் சூத்திரம்,
சூட்டியது
அத்தனையையும்.

சில வல்லூறுகளின் தொலை நோக்கற்ற,
ஒரு குறுகிய வட்டத்திற்குள்-
வகுந்தெடுத்து,
வையப் பரப்பில் வகை கனைத்த
ஒப்பியாரங்கள்,என்றும்-
எங்களிற்குள்
நன்றாக நயனங்கள் நாட்டும்.

பொது நலம் சீண்டாத சில சிற்றம்பலங்கள்?
கொற்றவன்-
கொலு விழந்தான்-மற்றதெல்லாம்
மறமிழந்து-இன்று
வெற்றிடங்களின் வேதினியில் சுற்றம் சூழும்
துயர் துய்க்கமால்-எதற்கும்
வக்கற்ற வைரியங்களின்,
வால் பின்னி எங்கள் தோல் போர்த்தும்.
விடியல்கள் இனி வெந்து.

பலமிழந்த
எங்கள் பராக்கிரமர்கள் வலம் வரும் வரை.
பற்றுரைக்கும் பரமர்கள் பாதை விரியார்.

சனி, 1 ஆகஸ்ட், 2009

விடியலற்று போனதை எந்த விந்தில் வினையாற்ற???


ஊற்றெடுக்கும்
ஊர் நினைவு-என்னை
பெற்றெடுத்த முற்ற நிலவு
நித்தம் என் உள்ளம் நைக்கும்-இந்த
நினைவுகளை கொல்லல் தகுமோ?

புலத்து வாழ்வில் என்ன புதுமை கொண்டோம்?-எம்
நிலத்து வாழ்வை நித்தம் ஒழித்து,என்
நெஞ்சை சுட்டு நீதி கேட்டு-அதன்
மஞ்சம் மரித்து விஞ்சும் மகிழ்வு.
நிலையா?
இல்லை நிகழ்வு.
தற்காலிகமான இந்த அகல்வு நித்தியமா?
நிச்சயமாய்.
அனிச்சையாகும் இந்த அகல்வு முகூர்த்தம் குறிக்கும்.

இது காலக் கோளில் நான் தரித்த தரிப்பு,
வேறில்லை,
என் நிலத்து வாழ்வை நித்தியம் கொள-எம்
நிலத்து மைந்தர் நீதி கேட்டு,
கோடிட்ட போர்ப் புலத்தில் நான்
வயலறுத்து புலர்ந்த வாழ்வு.

வைரியை என் வாகையர்கள்
வரையறுத்து,
நெருப்பெரிந்த என் வயலில்
வசந்தம் சந்தம் சாய
உருப்பெடுத்த என் ஒப்பற்ற
உத்தமர்களின்,
குருதியில் இங்கு செங்கம்பள வாழ்வு,
இந்த போலியான புல வாழ்வு.

நீதி இதுவா?
என் நேயம் இதுவா?
பொய்யின் பொய்கையிலே
பூத்திட்ட புனைகள் இவை,என்
மண்ணில் என் மறவர்களின் செங்குருதியின்
ஆற்றில் நான்
மனம் அரித்து மனசாட்சியை
வசதி கருதி கருக்கி,

ஐயகோ!
ஒரு இஞ்சி மண்ணிற்காய் என் அயலவனுடன்
ஆக்கிரோசித்த அற்ற ஆர்ப்புக்கள்,
என்
தாய் மண்ணை ஆரியன் ஆக்கிரமிக்க என்
நாட்டை விட்டு நான் நகர்ந்த
நர்த்தனம்,
உண்மையில்,
சத்தியத்தில் ஓர்
தரிப்பிருந்தால்,நானென்ன
நாமெல்லாம் நகர பிதாக்களை
நட்டாற்றில் கைவிட்ட கபோதிகள்,

இந்த இலட்சணத்தில் இனிமை கேட்கும்
இரக்கமற்ற இராட்சதகர்கள்,
வலிக்கும்
உண்மைகள்
வாரிசிற்காய்
எம்
வலம் ஈடு வைத்த வைரிகள்.

ஆம்
இன்றும், என்றும்
புலம் பெயர் தமிழர் நாம்
வெறும்
புரோகிதர்கள்,

அர்த்தமற்ற ஆயிலியத்தை
அறமென ஆகிக்கும் அயோக்கியர்கள்,
உற்ற துணை கொடா கயவர்கள்
தலைவனின் தர்மப் போரிற்கு
தாங்கும் தூண் தொடா தொலையர்கள்.

வீண் வாதம்
விதண்டாத வாதம்
வியப்பும் வீரியர்கள்---சொந்த
நாட்டிற்காக எந்த துரும்பையும் அசைக்கா
திராவிடரென திமிர் திரட்டும் அதைரியர்கள்,

ஆளுமையின் ஆலிங்கனத்தை
ஆதங்கமாய் ஆர்த்தெடுத்து,
தூளுமை துபிக்காத தூபிர்ரகள்,வெறும்
திண்ணைப் பேச்சு திரவியர்கள்,--நன்
நாட்டின்
நாளினிற்கு நாட் குறிக்க
நயம் ஞாயிக்கா
ஞாயிறுகள்,

திங்கள் நாமென செப்பும் செவிலியர்கள்-
எத்துணை
அதமம் இருந்தால்
இந்த
வையகத்தில் நாமும்
ஓர்
நாதியர்கள் என நாதர்சிக்கும்
நயம் இழைத்தோம்?

ஏ!
துரும்பிலும்
எளிய
புலத் தமிழ நீ நலிந்தென்ன?
நலம் வாழ்ந்தென்ன?
நாட்டிற்கும் நாம் குடி கொண்ட வீட்டிற்கும்,
விளக்கெரிக்கா வினையற்ற வித்தகனே?
விறும மகன்று வீரியமான
வினையாற்ற இனியென்ன விதைக்கப் போகின்றாய்?

எத்துணை
துணை இழந்தாய்?
உன் கொற்றத்து குடியிழந்தாயே,
உன் உற்றம்,சுற்றம்,முற்றத்து மல்லிகையின்
வாசம் வகை சூட்டிய அத்தனை
அகத்தாரையும்,
ஆதியோடந்தமாகவே?நீ
வீதி ஓடு விந்தகம் ஏற்ற உன்
விடியலற்று போனதை எந்த விந்தில் வினையாற்ற???

வியப்பும் வியக்க விதையை விதைப்போம்.


எல்லாமே இங்கு அற்றதாய் அகமழும்
எம் ஆற்றாமை மைந்தர்களே!
சுயமான புத்தி ஒன்றை வியப்பும் வியக்க விதையை விதைப்போம்.
சுதாகரித்து-
சிந்தித்தால்,சிந்தும் பொய் முகம் போலி என்பதை
போர்வை அகற்றி கோர்ப்பாய்,
அதன் கோரமுகத்தை ஆரியனின்,பார்ப்பனனின்
பாவி முகத்தை.

எங்கள் மாமனித போர் முகத்தை,
அது விழுதெறிய விடாமல் அத்தனையையும்,
அங்கம் பிளந்து அடியோடழிக்க அவன் போடும்,
அத்திவாரத்தின் ஆழ் குழியதை.

மீள் குடியேற்றம் என்பது,
எங்களை மீளக் குடியேற விடாமல் விழுதழிப்பதாகும்.
வேறொன்றும் அங்கு வினையாற்றாது.
தமிழனை,
ஆழவேரோடும் அகப்பதை,அவனியில் அவன்
தாள தகமை தகைக்க
சிங்களன் சிலாக்கும் சீலாக்கியம் அது.
ஆவனவற்றை அவன் அற்புதமாகவே
அவன் வரையில் வரையறுத்து வாகிக்கின்றான்.

நாம்.
அவனின் போலிப் பொய்புனைகளில்,
எம் மெய் இழந்து,அங்கம் பதற,
வேதினியில் வேதனைகளையே-
வேதமாக,

ஏன்---
இந்த அவலம்?
உடைப்பதை, உடைக்காமல் உளி,
சிலை சீற்றாது,
வளைப்பதை வளைக்காமல்,
வகுப்பது வகையாது.
எரிப்பதை எரிக்காமல்,கொதிப்பதை
கோலம் கோர்க்க முடியாது.
சிரிப்பது சிறக்கின் சுமையில்லா-
சுயம் வேண்டும்.
சிறப்பது சிரிக்கின் சுயமில்லா-
சுமை வேண்டும்.

சுயத்தை சுருக்க சுமையும் சுரையும்,
இலக்கை இயக்க இமையும் இணையும்.
கயத்தை கலைத்து கடமையை கடைப்போம்,
வியப்பும் வியக்க விதையை விதைப்போம்.

அழுகப் பிறந்தவனில்லை
தமிழன் ஆழப் பிறழ்ந்தவன்.
இந்த நிலை அழித்து
அழகாய் பிறந்தவன்,ஈழத் தமிழன்
ஆழவும்,
ஆளவும் அவதரித்தான்,என
அவனியில் அவன் அருகதையை,
ஆற்றுமையால் ஆற்றுவோம்.

இறவா இயங்கலது இலங்கும் இலட்சணையாய்.


சுத்தி,சுத்தி சுப்பரின் கொல்லைக்குள்
பத்தி,பத்தி தப்பவரின் தொல்லைக்குள்,
மெத்தி,மொத்தி தமிழன் தர்மத்தின் வற்றலில்,
புத்தி,அவன் பொத்தி,
புதைப்பானே எங்கள் சக்தி.

எந்தக் காரணங்களையும் ஏந்துவான்
அவன் இனவழிப்புக்கே வழி கோலுவான்,
தந்திரி மலையில் தாக்குதல் என்றான்-தன்
தந்திரத்தால் தமிழரை தாக்குகின்றான்,

குருவியின் கூதலை குறித்ததென்றான் ,தன்
ஒட்டு தகவலால் ஒற்றதென்றான்-இன்னும்
எத்தனை அகவலை ஆக்குவான்?-நோக்கம்
எங்கள் இனம் அழிக்கவே கதை யாக்குவான்.

வல்ல புலிகளின் வலை அமைப்பின்,
வாகிப்பாற்றலை வளைத்த தென்றான்,சில
வதந்தி கதை
களை
கலையவிட்டு-பல
மக்களை இவன் சிதைத்து நின்றான்-இன்னும்
வக்கணையாய் வகை வகுத்து நின்று-தமிழர்
மனதில் பொக்கணை பொதிய விழைவான்.இதை
எத்தனை பேர்தான் ஏற்று நிற்பார்,எங்கள்
வித்தக மைந்தர்களின் விதியை விறைக்க வைப்பான்,

முள்ளி வாய்க்கலில் முற்றாய் பலி புலிகளென்றான்-பின்
வெள்ளி முளைத்தது போல் எத்தனை புலிகள் விழைந்தார்-இதை
அத்தனையும் உண்மை என்றுரைக்க நாம் வித்தகம்
புரியா விரையரல்ல,

உண்மையின் ஊக்கை உருத்தெறிக்கும்-இவன்
உற்ற எங்கள் இனமழிக்க அத்தனை வழிகளையும்.
விறைப்பாய் விகல்பமாய் திறந்து வைத்து-
தமிழர் உதிரம் உறைய உருவழிப்பான்.
நெருப்பெரிந்து எங்கள் ஊனவழிக்கே
உறவுரிக்கும்.
நல்ல உள்ளம் மொண்டதாய் உரு ஊக்கும்.

கண்காட்சி ஜீவனாய் கருக வைத்து தமிழர்
காத்திரம் யாவையும் உருக வைத்து,
ஊண்!ஊனம்
ஊட்சி உயர்த்துமா?
உலகம்,
உலர தமிழ-
விழுதனை அழிப்பார் காயம் நிதர்சனம் பிளக்கும்,
பழுதற்ற பதாகைகள் விழி திறக்கும் வழி அவர் இழைக்க.
பழி---
பார்த்திபன் பாதையை பார் திறக்க வைக்கும்.

சத்திய வேட்கையின் வித்துக்கள் விழி திறக்கும்-அது
உத்தம உதயத்தை உதிக்க உறக்கும்.நித்திய
நேயங்கள் நொய்ப்பதில்லை வேதினியில் ஆங்கு
மத்திமம் மையித்து மடிவதில்லை,

எத்திசை ஏற்கிலும் எழில் இழவோம்-எம்
வித்திசை வேய்க்கவே பொழில் புனைப்போம்,எங்கும்
வேர் திசை மாறி புழல்வதில்லை அது நேர் திசை
நிணைய நீர்ப்பதில்லை,
பகலவன் பார் திசை
மாறிடுமா? நாம் பாமரர் ஆகியே பலி போகவோ?

மாறிடும் மார்க்கங்கள் நாம் மதிப்போம்-எங்கள்
போரிடும் போக்கினையே போற்றி நிற்போம்,நீரது
பாதை நிர்ணயிக்கும்.
தமிழ வேரது தரம்
தக்க வைக்கும் தமிழீழ வேதமதை.

வலைப்பதிவு காப்பகம்